அம்மாவின் சூளுரை சுலபமாக.........!

நாடளுமன்ற தொகுதி நாற்பதையும்  நாம்  வெல்லுவோம் என்று அண்ணா  திராவிட முனேற்ற கழகத்தினுடைய பொதுசெயலாளர் அம்மா அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.தேர்தல் கூட்டணியில் தே .மு.தி.க. வை அம்மா தக்கவைத்து கொள்வது ஒன்றுதான் அவரின் இந்த சூளுரைக்கு வலு சேர்க்கும்.அவர் நினைத்ததை நிச்சயமாக முடிபதற்கு வழி செய்யும்.யார் விலகினாலும் விவாதித்தலும் தே .மு.தி.க. கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் என்ற தனிமனிதனுக்கு குறுப்பிட்ட சதவிகித வாக்குகள் இருக்கின்றன.மக்களவை தேர்தலில் இந்த மனிதனின் பங்கு நிச்சயமாக வெற்றி பாதையை திசை திருப்ப சிறிய உந்து  சக்தியாக இருக்கும் இதை மறக்காமல் மனதில் வைத்து அம்மா இவரை அரவணைத்தால் வெற்றி சதவிகிதம் சற்று கூடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின்  கனவு நனவாகும் இல்லை எனில் வெற்றி கோட்டை கடக்க  கடுமையாக உழைக்க வேண்டி வரும், சந்தர்ப்ப மாற்றத்தால் இழக்கவும் நேரிடலாம்.மலை ஏறகூடிய ரயில் வண்டிக்கு பின் பக்கமும் என்ஜின் தேவை என்பதை போல் அ .தி.மு.க விற்கு பின் பக்கம் தள்ளும்என்ஜினாக தே .மு.தி.க. தேவை. எத்தனை தேசிய தலைவர்கள் வந்து போனாலும் தமிழக வாக்காளர்களின் மனதில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது.வெற்றி பெற்ற பின் தேவை படும் தலைவர்களை விட வெற்றி பெறுவதற்கு  தேவைப்படும் தலைவர்கள்தான் முக்கியம் இதை உணர்ந்தால் கனவு நனவாகும் இல்லை எனில் கனவே வழக்கமாகும். 

இம்போதைய தேவை நம் நாடா? வெளிநாடா ..?

இன்று நம் பயன் பாட்டிற்காக வாங்கும் பொருள்களில் அதிகம் நம்நாட்டு தயாரிப்புகள் இல்லை.சுதேசியை விருப்புபவர்கள் இன்று நாட்டில் அதிகம் இல்லை. நமது நாட்டு தயாரிப்புகளை வாங்குபவர்களை ஏளனமாக பார்க்கவும்  , பன்னாட்டு நிறுவனத்தினுடைய தயாரிப்புகளை வாங்குபவர்களை மரியாதையுடனும் பார்க்க கூடிய  சமூகத்தை தான் நாம் பெற்றிருக்கிறோம்.தினமும் உபயோகிக்கும் பொருள்கள் முதல் ஆடம்பர,அலங்கார பொருள்கள் வரை பன்னாட்டு மோகத்தில்தான்  நாம் இருக்கிறோம்.ஏன்  இப்படி என்று காரணம் கேட்டால் அவை தரமானது என்றும் சமூக அந்தஸ்து என்ற பதில் கிடைகிறத.இவர்கள்  வாங்கும் பன்னாட்டு நிறுவன சாதனங்களில் பல அந்த நிறுவனத்தினுடைய தயாரிப்புகளே அல்ல அந்த  நிறுவனங்களின் பெயர்களை தாங்கி நிற்கும்   போலிகள்தான். நாம் உள்ளநாட்டு பொருள்கள் பல தரமானதாக இருக்கின்றது அத்தகைய தயாரிப்பும்  இந்த பன்னாட்டு மோகத்தால் மறைந்து போகிறது.இந்திய தயாரிப்பு என்றால் அது தரம் குறைவாக தான் இருக்கும் என்று ஒரு நினைப்பு மக்கள் மனதில் இருக்கும் வரைக்கும் பொருளாதாரத்தின் நிலைப்புத்தன்மை கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
குளிக்க உபயோகபடுத்தும் சோப்பு,பல் துலக்க உபயோகிக்கும் பற்பசை போன்ற தின உபயோக பொருல்களையாவது  நமது தயாரிப்பை பயன் படுத்த கூடாதா,இதில் சில முரன்பாடுகள் இருக்கிறது சிலருக்கு நமது நாட்டின் தயாரிப்பு பொருள்கள் எது என்பதே தெரிவதில்லை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பன்னாட்டு பொருள்களை உபயோகிக்கிறார்கள்.இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் போது  இது ஒரு இந்தியதயரிப்பு என்று விளம்பர படுத்தவேண்டும். நமது நாட்டின் ஜனத்தொகையில் 80 சதவிகிதம் பேர் தினம் உபயோகிக்கும் பொருள்களை வாங்கும் போது  இந்தியதயரிப்புக்கு  மாறினாலே நம்முடைய இந்தியாவின் பொருளாதாரத்தை திரத்தன்மை ஆக்கிவிடலாம் இந்திய தயாரிப்புகள் எவை எவை என்ற ஒரு பட்டியலை இந்த உடகங்கள்  வெளியிட வேண்டும்  அப்படி பட்டியல் கிடைக்கும் பட்சத்தில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் மாற்றத்திற்கு உடகங்கள் வெளியிட தயாரா ? 

சாதனையாளர்கள்.......!

சாதனையாளர்கள் பெரும்பாலும் ஏட்டுப்படிப்பில் பெரும் ஆர்வம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.ஏட்டுபடிப்பை கவனத்துடன் முடித்தவர்கள் உயர்த்த நிலையில் இருக்கிறார்கள்  ஆனால்  சாதனையாளர்களாக இருக்கிறார்களா என்றால்  பெரும்பாலும் இல்லை.இந்த சாதனையாளர்களுக்கு உள்ள மனஉறுதியை யார் கொடுக்கிறார்கள் அவர்கள் எவ்வாறு பெறுகிறார்கள்.சாதனை படைக்க வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து இளைஞர்களுமே நினைகிறார்கள் அனால் அதை வெற்றிகரமாக முடிப்பவர்கள் மிக சிலரே.இந்த உலகம் புதுமையை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை அதுவும் படிப்பறிவு குறைதவர்களின் வார்த்தைகளை மதிப்பதே இல்லை. அதையும் மீறிதான் இந்த சாதனையாளர்கள் வெற்றிபெறுகிறார்கள்.இளஞர்களாக இருக்கும் போது நமக்கிருக்கும் ஆர்வம் வயது ஏற ஏற கொஞ்சகொஞ்சமாக குறைத்து வாழ்தால் போதும் என்று நிலைக்கு தள்ள படுகிறார்கள்.அதையும் மீறி இந்த புதிய கண்டுபிடிப்புகளையும் அறிய பெரிய சாதனைகளையும் நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் ஏட்டுபடிப்பை சரிவர படிக்காதவர்களாகவோ அல்லது மெத்த படிக்காதவர்களகவோதான் இருக்கிறார்கள்.எத்தனையோ சாதனையாளர்கள் இந்த உலகத்தினரால் இணம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு மறைந்து   மண்ணோடு மண்ணாகி இருக்கிறார்கள்.நம்மிடையே உள்ள சாதனை படைக்கும் மனிதர்களை கண்டு கொள்ளுவோம்,அவர்களை உகுவிப்போம்,அனைவரும் சாதனையாளர் ஆவதற்கு முயற்சிசெய்வோம்.

தாமரை மலருமா பதவியில் அமருமா ....!

எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்கிறார்கள்.அதை வைத்து பார்த்தோமேயானால் மத்தியில் இருபெரிய தேசியக்கட்சிகள் ஒன்று பாரதிய ஜனதா பார்ட்டி மற்றொன்று  ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த இரு காட்சிகளில் ஒன்றின் தலைமையில்தான் ஆட்சி உருவாக  முடியும் மூன்றாவது அணி என்றொரு கோஷம் வந்தாலும் அந்த அணி உருவாவதற்கான சாத்திய கூறுகள் சதவிகித அடிபடியில் புறந்தள்ள கூடிய நிலையில் தான் இருக்கிறது.பி,ஜே.பி கட்சியை பொருத்தமட்டில் அவர்கள் கூட்டணி அமைப்பதிலேயே எந்த ஒரு குழப்பமும் இருக்காது ஆனால் பலமான கூட்டணி அமைப்பதில் மிகப்பெரிய குழப்பத்தை சந்திக்க கூடிய நிலைதான்  அதிகமாக தெரிகிறது.அப்படி பலமான கூட்டணியை அமைத்தால் ஒழிய அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஓர் நிகழ்வுதான்.மக்கள் பி.ஜே.பி.என்ற கட்சியின் மீது வைத்த நம்பிக்கையை விட வாஜ்பாய் என்ற தனிமனிதன் மீது வைத்த நம்பிக்கைதான் அதிகம் எனவேதான் அன்று ஆட்சி பீடத்தை கைப்பற்றியது ,அதைபோல் மக்கள் நம்பிக்கையை செல்வாக்கை  பெற்ற தேசிய தலைவர்கள் இன்று பி.ஜே.பி.ல் இல்லை இது நிச்சயமாக அந்த கட்சிக்கு மிக  பெரிய பின்னடைவு ஏற்படுத்த கூடிய ஒரு காரணி என்பதை பி.ஜே.பி மனதில் கொள்ளவேண்ட்ம் .பலரையும் அரவணைத்து கட்டுகோப்பாக செயல்பாட்டை செயல்படுத்துகின்ற ஒரு தலைமை இன்று பி.ஜே.பி.ல் இல்லை.அப்படி ஒரு தலைமை உருவானால் தான் இவர்கள் அட்சி அமைக்கும் கனவை நிறைவேற்ற  முடியும்.  
தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்ற நிலையை தொடருமேயானால் எதிரியின் பலவீனம் போட்டியாளர்களின் பலமாக மாறிவிடும். அப்படி பலம் மாறுவதற்கான வாய்ப்புகளே தொலைவில் தெரிகிறது.அதை மாற்றவேண்டிய பெரும் பொறுப்பு பி.ஜே.பி.க்கு இருக்கிறது.
தாமரை மலருமா பதவியில் அமருமா

வைகோவின் அரசியல் வியூகம் என்ன.........?

 வைகோ இன்றைக்கு இருக்கும் அரசியலில் கவனிக்க படாத ஒரு நபராக மாறிபோனார்.அல்லது மிகவும் பிந்தங்கியநிலலையில் நிலையில் இருக்கிறார்.நன்றாக அரசியல் நுணுக்கங்கள் தெரிந்தவர்,அரசியலை நன்கு அறிந்தவர் புரிந்தவர்,பல் மொழி புலம் தெரிந்தவர்.நல் அரசியலுக்குரிய  தகுதியும் இருக்கின்ற ஒரு சிறந்த அரசியல் தலைவர்.ஓயாது உழைக்க கூடிய ஒரு மனிதர் இன்று ஏன் அவருடைய கட்சிக்கு பின்தங்கிய ஒரு நிலைமை.அரசியலில் மாற்று சக்தி என்று உருவாக்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.மிகப்பெரிய மாற்றுசத்தியாக விளகியிருக்க வேண்டிய அக் கட்சி. இன்று அரசியலில் கேட்பாரற்று இருப்பதற்கு எது காரணமாக இருக்க முடியும்.
பதவி எட்ட முடியாத   கட்டசியாக இருக்கலாம் ஆனால் யார் பதவி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று தீர்மானிக்கிற ஒரு சக்தியாகவாவது இருதிருக்க வேண்டாமா!
அரசியல் அரிசுவடி இல்லாதவர்கள் கூட, இன்றைய  சூழ்நிலையில் தங்கள்  கட்சியை தவிர்த்து அரசியல் வெற்றியை பெறுவது  கடினம் என்றநிலையை உருவாக்கி கட்சியை வளர்ச்சி பாதையில் நடத்து கின்ற போது.அரசியல் சாசனத்தின் அனைத்து மட்டத்தையும் தன்னகத்தே வைத்து அரசியல் செய்யும் வைகோவால் ஏன் இன்னமும் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பெறமுடியவில்லை.தமிழக மக்கள் இவரை அண்ணாந்து பார்த்து  மலைத்த நின்ற காலங்கள் போய்  ஒரு ஏக்கத்துடன் பார்க்கும் நிலை உருவாக காரணம் என்ன எந்த ஒரு மேடை களிலும் பேசக்கூடிய ,எந்த நாட்டு அரசியலையும் அலசகூடிய ஒரு அசாத்திய திறமை பல மணி நேரங்கள் மக்கள் மன்றத்திலே உரையாற்றி உரை கேட்பவர்களை தன்வயபடுத்தகூடிய வலிமை இவை அனைத்தும் இருந்தும்.தமிழக அரசியலில் பின் நோக்கி பயணப்படுகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்பதை மறைக்க முடியாது.மக்கள் மன்றம் தீர்மானிக்கும் அரசியலில் தனி நபர்களை காரணமாக கூறுவது   தன்னை தானே ஏமாற்றுகின்ற வேலை.எதை தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ந்து தவிர்தால் ஒழிய மறுமலர்ச்சி என்பது கட்சியின் பெயரோடு நின்று விட கூடும்.வரும் காலங்களில்  ம. தி. மு. க. மீண்டும் மலருமா ,மக்கள் மனங்களில் வளருமா விதைத்ததை தான் அறுவடை செய்யமுடியும் காலத்தின் கைகளில் ம. தி. மு. க.

அரசியலுக்கு தயாராகிறார நடிகர் விஜய் ?!

இப்படி நடக்கவும் இடம் முண்டு . நடிகர் விஜய் தனக்கு தலைவா திரைப்படத்தை வெளியிடுவதில் ஏற்ப்பட்ட தலைவலி திருகு வழியை சாதாரணமாக எடுத்து கொண்டாலும் அவரை சுற்றி உள்ளவர்கள் அதை சாதரணமாக எடுத்துகொளுவதர்க்கு தயாராக இல்லை. தம்பி விஜயை தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.விஜயை எம்.ஜி.ஆர் ராக மாற்றநினைக்கும், அண்ணாவும் இதற்க்கான முயற்சியில் இருக்கிறார்.அதற்காக தேசிய கட்சியில் பணியாற்றிய பழம் பெரும்  அரசியல் வாதியிடமும்   ஒரு மூத்த இந்திய ஆட்சி பணியாளரிடமும் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.வருகின்ற தேர்தலில் விஜயின் பங்கு நடிகராக இருக்குமா அல்லது அரசியல் வாதியாக இருக்குமா என்பது இன்னும் குறைந்த கால இடைவெளியில் தெரிந்துவிடும்.அதற்க்கான அறிவிப்பு சூசகமாக வெளிவரும் ஆனால் விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம். வெற்றியா தோல்வியா என்பது காலத்தின் கையில்.

மோடி மஸ்தான்

மோடி மஸ்தான்  என்றால் தெருவில் ஒரு கூட்டத்தை  கூட்டி வைத்து கொண்டு  அந்த கூட்டத்தின் நடு  நடுவே மோடி மஸ்தான் சார்ந்த நபர்கள் இருந்து கொண்டு அவரின் புகழ் பாடி கொண்டிருப்பார்கள் .   எல்லாவிதமான பிரச்சனைக்கும் தன்னிடம் தீர்வு இருக்கிறது என்று சொல்லி கொண்டு கூடி இருக்கின்ற கூட்டத்தை தன்வய படுத்தி தன்னை ஒரு சக்தி வாய்த்த நபராக காட்டி கொள்ளுபவன்.உண்மையில் அப்படிஒரு சக்தி அவனுக்கு கிடையாது.அது உண்மை அல்ல என்று தெரித்தவர்கள் கூட அந்த மோடி மஸ்தான் செய்யும் நபரை நெருக்குவதில்லை காரணம்.அவன் கூறும் அச்சமூட்டும் வார்த்தைகளினால் ஏற்படும் சிறு பயம்!.

அதை போலத்தான் இன்றைய அரசியலில் சில மோடி மஸ்தான்கள்  இருக்கிறார்கள்.தன்னால் மட்டுமே  இந்தியாவை வல்லரசாக  மாற்றமுடியும் என்று சொல்லுகிறார்கள்.ஏழைகள் இல்ல இந்தியாவை  படைக்கும் படைப்பாளியாக தன்னைகாட்டி கொள்ளுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொல்லுவதை போல  "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது "என்பதை போலத்தான் இந்த நாயகர்களின் பிம்பங்கள். சுரைக்காய் என்று காகிதத்தில் எழுதுவது சுலபம், அதை சமத்து சாப்பிட முடியாது.என்பதை சுற்றி மக்கள் உணர்த்திருந்தாலும் அரசியல் மோடி மஸ்தான் களை பற்றி பேசுவதற்கு தயங்குகிறார்கள் காரணம், எப்படி தெருவில் இருக்கும் மோடி மஸ்தானின்  வார்த்தைகளுக்கு பயந்து செல்லுகிறார்களோ அதை போலத்தான் இவர்களை பற்றி பேசினால் நாம் ஒன்றும் தெரியாத ஆசாமியாகி விடுவோமோ என்ற வெட்கம் காரணமாக இந்த அரசியல் மோடி மஸ்தானின் மகுடிக்கு மயங்குகிறார்கள் பின் இவர்களே  அவர்களின் புகழ் பாட தொடக்குகிறார்கள்.

 அலுவலகத்தில் தன்னை முதன்மை படுத்துவதற்காக  எந்த  ஒரு வேலையையும் செய்யாமல் எல்லா  வேலையையும் தான் தான் முன்னின்று செய்தததாக,தன்னுடைய மேலதிகாரிகளுக்கு காட்டிகொள்வார்கள்.
அதை போலத்தான் இந்த அரசியல் மோடி மஸ்தான்கலும் எதற்க்கெடுத்தாலும் தன்னை முதன்மை படுத்தி கொளுவதர்க்காக. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கதைகளை தன்  புகழ் பாடிகளை வைத்து  பாட கொண்டிருப்பார்கள், இத்தகைய அரசியல் மோடி மஸ்தான்கள் மிகவும் கண்டிக்க தக்கவர்கள்,  கவனமுடன்  கவனிக்க தக்கவர்கள். 
 
  


வாங்க வடிவேலு வாங்க

 வாங்க  வடிவேலு வாங்க நாங்க தியேட்டர்ல வாய்விட்டு சிரிச்சி ரொம்ப நாளாச்சி.இன்றைய காமெடி நடிகர்கள் சிரிப்பை  சினிமா ரசிகர்களிடம் வரவழைக்க அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது .காமடி செய்கிறேன் பேர்வழி என்று அவர்களே சிரித்து கொள்ளுகிறார்கள்.எங்களையும் கொல்லுகிறார்கள்.உங்களை திரையில் பார்த்து வெகு நாட்களான நிலையில் எங்களுக்கு இவர்களின் காமெடிகள் பழகி வேறு வழி இல்லாமல் இவர்களையும் திரையில் பார்த்து தொலைக்கிரோம் அது அவர்களின் ரேட்டிங்கை கூட்டுகிறது ஊதியத்தை எகிரவைகிறது.ஏன் இந்த தமிழ் திரை உலகம்.உங்களை கைவிட்டது என்றே தெரியவில்லை இன்றைக்கும் தொலைகாட்சியில் உங்களின் காமெடியை பார்த்து பார்த்து சிரித்து கமெடி பஞ்சத்தை தீர்கிரூம்.காமெடியில்  யாரையும் ஞாபக படுத்தாத என் வழி தனி வழி என்று நீங்க ஒரு தனிரகம். சீக்கிரம் வந்து கமடிக்கிற பெயர்ல இவர்கள் செய்யும் கொடுமையை நிறுத்தத்துக்க வாங்க வடிவேலு வாங்க .........

பாலியல் கொடுமைக்கு என்ன காரணம் ...........;

பெண்களின் மீது பாலியல் கொடுமை நடப்பதற்கு வெறும் காமம் மட்டுமே காரணமா? இதுபோல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் சட்டத்தில் உட்டபட்ச தண்டனை கிடைக்க வாய்பிருக்கிறது என்று தெரிந்ததும் வெறும் காம பசிக்காக பாலியல் வன்முறைகள் நடக்க வாய்ப்பிருக்கிறதா?

இன்றைக்கு  பெண்  என்ற வித்தியாசமில்லாமல் எல்லா துறைகளிலும் ஆண்களுடன்  போடிபோட்டுகொண்டு  பெண்கள் வளர்ச்சி அடைத்திருக்கிறார்கள், இதைபோல் சூழ்நிலை இருக்கின்ற இந்த உலகத்தில் வெறும் பாலுனற்சிக்காக இதைப்போன்ற வன்கொடுமைகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை! அதையும் தாண்டிதான் நாம் இதை சித்திக்கவேண்டி இருக்கிறது.
விரோதம் அதன் காரணமாக நடக்கும் பழிவாங்கும் நடவடிக்கை என்று எத்தைனையோ காரணிகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டி இருக்கிறது

ஒரு ஆண்  ஆண்மேல் கொண்ட விரோதம் , பெண் பெண்மேல் கொண்ட விரோதம், ஒரு ஆண்,  பெண்மேல் கொண்ட விரோதம் , பெண் ஆண்மேல் கொண்ட விரோதம்.
இந்த விரோதங்கள் மனிதனின் மனதின்  தன்மையையும் அவர்களின் சமூக நிலையையும் ,பணபலத்தையும் பொறுத்து பழிவாங்கும் நடவடிக்கை இருக்கிறது.இதில் ஆணுக்கும் ஆணுக்கும் இடையே நடைபெறுகின்ற விரோத யுத்தத்தில் விளையும் விளைவுகள் ஒரு சம்பவமாக நம்மை கடத்து சென்றுவிடுகிறது.இதே விரோதங்கள் பெண்மீது நடக்கும் போது அவை பாலியல் வன்கொடுமை என்ற ஒரு வட்டத்திற்குள் வைத்து விடுகின்றது. 
இதை வெறும் பாலியல் வன்கொடுமையாக மட்டுமே பார்க்காமல் அதற்க்கான காரணிகளை ஆராயவேண்டும். இதைபோல் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை தரும் அதே வேளையில் இந்தகைய கொடுமைகள் நடக்க  காரணமான ஆணிவேரை ஆராய்ந்து அழித்தால் மட்டுமே இதைப்போல் சம்பவங்கள் மேலும் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  

ஞாபகங்கள்

ஞாபகங்கள் இருக்கும் வரைதான் மனிதன் மனிதானாக இருக்கிறான்.இந்த ஞாபகங்கள் தான் மனிதனின் வாழ்கை சக்கரத்தை செலுத்துவதற்கு மிகவும் முக்கியமான கருவி.சில சமயங்களில் இவை நம்மை தாலாட்டுகின்றன,சில சமயங்களில் நம்மை களையிழக்க செய்கின்றன.பெரும்பலநேரங்களில் சிறுவயது நினைவுகளை சொல்லி அட்சரியபடுத்துகின்றன.நாம் மறக்க நினைப்பதையும் தன்னகத்தே கொண்டு நம்மை எரிசலூட்டுகின்றன.இந்த ஞாபகங்களை நாம் வேண்டாம் என்ற முடிவுக்கு வர முடியாது.இவை நம் வாழ்கையில் நடக்கின்ற அனைத்தையுமே பதிவு செய்து கொண்டே இருக்கும் இதிலிருந்து நாம் நினைப்பது போல் மாற்றி  அமைக்க முடியாது.இந்த ஞாபக பகுதி மனிதனுக்கு மனிதன் வேறுபாடும்.ஞாபகத்திற்கு பெரும் எதிரி மறதி நம் மனம் மறக்க விரும்பும் நிகழ்வுகளை இவை நமக்கு திருப்ப திருப்ப நினைவூடும். இதை போன்ற உணர்வுகள் தான் நம் வாழ்வை செம்மை படுத்துவதற்கு உதவுகின்றன 

கல்வி<<<<<<<<<>>>>>>>>>>>>>>

  
கல்வி என்பது அடிதட்டு  வரை பரவலாக்க பட்டிருக்கிறதா என்று நினைத்து பார்க்கும் போது, அடித்தட்டு வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு அது எட்டாத ஒரு  நிலையிலேயே இருக்கிறது. ஏன் நம்  யாரும் இதற்காக எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளுவதற்கு விரும்புவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தின்  மூலமாகவும் தன்னார்வம்  மூலமாகவும் முயற்சிகள் மேற்கொண்டாலும் அது சரியான நபர்களுக்கு போய்  சேர்வதில்லை என்பது உண்மை.ஒரு திரைப்படம் தொடக்க விழா, இசை வெளியீட்டு விழாவிற்கு,வெற்றிவிழ என்று எந்தனையோ விழாக்களை கொண்டாடும் இந்த திரை துறையினர்கள்  ஒரு விழாவிற்கு ஒரே ஒரு மாணவனுடைய கல்வி செலவையாவது ஏற்றுக்கொள்ளுவதற்கு முன் வரலாமே.ஒரு நாள் விழாக்களுக்காக லட்சகணக்கில் செலவு செய்கின்ற  இந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு.ஒரு மாணவனுக்கான கல்வி செலவுகளை ஏற்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.ஒரு திரைப்படம்  வெளிவரும் போது சில மாணவர்கள்,குறைந்த பட்டசமாக ஒரு மாணவனாவது கல்வி பெறுகிறான் என்ற நிலை வரவேண்டும்.அப்போது தான் இந்த மக்கள் திரைத்துறையினருக்கு செய்த உதவிக்கு ஒரு சிறிய கைமாறாக இருக்கும் வரும் தலை முறை முழுமையான கல்விபெற்ற தலை முறையாக மாறுவதற்கான ஒரு சூழல் உருவாவதற்கு இவர்களும் ஒரு துணையாக இருந்தார்கள் என்ற ஒரு நல்ல பெயராவது கிடைக்கும்.திரை துறையினர்தான் இதை செய்யவேண்டும் என்பது இல்லை.தேவை இல்லாத அடம்பர விழாக்கள் கொண்டாடும் அனைவருமே இதை மனதில் வைத்து கொண்டு செயல் படுவது நன்று.ஒரு விழா நடைபெறுகிறது என்றால் ஒரு மாணவனுக்கு கல்வி கிடைகிறது என்ற எண்ணம் வந்து விட்டால.எத்தனை பாராட்டு விழாக்கள் நடந்தாலும்,மக்கள் வரவேற்ப்பார்கள்.கொண்டாடுவார்கள்.

பயணம்................

 நாம் எல்லோருக்கும் விருப்பமான ஒரு சம்பவம்.இந்த பயணம் மனித வாழ்கையில் சிறு குழந்தை பருவத்திலிருத்தே நம்மை பற்றிகொள்கிறது .சில பயணங்கள் நாம் மிகவும் விருப்பி மேற்கொள்ளும் பயணம் சிலவை நம் விருப்பத்திற்கு மாறாக நாம் மேற்கொள்ள வேண்டிய பயணங்கள்.பிறந்த போது மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு துவங்கும் பயணம்.நாம் இறந்த பிறகு நடைபெறும் அந்த இருகாட்டை நோக்கிய இறுதி பயணத்துடன் முடிவடைகிறது இந்த இரண்டிற்கும் இடையே யான வாழ்கை பலவிதமான பயணங்களை நாம் மேற்கொள்கிறோம்.ஆன்மீக பயணம் நாம் வாழும் வாழ்கை சூழ்நிலையிலிருத்து விலகி ஒரு அமைதியான ஒரு உணர்வை மனதுக்கு கொடுக்கிறது சந்தோசமான நிகழ்வுகளுக்காக செல்லுகின்ற பயணம் எப்போதுமே வயது விதியாசமில்லாமல்  அனைவரையும் குதுகலிக்க செய்கிறது.நம்முடைய எதிபார்ப்பை பூர்த்தி செய்வதற்கான பயணத்தில் ஒரு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்துகிறது.இதை தவிர நம்முடைய வழக்கை சக்கரத்தை நகர்த்துவதற்காக தினமும் நாம் பணிக்கு சென்று திரும்பும் பயணம் என்பது ஒரே நிகழ்வாக இருப்பினும் ஒவ்வரு நாளும்  ஒவ்வரு உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றது.தெரிந்தே சில பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுகிறோம். இருப்பிரும் அவை நமக்கு சுகமாகவும் அமைவதுண்டு சோகமாகவும் அமைந்துவிடுவதும் உண்டு.கனவு பயணம், நினைவு பயணம் என்று நம் வாழ்கையில் கலந்து விட்ட இந்த பயணங்கள் ஒரு கால கட்டத்தில் நமக்கு அதான் மீதிருந்த ஒரு ஈர்ப்பை குறைந்து விடுகின்றான்.நம்முடைய வயதை பொறுத்து பயணத்தை தவிர்ப்பதற்க்கே நாம் முயல்கின்றோம். ஒரு காலத்தில் நாம் மிகவும் விரும்பிய இந்த பயணம் நம்முடைய வயதான காலக்களில் நாம் வெறுக்க துவக்குகிறோம்.அதன் பின் நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் பணிக்கும் ஒரே பயணம் நம்முடைய இறுதி பயணம் தான். அந்த பயணத்தின் உணர்வுகளை நாம் பிறருக்கு அளித்து விட்டு எந்த வித சலனமும் இல்லாமல் பயணிக்கிறோம்.

கனவு


கனவு ஒரு இன்பமயமான நிகழ்வு,விழித்திருக்கும்போது வரும் கனவுகள்,ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகள்.விழித்திருக்கும் போது  காணும் கனவு நம்மை எப்போதுமே மகிழ்விக்கும் ஆனால் தூக்கத்தில் வரும் கனவுகள் சில நேரம் நம்மை பயமுறுத்தும். வாழ்க்கையில் கனவுகளை,கனவோடு விட்டு விடாமல் அதை நனவாக்கி காட்டியவர்களும் உண்டு.கனவோடு கனவாக கரைந்து போனவர்களும் உண்டு.கனவு என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வு அதனுடன் பயணிப்பது சொல்லிலடங்கா ஒரு அனுபவம்.அதை எல்லோராலும் அனுபவித்து விட முடியாது.நாம் வாழ்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் நாம் இதற்க்கு முன் சந்தித்ததை  போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். இந்தகைய உணர்வுகள் நம்முடைய ஆழ்த்த உறக்கத்தில் கிடைத்த கனவுகளின் பிரதிபலிப்பாக இருக்காலம்.தெளிந்த நீரோடை போல் நாம் காணும் கனவு தான் எந்த ஒரு முயற்சிக்கும் முதல் படி.  நம்மை இந்த உலகம் தனிமை படித்திய போதெல்லாம் இந்த கனவுதான் நம்முடைய உற்ற தோழனாக, நம்மை செம்பை படுத்தும், நமாக்கு ஆறுதல் கொடுக்கும் கனவு காணாத   மனிதனே இல்லை."கனவு மெய்பட வேண்டும்" என்பது தான் அனைவருடைய ஆசையும் ஆனால் அதை மெய்பட செய்தவர்கள் அறிதானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.நாம் காணும் கனவுகள் பெரும் பாலும்  நம்முடைய வயதை சார்ததே நிகழும். இந்த கனவை துரத்த நினைத்தாலும்.அதை விட்டு நம்மால் பிரிய முடிவதில்லை.அவைதான் நம்மை துரத்துகின்றன.நம்முடைய சித்தனையின் வெளிப்பாடாக கூட இந்த கனவுகள் நம்மை ஆழுமை செய்யும்.எப்படியோ கனவு மனிதனின் வாழ்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று..  நம்  கையில் உலகம் அடங்குவதற்கும் உலகத்தின் கையில் நாம் அடங்குவதற்க்கும் இந்த கனவுதான் முதல் நிலை. எனவே நல்ல கனவு கண்டால்   நம் வாழ்வில் நன்மை உண்டு .

மருத்துவம் தவமாகுமா..................!


மருத்துவம் ஒரு தொழில் அல்ல அது ஒரு கலை அது தவம் அது சேவை,அதை தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கும் இன்றைய மருத்துவர்களும், மருத்துவ  படிப்பதை  ஒரு கௌரவமாக நினைத்து படிக்கும் பணம்படைத்தவர்களையும்  நினைத்தால் வேதனைதான் மீதமிருக்கிறது .பணம் பிடுக்கும் நோகத்திலேயே இன்றைய மருத்துவர்கள் செயல் படுகிறார்கள் .கிராம புறங்களுக்கு சென்று பணியாற்றுவதற்கு இன்றைய தலைமுறை மருத்துவர்கள் யாரும் தயாராக இல்லை.தவமாக செய்ய வேண்டிய ஒரு செயலை சட்டத்தை போட்டு நிறைவேற்ற வேண்டிய நிலை உள்ளது.எந்தனையோ  கிராமங்களில் இன்றும் சரியான மருத்துவம் கிடைப்பதில்லை.குறைந்த பட்சம் குழந்தைகளுக்கான மருத்துவமாவது சரியாக கிடைக்க வழி  செய்தால் நன்று.இத்தகைய மருத்துவர்கள் நமக்கு தரும் மருத்துகள் நமக்குல்ள்ள நோய்க்கான மருத்துகள்தான என்று நாம் ஆராஇவதுஇல்லை  அந்த அளவிற்கு முழுமையான நம்பிக்கை நாம் மருத்துவர்கள் மீது வைகிரோம் அனால் அவர்கள் அந்த நம்பிக்கைக்கு தகுந்தளவு  அர்பணிப்புடன் இந்த சேவையை செய்கிறார்களா என்றால் துளி அளவும் இல்லை என்றுதான் நாம் நடைமுறை யதார்த்தத்தில் பார்கிறோம்.மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மருத்துவ படிப்புக்கு ஆள் சேர்ப்பதோடு,கொஞ்சம் மனிதாமிமானம் முள்ள,மனிதத்துவ சிந்தனை உள்ள மாணவர்களுக்கும் இடமளித்தால் நன்றாக இருக்கும்.அவர்களாவது எதிர்வரும் காலத்தில் இந்த மருத்துவத்தை தொழிலாக  பார்க்காமல், சேவையாக தவமாக செய்வார்களா என்று பார்போம்.நம்மிக்கைதானே வழக்கை செய்வார்கள் என்று நம்புவோம்.

தண்ணீர்------------------------------?


காற்று,நிலம்,நீர் ஆகாயம் , பூமி  இந்த ஐந்தில் தண்ணீர் மனித தேவைகளிலே மிகவும் முக்கியமான ஒன்று.ஹைட்ரஜனையும்,ஆக்சிசனையும் தன்னகத்தே கொண்ட ஒரு நீர்மம் மனிதனுக்கு மட்டுமல்ல மரம் செடி, கொடி அனைத்திற்கும் தேவையான ஒன்று . தண்ணீர்தான் உடலுக்கு  ஜீவன் தரும் ஒரு அம்சம்.இன்றும் நாம் பருகுவதற்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது.தண்ணீரை விலை கொடுத்து வாங்க  வேண்டிய ஒரு சூழ் நிலை இன்று நிலவுகிறது,அப்படி வாங்கும் தண்ணீர் சுந்தமனதா என்று பார்த்தால் முழுமையாக 'ஆம்' என்றும்  சொல்லுவதற்க்கில்லை. இயற்கை நமக்கு அளித்த இந்த அற்புதத்தை கூட   சரியாக நமக்கு கிடைப்பதற்கு யாரும் எந்த  வழிவகையும்  செய்யவில்லை.அதை விற்பனை பொருளாக்கி வேடிக்கை பார்க்கிற கூட்டம்தான் இன்று இருக்கின்றது . இந்த நீர் ஆதாரங்களை எவ்வாறு பாதுகாத்து நம்முடைய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்று நமக்கு நாமே சிந்திப்பதும் இல்லை.செயல் பாட்டுக்கு கொடுவருவதும் இல்லை.பிறர் மீது குற்றம் சுமத்தி விட்டு நாம்  நம் வழி பார்கிறோம் வெந்ததை தின்போம் விதி வந்தால்  சாவோம் என்றுதான் நாம் இன்று எதை பற்றியும் கவலைபடுவதில்லை.வேளாண்மைக்கான நீர் ஆதாரத்தையாவது சரியாக,முறையாக பராமரித்து வைத்துள்ளோமா அதுவும் இல்லை.நீர் இன்று அமையாது உலகு நாம் இதை உணர்ந்தால் வாழ்வது இலகு .......!



விவசாயி............................*****

விவசாயம் என்பது இந்த உலகில்  கூடிய ஓர் அம்சம்.நாம் இன்று விவசாயத்தை மறந்து விட்டோம் அதனுடேன் கூடி விவசாயியையும் மறந்து விடோம் எனவேதான் இன்று விவசாயம் செய்வதற்கு மனிதர்கள் விருப்புவதில்லை.மனித நாகரீகத்திர்க்கே வழிகாட்டிய இந்த விவசாயம் இன்று இருக்கும் நிலையை நினைத்து பார்த்தால் நமக்கு வரும் காலத்தை பற்றிய பயம் புரியும்.விவசாயம் விருப்பத்துடன் செய்ய கூடிய ஒரு சேவை என்றே நான் கருதுகிறேன் எனவேதான் வேளாண்மை என்ற பெயர் வந்தது.வேளாண்மை என்றால் விருப்பி மற்றவருக்கு உதவுவது என்று பொருள்.இந்த தொழில் இயற்க்கை  காரணிகளை சார்ந்துள்ளது.எனவே இதனை விருப்பபுடந்தான் செய்யமுடியும்,மாதம் முடித்ததும் ஊதிய உத்திரவாதம் கொடுக்கும் தொழிலல்ல.எனவே இதனை விரும்பித்தான் செய்யமுடியும்.தங்களின் சோகங்களை மறந்து தன பசியையும்,பிறர் பசியையும் போக்கும் ஒரு உன்னதமான சேவை."தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் மகாகவிஅனைவருக்கும் உணவளிக்கும் அந்த விவசாயியை போற்றவில்லை என்றாரும் தூற்றாமல் இருந்தாலே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்  
நாம் யாருமே அந்த விவசாயம் நிலை பெற செய்வதற்காக எந்த ஓர் முயற்சியையும் எடுக்க வில்லை.இயற்கையான பூக்களை விற்று காகிதபூகளை வாங்கும் மனிதர்களாகத்தானே இருக்கின்றோம். நாம் இன்று தொழில் நுட்பத்தில் முன்னேறிகொண்டிருந்தாலும் நம்முடைய அடிப்படை விவசாயம்தான். நாம் தினமும் உண்ணும் உணவின் பின்னல் உள்ள விவசாயியை மதிப்போம் விவசாயத்தை வளர்ப்போம் வளமான பசி இல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்.



தமிழ் கலாச்சார காதல் o+

 

தமிழர் கலாச்சாரம் என்பது ஒரு சங்கிலி வளையம் போன்றது.அதில் ஒரு பிளவு ஏற்பட்டாலும் அந்த சங்கிலி  வளையம்  அதன் வலிமையை இழந்து விடும். அது போலத்தான் தமிழர் கலாச்சாரமும், நாகரீகம் என்ற பெயரிலோ அல்லது சமுக மாற்றம் என்ற பெயரில் சிறுசிறு மாற்றங்களை செய்யலாமே தவிர அதில் பிளவை ஏற்படுத்த முனைய கூடாது அப்படி முனைவோரை இனம் கண்டு புறம் தள்ள வேண்டும். இன்று அப்படி ஒரு சூழ் நிலை வந்திருக்கிறது அது தாய் தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பெற்றோரின் பாச போராட்டம். தன்னுடைய  மகளின் மூலம் புது சொந்தக்கள் வரக்கூடிய  காலகட்டம்தான் திருமணம் என்ற பந்தம். இந்த திருமண பந்தத்தைதான், காதல் என்ற ஒரு போதை வீழ்திவிட நினைக்கிறது.பெண்ணின் சம்மதம் மட்டுமே போதுமானது என்று கூறுகின்ற சமுதாயத்தை நாம் கொஞ்சம் தள்ளி வைப்பது நன்று .திருமணம் என்பது ஒரு புது உறவை ஏற்படுத்ட கூடியது அது அவர் அவர்களுடைய குணாதிசியத்தை பொறுத்து அந்த புது உறவை தீர்மானிக்கிறார்கள்.குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடிமிக்க கொளல். என்று ஆராய்ந்து நாம் புதியவைகளை தேர்த்தேடுக்கிறோம்.அவ்வாறு தேர்தெடுப்பதில் உள்ள சிறு சிறு குறைகளை மட்டும் வைத்து கொண்டு.திருமண செய்து கொள்ள கூடிய பெண்ணின் சம்மதம் மட்டுமே போதும் என்ற ஒரு நிலையை வலியுறுத்தி சொல்ல்வது கலாசார சங்கலியை அறுப்பதற்கு சமமானது.உன் பெண்ணிற்கு என்னை பிடித்திருக்கிறது என்னுடன் அனுப்பிவை என்று பெற்றோரிடம் கேட்பது சரி என்று வாதிட்டால்.இன்று அவளுக்கு சரி என்று தெரிகின்ற ஒரு நிகழ்வு,நாளை தவறு என்று அவள் நினைத்தால் அந்த சமயத்தில் அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சரி என்று வாதிடுபவர்கள் சுட்டி காட்ட வேண்டும்.பெண்களுக்கு மட்டும் இந்த விசயத்தில் ஏன் எதிர்ப்பு இந்த அளவிற்கு கிளம்புகிறது என்றால்.ஒரு தந்தை தன்னுடைய மகளை,தன்  தாயின் மறு உருவமாக பார்க்கிறான்  என்பது  தான் உண்மை. மேலும் தன்னுடைய அரவணைப்பில்,கட்டுப்பாட்டில்   வளர்ந்த தன்  மகளை முற்றிலுமாக தன்னுடைய உரிமையை  இழந்து , அனைத்து அதிகாரத்தையும்,உரிமைகளையும்  வேறு ஒருவருடைய கரங்களில் கொடுக்கும் போது,அவர் தன்னை போலவே, தான் எப்படி தன்  தாயின் மருவுருவமாக நினைத்து தன் மகளை வளர்த்தோமோ,தன்னை போலவே ஒரு மனிதர் வேண்டும் என்று நினைக்கின்றார் எனவேதான் இந்த எதிர்ப்புகள் கிழம்புகின்றன.தந்தை தாயின் எதிர்பார்ப்பை சிறிதேனும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்ற எந்த ஒரு ஆண்மகனையும்  யாரும் எதிர்பதில்லை.இந்த திருமண பந்தத்தில் பெண்ணின் விருப்பம் எந்த அளவிற்கு தகுதியானதோ,அதில் பாதி அளவிற்காவது தகுதியானதுதான் பெற்றோரின் விருப்பமும்.வாழ்கையே விட்டு  கொடுத்து வாழ்வதுதான் அந்த விட்டு கொடுப்பது யாருக்கு தன் உறவுக்கா இல்லை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் நபருக்க என்பதை பொறுத்துதான் வாழ்கையின் வீரியமும்,தளர்ச்சியும்.

நட்பு

நட்பு என்பது அனைவராலும் அரவணைத்து செல்லகூடிய ஒரு நடைமுறை,முன்பெல்லாம் நட்பு என்பது மிகப்பெரிய அளவில் போற்றப்பட்டது.கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆனா கதையாக ஆகிவிட்டது.இன்று நட்பு என்பது வெறும் வார்த்தைகளிதான் இருக்கிறதே தவிர உண்மையான நிலையில் உயிருடன் இல்லை என்பதுதான் மெய்.வரலாற்றுகளில் போற்றப்பட்ட நட்பு என்ற பெயரை உபயோகித்து செய்ய படுகின்ற செயல்கள் அனைத்துமே அரைவேக்காட்டுதனமானவைதான்.அன்றைய நடப்பு உறவு முறைகளையும் மீறி காலம் கடந்து நிலைத்து நின்றது.ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பதும், அன்பு பாராட்டுவதும் தான் நட்பை  உயிருடன் வைத்து கொள்ளும்.ஆனால் இன்று நட்பு வெறும் வேசத்தினால் ஆனா சித்திரங்கள்.தன்  வாழ்வை விட தன்னுடைய நண்பனின் வாழ்கையை செம்மைபடுத்திய  நட்பு இன்று உண்டென்று நினைத்தால் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் கிடைக்காது.இளமையில் கூடி கலைவதாகத்தான் நட்பு  இருக்கிறது.போலித்தனமாக விழாக்களில்  வாழ்த்துக்கள் சொல்லுவதற்கும்,விசேசங்களில் ஒன்று கூடி கூத்தடிபதர்க்கும் தான் இன்று நட்பு என்ற சொல் பயன் படுகிறது.நம் வாழ்வில் வருபவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்லவீழும் போது  நம்மை வாழ வைப்பவர்கள்தான் நண்பர்கள்.அப்பேற்பட்ட நண்பர்கள் நம்முடைய வாழ்நாளில் நம்மை விலகி சென்றிருத்தால் தயவுசெய்து அவர்களை தோழோடு தோழ்  அனைத்து அரவணைத்து கொள்ளுங்கள்.வரும் காலம் நட்பிற்கு இலக்கணமாக விளங்கட்டும் நாமும் அதிலே ஒரு துளியாக இருப்போம் நல்ல பழக்கவழக்கம் கொண்ட உலகை நம் சத்ததிக்கு கொடும்போம்.

முகஸ்துதி முள்ளம்பன்றிகள்

முகஸ்துதி என்பது  ஒவ்வொரு மனிதனுக்கும் பிடித்த ஒன்று. தன்னை பற்றி சொல்லும்  இந்த அதிகபடியான விஷயங்கள் அனைத்தும் பொய் என்று தெரிந்தும்.அப்படிப்பட்ட நபர்களைதான் அவர்களுக்கு பிடித்திருக்கும் .இவ்வாறு முகஸ்துதி செய்பவர்கள் ஆபத்தானவர்கள் என்று தெரித்திருந்தும் அவர்களை தன்னுடன் வைத்து கொள்ளவதைதான் மனிதன் விரும்புகிறான்.மது உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தும் கூடஅதை அருத்துவத்தை போல இந்த முகஸ்துதி மனதை கெடுக்க கூடிய ஒரு கொடிய செயல் என்று தெரிந்தும் மனிதன் அதை விரும்புகிறான்.இதனால் தன் தகுதிக்கு மீறிய செயலை செய்வதற்கு அவன் துணிகிறான்.அதன் விழைவு நிர்கதியாக நிற்க கூடிய சூழ்நிலை உருவாகிறது.மனம் முகஸ்துதி செய்து உருஏற்றப்பட்ட அந்த நிலையில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. இப்படி முகத்திற்கு நேராக ஒன்றும் மறைமுகமாக வேறொன்றும் பேசுபவர்கள்தான் இன்றைய சூழ்நிலையில் வாழதெரிந்தவர்களாக உலகம் நினைக்கிறது.இப்படிப்பட்டவர்கள்தான் நாட்டில் அதிகம் காணப்படுகிறார்கள்.இவர்களுடன் போட்டி போடமுடியாமல் தன்மானம் உள்ள மனிதர்கள் வெறுத்துபோய் அமைதியாகிவிடுகிரார்கள் அல்லது அவர்களும் வேறுவழி இன்றி முகஸ்துதி செய்ய தொடக்கி விடுகிறார்கள்.முகஸ்துதி அரசியல்,அழுவலகம் என்று எல்லா நிலையிலும் இருக்கிறது.இந்த ஆபத்தான நபர்கள் தங்களுடைய சாதக பாதக மான வேலைகளை இதன்மூலம் முடித்து கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக திகழ்கிறார்கள்.அந்த வெற்றிக்கு பின்னல் இருக்க கூடிய ஈன செயல் களை  யாரும் அறியாததால் இந்த கீழ்நோக்கு பார்வை உள்ளவர்களை. இந்த உலகம் மேல் நோக்கி பார்கிறது.

கடவுள் இன்லையா,இருக்கிறாரா.............................!

கடவுள்  இன்லையா,இருக்கிறாரா என்பது மிகப்பெரிய விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம்.பெரிய பெரிய ஞானிகளும், தத்துவமேதைகளும் கடவுள்இருக்கிறார் அது இயற்கையாகவோ,எல்லாவற்றிற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று வேறு வேறு கோணங்களில் நம்மை சிந்திக்க சொல்லுகிறார்கள். மிகப்பெரிய விஞ்ஞானிகள் அனைத்தையும் தாண்டிய ஒரு சக்தி இருபதாக சொல்லுகிறார்கள். பொது ஜனங்களின் மத்தியில் கடவுள் இருக்கிறார், இல்லை என்ற விவாதமும் , இல்லவே இல்லை என்று உறுதியாக ஒருசாராரும் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.பொதுவாக மக்கள் மத்தியிலே  அவரவருக்கு சாதகமாக நடைபெறும் சம்பவங்களுக்கு கடவுளின் அனுக்கிரகமாகவே நினைகிறார்கள்,எதிர் மறை சம்பவங்கள் நிகழ்த்து அது துன்பத்தை தரும் சமயம் கடவுள் இருக்கிறாரா என்ற சத்தேகத்தை எழுப்புகிறார்கள்,இவாறு மனிதன் இல்லை என்றும், இருக்கிறாரென்றும் மாறி மாறி தன்னுடைய என்னத்தை வெளிப்படுதிகொண்டே கடவுளின் பக்கமே  நிற்கிறார்கள் காரணம் தன்னுடைய வாழ்கையில் ஏதேனும் பெரிய பாதகம் நிகழ்துவிடுமோ என்கிற எண்ணம்.தன்னை முழுமையாக கடவுளை நம்பி தன்னுடைய வாழ்கையை ஒப்டைதவர்கள் மிக மிக மிக குறைவாகவே இருக்கிறார்கள், இன்றைய சூழ்நிலையில் அப்படி பட்ட மனிதரை பார்ப்பது என்பது மிக அரிது . இல்லவே இல்லை என்வபவர்கள் முழுமையாக இல்லை என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரத்தையும் அவர்கள் சுட்டி கொடுப்பது இல்லை. இந்த போலி சாமியார்கள்தான் அவர்களின் இலக்கு அவர்களை வைத்து கொண்டு கடவுளை எடை போடுகிறார்கள்.அறிவியலர்கள் நாங்கள் கடவுளின் செயல்களை நாங்கள் நெருங்கி விட்டதாக சொல்லுகிறார்கள்.மனிதன் கடவுளை நெருங்கும் சம்பவம் நிகழ்த்து விடாதா என்று நாமில் எதிர்பர்த்டு கொண்டிருக்கிறோம். ஆனால் சமய ஆர்வலர்கள் இன்னமும் கடவுளின் பாதையில் ஒரு சதவிகிதமகூட பணிக்கவில்லை என்று ஒரு புறம் விவாதிக்கிறார்கள்.மனித உடலில் நிகழும் மாற்றங்களை. அறிவியல் நிகழ்த்தி இருக்கிறதா, "நாம் உண்ணும் உணவு, வெளிவரும் கழிவு" இது எவ்வாறு நடை பெறுகிறது என்பது நமக்கு தெரியும். இதைபோல் ஒரு அறிவியல் துணை கொண்ட ஒரு சாதனம் நிகழ்த்துமா என்பது மிகப்பெரிய கேள்வி. இருக்கிறது என்பவருக்கு "இருக்கிறது" என்பதே கடவுள் .... இல்லை என்பவருக்கு "இல்லை " என்பதே  கடவுள்.கடவுள் இருக்கிறது என்று சொல்லுவதிலும் "போலிகள்"இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களிடமும் "போலிகள்" இருக்கிறார்கள்.கடவுள் நம்மையும் கடந்து சென்றிருக்கலாம்,நம்மை கடக்கும் வரை நாம் உணருவதில்லை