இளமையில் வறுமை வரப்ரசாதம்

இளமையில் வறுமை என்பது மிக கொடுமை என்பது தெரியும் ஒரு மனிதனுக்கு இளமையில் வறுமை வரவே கூடாது என்று எண்ணம் இருந்தாலும் , ஆனால் அதுதான் ஒரு இளைஞனை  செம்மை படுத்த  உதவுகிறது. எவ்வளவு  செலவு செய்தும்  கற்றுக்கொள்ள முடியாத வாழ்வியல் தத்துவத்தை கற்றுத்தர உதவுகிறது.இளமையில் வறுமை தரும் படிப்பினை நம்முடைய எதிர்காலத்தை வளமையாக்கவும்,நமக்கு எதையும் தாங்ககூடிய மனஉறுதியை அளிக்கிறது,இந்த உலகத்தையும் பணத்திற்கான மதிப்பையும் நமக்கு ஒருசேர விளங்க வைக்கிறது.பணபோதையால் கெட்டு சீரழிவதை  தவிர்த்து கல்வி என்ற தேனமுதை நமக்கு வழங்குகின்றது. குடிசுவரை நோக்கி நம் வாழ்வை தள்ளிக்கொண்டு போகாமல் கோபுரத்திற்கு இழுத்து செல்லும் வல்லமை கொண்டுள்ளது,இளமையில் ஏற்படும் வறுமைக்கு நண்பர்கள் தோள்கொடுப்பார்கள் மனம் தொய்வில்லாமல்  பார்த்து கொள்ளுவார்கள்.இதன் மூலம் ஏற்படக்கூடிய படிப்பினை நம் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது.இளமையில் உணரவேண்டிய ஒரு உணர்வு வறுமை, அது  இயற்கையாகவே அமைவது ஒரு வரப்ரசாதம்தான். சில இளைஞர்களுக்கு பணத்தின் அருமையை புரியவைப்பதற்காக பணபோதையால் தேவையில்லாததை கற்றுக்கொண்டு எதிர்காலத்தை வீணடித்து விடாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கள் செயற்கையான ஒரு வறுமையை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பார்கள் அது பல இடங்களில் விபரீதமாக முடியும். எனவே இளமையில் வறுமை  என்பது மனிதனுக்கு கிடைத்த ஒரு அற்புதமான சக்தி அதனை ஏற்றுக்கொண்டு வாழ பழகிகொள்ளுங்கள்.ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள். இளமையை விட, முதுமையில் வறுமை தான் மிக கொடியது அதை புறம் தள்ள இளமையிலேயே வறுமையை சந்தித்து வைர நெஞ்சோடு வறுமையை வெட்டி வீழ்த்திவிட்டு வீறுகொண்டு வாருங்கள்

பணம் வேண்டும் நமக்கும் கிடைக்கும் சிரத்தை இருந்தால்

பணம் வேண்டாம் என்று எந்த மனிதனும் கூறுவதில்லை. அந்த அளவிற்கு பணத்திற்கு வாழ்கையில் முக்கியத்துவம் உண்டு. அது வெறும் காகிதம் தான் இருந்தாலும் அதை மிதித்து விட்டால் அதை தொட்டு வணங்கும் பழக்கம் நம்மில் நிறைய நபர்களுக்கு உண்டு  நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் காரணமாகத்தான் இது நடக்கிறது.பணம் வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் அதை தக்கவைத்து கொல்லுவதற்காக எதையும் செய்வதில்லை .இதிலிருந்து நமது வாழ்கையில் பணம்  என்பது முக்கிய பங்கு வகிக்கிறது எனவே நாம் பணத்தேவையை எப்படி பூர்த்திசெய்வது.சாதாரணமாக நாம் யாரும் நமது மாத வருவாய்  எவ்வளவு என்று கணக்கிடுவதில்லை,அதை போல் எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற கணக்கையும் நாம் செய்வதில்லை, மாத சம்பளத்தை பெற்றவுடன் மனம் போன போக்கில் செலவு செய்வதுதும் மத கடைசியில் பண தேவைக்காக சிந்திப்பதும் வாடிக்கையான ஒன்று.வருவாய் எவ்வளவு என்று சரியாக கணிக்க தெரிந்து கொள்ளுவதுதான் பணம் பண்ணுவதற்கு  மிக முக்கியம், அதை விட  முக்கியமான ஒன்று  நம்முடைய செலவு கணக்கு. போகிறபோக்கில் வாழ்துவிட்டு போவதல்ல வாழ்கை.நம் வாழ்வில் நம்முடன் இருந்த எத்தனையோ நபர்கள்.நம்மை விட்டு வெற்றிபடிகட்டுகளில் ஏறி முன்னேறி கொண்டிருப்பதை தினமும் நினைத்துபாற்பதுண்டு அவர்களை ஏளனம் செய்யாதீர்கள் நம்மிடம் இல்லாதது பண்பு அவர்களிடம் என்ன அதிகபடியாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வேண்டியதை தயங்காமல் எடுத்து கொள்ளுங்கள்.  ஆனால் ஏன் சிலர் மட்டும் அந்த படிக்கட்டுகளில் ஏற மறுக்கிறார்கள்.காரணம் பிறரை குறை கூறுவதனால்தான். வாழ்கையில்  முதலில் நாம் தவிர்க்க வேண்டியது.தகுதிக்கு மீறிய செலவுகளையும்,பகட்டான வழக்கை முறையும் தான்.நாம் உண்டரவேண்டியது நமக்கு தேவையான வாழ்கை முறை எது  என்பதை  அதை புரிந்து கொண்டு அதற்க்கு தேவையானவற்றை சிரமமாக இருந்தாலும் கடைபிடிக்கவேண்டும்.போலியான தகுதியை நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்கள்,அந்த கற்பனை போர்வையை போர்த்திக்கொண்டு வளம் வராதீர்கள் அது ஆபத்தானது உங்களை வளரவிடாது. உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உங்களை எந்த அளவுகோலில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாலே உங்களின் வெற்றிபயணம் ஏன் தடை படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் பணத்தை குறிவைத்தே சிலர் உங்களிடம் பழகுவார்கள் அவர்களை சமாளிப்பதே பெரிய சவாலாக எடுத்துகொண்டு செயல் படவேண்டும் இது தான் நீங்கள் பணம் பண்ணுவதற்கான முதல் படி.அவசர காலத்தில் பிறருக்கு உதவுவது தவறல்ல ஆனால் நீங்கள் உதவி செய்யும் நபரின் நிலைத்தன்மையை பொருத்தும்  உங்களுடைய வாழ்க்கை முறையை பொருத்தும் தான் நம்முடைய உதவி இருக்கவேண்டும்.வாழ்கையில் பணம் வருவதற்கான வழியாக இறந்தால் அந்த பாதையில்  உடனடியாக பயன்பட தயாராகுங்கள், நம்மிடம் இருந்து பணம் செல்வதாக இருந்தால் ஆயிரம் முறை சிந்தித்து செயல் படவேண்டும்.நம்முடைய வழக்கை தரம் உயர்வதற்கு இது மிக மிக முக்கியம்.உங்களிடம் இருக்கும் பணம் தான் உங்களின் மன அமைதியின் ஒரு அங்கம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.உங்கள் கையில் இருந்து பணம் செல்லுவதற்கு காலவரையறை மிக குறைவு, நீங்கள் செலவு செய்த பணத்தை பெறுவதற்கு செலவிடும் காலவரையறை மிக அதிகம் என்பதை மனதளவில் பாடமாக்க வேண்டும்.நாம் இப்போதுள்ள வருவாய் எப்போதும் நமக்கு கிடைக்கும் என்ற அசட்டையான நம்மிக்கையை தவிர்க்க வேண்டும் .சேமிப்பை வார்ப்பதும் அதை முறையாக பராமரிப்பதும் பணம் செய்வதற்கான வழி என்பது உங்களுக்கு தெரியும் ஆனாலும் அதை பெரும்பாலானவர்கள் சரியாக செய்வது இல்லை.நம்மில் பல நபர்களுக்கு வங்கி கணக்கே இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் அதை சரியாக பாராமரிப்பவர்கள் மிகவும் குறைவு.  வங்கி கணக்கு துவங்கி அதை பராமரிப்பது என்பதே சேமிப்பில் மிக பெரிய கலை. அந்த கலையை சரிவரகற்றுக்கொள்ள வேண்டும்.  சேமிப்பதில் முடிந்தவரை பிடிவாதமாக இருங்கள்.பிடிவாதமான சேமிப்பு தான் உங்களை வாழ்கையில் வளர்வதற்கு உதவும்.தேவை இல்லாத செலவு சதவிகிதத்தை புறிந்து கொள்ளுங்கள் அதனை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.மேலும் நாம் சிந்திக்க வேண்டியது ஒன்று அது கடன் வாங்குவது, அவசியம் இல்லாமல் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அவசியத்துடன் கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவேண்டும்.ஒவ்வருமதம் நீங்கள் செய்த தேவை இல்லாத செலவுகளை நீங்களே பட்டியல் இட்டு பார்க்க வேண்டும் அது  எந்த எந்த சந்தர்பத்தில் நிகழ்தவை என்று பார்த்து அதை போல் ஒரு சந்தர்பத்தை தவிர்க்கவேண்டும்.உங்களுக்கு நீங்களே கதாநாயகனாக பிறரிடம் காட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டாம்,அது உங்களை மிக பெரிய  பாதாளத்தில் தள்ளிவிடும். அவர்களாகவே உங்களை ஏற்றுகொள்ளும் வரை பொறுத்திருங்கள் அது உங்களை உயர்த்திக்கொள்ளும்.அதுதான் உண்மையான வளர்ச்சி அது உங்களை அறியாமலேயே நடந்துவிடும்..

நேரம் சரியில்லையா சகோதரா சிந்தியுங்கள்

எனக்கு நேரம் சரியில்லை என்று முடங்கி கிடப்பது என்பது அனைவரது வாழ்கையிலும் வந்து செல்ல கூடிய ஒன்று.  அனைவருக்குமே ஒரே நேரம் தான் இந்த உலகத்தில் கொடுக்கபட்டிருக்கிறது அதை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய நேரம் சரியானதா அல்லது சரியில்லையா என்ற தீர்மானம் வருகிறது என்றுமே நம்முடன் அல்லது நாம் பழகுகின்ற மனிதர்களை பொருத்துதான் நமது வாழ்கையின் பாதை செல்கிறது நமது நேரமும் நமக்கு சாதகமாக இருக்கிறது. முதலில் நாம் நம்மை பற்றி மனசுத்தியுடன் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் வாழ்வின் எந்த நிலையையும் அடைய முடியும் ஆனால் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளவது நாம் நல்ல நேரத்தை நோக்கி பயணிப்பதற்கு உதவியாக இருக்கும். முதலில் தேவையில்லாத நமக்கு  முற்றிலும் ஒவ்வாத செய்கைகளை நினைத்து பார்ப்பது தவிர்க்க வேண்டும்.எதை எப்போது செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்வது தான் நல்லது. நாம் நினைப்பது  செய்வதுதான் சரி என்ற நினைப்பை விட்டு விட்டு நாம் நினைப்பது சரியாக இருந்தாலும் அதை சிந்தித்து பிறகு செயலாக்கத்திற்கு கொண்டுவருவருவது நல்லது.அதிகம் போசுவதை விட அதிகம் கேட்பது நலம் எம்போதுமே எதிலுமே முதன்மையாக கருத்து சொல்லவதை தவிர்க்க வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் முற்றிலும் சரி என்று நினைத்தாலும் நிதானமாக செய்வதுதான் நன்று.நம்முடன் இருப்பவர்கள் அனைவருமே நம் நல்லதிற்காக நம்முடன் பழகுகிறார்கள் என்ற நினைப்பை தவிர்க்கவேண்டும். முக்கியமாக சிந்திக்காமல் கோபபடுவதை முற்றிலுமாக விலக்கவேண்டும்.நம்முடைய கோபம் எபோதுமே நமக்கு நல்லது செய்வது இல்லை.நமுடைய வாழ்வில் ஒரே வகையான  இக்கட்டான சூழ்நிலைகள் திரும்ப திரும்ப நிகழ்வது நம்மில் பலபேர் சந்தித்திருப்போம் ஆனால் நாமில் யாராவது ஏன் மீண்டும் மீண்டும் ஒரே வகையான இக்கட்டான சூழ்நிலைகள் நம்மை ஆட்கொள்கிறது என்று சிந்திக்க மறுக்கிறோம்.தற்காலிகமாக ஒருதீர்வைத்தான் நம்மில் அதிகமானவர்கள் நாடுகின்றோம், இதை போல் சூழ்நிலை மீண்டும் வராமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வை யார் சிந்திக்கிறார்களோ அவர்கள்தான் வாழ்கையில் நல்ல நேரத்தை சந்திக்கின்ற நபர்களாக, வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக திகழ்கிறார்கள், இதைதான் நம் முன்னோர்கள் "நல்ல  மாட்டிற்கு ஒரு சூடு என்று சொல்லுவார்கள்" ஒருமுறை நமக்கு ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையை மீண்டும் வராமல் பார்துகொள்ளவேண்டும் அதுதான் நமக்கு,நம் முன்னேற்றத்திற்கு நம் வாழ்வின் அமைதிக்கு வழி வகை செய்ய கூடிய நல்ல காரணியாக இருக்கும், மீண்டும் மீண்டும் நாம் வாழ்கையில் சூடு பட்டுக்கொண்டே இருந்தால், வாழ்கை பாடத்தை சரிவர புரித்துகொள்ளமலேயே மன அழுத்தத்திலேயே நாம் வாழ்கையை வாழவேண்டிவரும்.நம்முடைய பலத்தை பொறுத்துதான் நாம் தூக்கும் எடை அமையவேண்டும்,அதிக எடையை  தூக்க நினைப்பது தவறல்ல ஆனால் அதற்க்கு முன் நம் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வரவேண்டும் முதலில் எடையை  தூக்கிவிட்டு பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டையான துணிச்சலை முதலில் நம்மை விட்டு அகற்றவேண்டும்.எல்லாமே நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்ற தேவை இல்லாத கற்பனையைநிறுத்திவிட்டு வாழ்ந்து  பாருங்கள் .இதுதான் நல்ல நேரத்தை நோக்கி செல்வதற்கான முதல் படி.அம்பு ஒன்று நம்மை நோக்கிவருகிறது,அதற்கான கவசம் இல்லை  என்றால்அதன் பாதையை விட்டு விலகி எதிர்கொள்ளுவதுதான் நன்மையை தரும். நல்ல நேரத்தை நாம் தேடி செல்வதை விட எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற சிந்திப்பது உங்கள் வாழ்கையில் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும்.

கேரளத்துகாரருக்கு சொந்தமான கப்பல் ஆவணமில்லாமல் ஆயுதத்துடன் தூத்துக்குடியில்

தூத்துக்குடி துறை முகத்தில் அனுமதி இல்லாமல் கடலில் நின்றிருந்த கப்பலில் ஆயுதங்கள் இருந்ததாக கப்பலின் உழியர்கள்   கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் இந்தியாவை சேர்தவர்களும்  அடக்கம்.
இந்த ஆயுதம் தாங்கி வந்த கப்பலின் உரிமையாளரும் ஒரு இந்தியர்தான் கேரளமநிலத்தை சேர்த்தவர் என்று தெரிகிறது. அதிலும் இதில் பிடிபட்ட ஆயுதங்கள் தனிமனிதர்கள் உபயோகிக்க கூடியது   அல்ல என்றும் அது ஒரு அரசாங்கம் வைத்துகொள்ள கூடியதுமான அறிதான ஆயுதங்கள் என்றும் தெரியவருகிறது.அத்தகைய அறிதான ஆயுதங்களை தாங்கிய கப்பல் நம்முடைய கடல் எல்லையில் எந்த விதமான முறையான ஆவணக்களும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருந்திருக்கிறது அதற்க்கான எரிபொருளும் கரையில் இருந்தே எடுத்து செல்ல பட்டதாக கூறப்படுகிறது.இது ஒரு ஆயுதகடத்தலுக்கான முயற்சி என்ற ஒற்றை வரியில் இதை புறம் தள்ளி விட முடியாது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவதற்கு முன் கேரளாவின் கொச்சின் துறைமுகத்தில் கப்பலில் எந்த  ஆயுதங்கள் இல்லை என்ற  சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.கப்பலுக்கான ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் தான் அவர்களுக்கு ஆயுதங்கள் இல்லை என்றசான்றிதழ் வழங்கப்பட்டதா அப்படிஎன்றால் இப்போது அந்த ஆவணங்கள் எங்கே போயின. இந்த கப்பல் எங்கிருந்து எங்கே செல்லுவதற்க்கான அனுமதியை பெற்றிருக்கிறது. இந்த கப்பல் எதற்க்காக, யாரை எதிர்பார்த்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது என்பது போன்ற சந்தேக கேள்விகள் பல எழுகின்றது. இந்த கப்பல் பாது காப்பு பணிக்காக வந்ததாக இருந்தால் எந்த கப்பலின்  பதுகாபிற்க்காக வந்தது என்றும் அந்த பாதுகாக்கப்படவேண்டிய கப்பல் எங்கே போனது போன்ற கேள்விகள் எழுகின்றான். இன்று அந்த கப்பலுடைய பாதுகாப்பு தலைமை அதிகாரி இலங்கையில் தங்கி இருந்ததாக ஒரு செய்திகள் உடகங்களில் உலா வருகிறது. இலங்கை என்றால் தான் தமிழகத்தில் உணர்ச்சியை தூண்டமுடியும் என்பதற்காகவா   இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும். கொச்சின் துறை முகத்தில் தவறுகள் நடக்கவில்லை என்பதை உறுதிபடுத்துவதற்காக இப்படி ஒரு செய்திகள் கசிகின்றனவா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் உள்ள தமிழர்கள்  அதிக கவனத்துடன்  விழிப்புணர்வுடனும்  இருக்கவேண்டியதன் அவசியத்தை தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

பாக்கெட்டில் வருவது பால் தானா

நாம் உபயோகிக்கின்ற பக்கெட் பால் கலப்படமற்றதாக சுத்தமானதாக இருக்கிறதா என்றால் இல்லை.பால் கெட்டுபோகாமல் இருப்பதற்காக உடலுக்கு தீங்குவிளைவிக்கின்ற வேதியியல் பொருள்களை அதனுடன் சேர்த்து அதை பாதுகாத்து கொள்கிறார்கள்.இது மட்டுமல்லாமல் பாலுடைய வென்மைதன்மையை அதிகரித்து  கொளுவதர்க்காக தேவை இல்லாத மனித உடலுக்கு முற்றிலும் ஒவ்வாத வேதி பொருள்களை கலந்து விற்பனைக்கு வருகிறது. இந்த பாலை குழந்தைகளும் அருந்துவார்கள் என்ற உணர்வு இல்லாமல் மனசாட்சியை மறந்து வெறும் பணத்துக்காகவே இத்தகைய முறையில் இந்த பாக்கெட் பாலை இவர்கள் விற்பனைக்கு அனுப்புவதாக நமக்கு தெரியவரும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. உணவு பொருள்களில் கலப்படம் என்றாலே தர்மத்தின் முன் மனிக்கமுடியாத ஒரு குற்றம் அதிலும் குழந்தைகள் அருந்தகூடிய பாலில் நோய்களை பரப்பக்கூடிய வேதி பொருள் கலப்படம் என்பது எந்த கோணத்திலும் மன்னிக்கமுடியாத குற்றம். சமீபகாலமாக கலப்படம் செய்தவர்கள் கைது செய்ததாக எந்த செய்திகளும் வருவதில்லை ஒருவேளை கலப்படம்  செய்வது குற்றம் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதா, தேவை இல்லாத செய்திகளை தேவைக்கு அதிகாமாகவே வெளியிடும் இந்த பத்திரிக்கைகள் இதை போன்ற சில செய்திகளை வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்தை காத்துக்கொள்ள கூடாதா. மக்களும் பால் உபயோகத்தை குறைத்து கொள்ள வேண்டும், வாரத்திற்கு ஒருநாளாவது பால் உபயோகத்தை நிறுத்தி கொள்ளவது நல்லது

மாணவர்கள் கட்டுபாடற்ற காற்றாற்று வெள்ளமா

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள்  பேராசிரியர் ஒருவரை தாக்கி  கொலை செய்யும் அளவிற்கு நடந்து  கொண்டார்கள்  என்றால் இந்த மாணவ சமுதாயம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை.இந்த அளவிற்கு மாணவர்கள் உணர்சிவயப்படுவர்களா என்று நினைத்து பார்க்கும் போது எதிர் கால இந்திய இவர்கள் கையில்தான் என்று கூறிவரும் கூற்றை நாம் மறு பரிசீலனை செய்தாகவேண்டும்.கட்டுபாடற்ற மாணவர்கள்  காற்றாற்று வெள்ளம் போல அது எதற்கும் பயன் தராது  அதை முறைபடுத்தி பயன்டுத்தினால் நன்மை அதிகம்.
தன்னுடைய மகனுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவேண்டும் என்றுதான் எந்த ஒரு தாயும் தந்தையும் எண்ணுவார்கள் அதற்காகத்தான் கட்டுபாடுகள் நிறைந்த கல்லூரிகளிலே கொண்டுபோய்சேர்கிறார்கள்.சரியான முறையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இன்றைய மாணவ சமுதாயம் தன்னையும் சீரழித்து கொண்டு இந்த சமுதாயத்தையும் சீரழிக்கின்ற  வகையில் நடந்து கொள்கிறது. இது வளராமல் இருப்பதற்காக சட்டத்தின் துணை கொண்டு மிகக்கடுமையாக ஒடுக்க படவேண்டும். இல்லை என்றால் இந்த சம்பவம் விரிந்து பரவ தொடங்கிவிடும்.மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுபோடுகள் தான் இதைபோல் செய்கைகளுக்கு காரணம் என்று கனவு கான்பபவர்கள் தினவு எடுத்து வாதிட்டாலும். இந்தகைய செய்கைகள் மன்னிக்க முடியாதவை.மாணவபருவத்திலேயே அதிகாரத்தை கையில் எடுக்கும் பழக்கம் நல்ல ஒரு முன் உதாரணமாக இருக்க முடியாது.இளையவர்களின் சுதந்திரம் என்று கட்டுபாடுகளை உடைத்து எரிய நினைப்பது நல்லதல்ல.இத்தகைய வன்மங்கள் தன் தந்தையின் கட்டுபடுகளின் மீதும் திருப்புவதற்கு வாய்புகள் இருக்கின்றன எனவே இதை மாணவசுதந்திரம் என்ற போர்வையில்  மறைந்து கொள்ளாமல் பார்த்துகொள்ளுவது நல்லது.கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள்தான் உண்மையிலேயே அக்கறையுடன் நடந்து கொள்ளுகிறார்கள் தனக்களித்த பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பணியை செய்கிறார்கள்  என்று பொருள்.ஏதோ வாங்கும் ஊதியத்திற்கு பணியாற்ற நினைக்கும்,முழு சுதந்திரம் என்றபெயரில் மாணவர்களின் போக்கில் விட்டுவிடும்   நபர்கள்  தான் மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இன்றைய மானவசமுதாயம் அரசியலோடு இணைந்தே பயணிக்க தொடக்கி விட்டது இதுவும் கூட புறக்கணிக்க படவேண்டிய ஒன்றுதான். இந்த மாணவர் சமுதாயத்தை நல்வழி படுத்தவும் கல்வி முறையை சீர்படுத்தவும் நல்முயற்சி எடுப்பது தான் இப்போதைய தேவை அதை செய்வதற்கு முன்வந்தால் நல்லது

தமிழருவி மணியனின் ப.ஜ.க பாசம்

காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவரும் காமராஜ் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான மதிப்பிற்குரிய தமிழருவிமணியன்  அவர்கள் பா.ஜ.க.ஆட்சி வரவேண்டும் என்று விருப்புகிறார் என்பதை விட காங்கிரஸ் பழி தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக தமிழகத்தில் ப.ஜ.க  க்கு  கூட்டணியை அமைத்து தரும் முயற்சியில் இறங்கி  இருக்கிறார். தமிழகத்தில் கரைந்து கொண்டிருக்கும் வாக்கு வங்கியை பெற்ற ம.தி.மு.க வையும், இம்போதுதான் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்கி வளர்த்துவரும் தே.மு.தி.க வையும் ப.ஜ.க. கூட்டணியில் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்.ஏன் தமிழருவிமணியன் ப.ஜ.க.வை ஆதரிக்கிறார் என்றால். அவருக்கு காங்கிரசை  பிடிக்காமல் போனதிற்கு காரணம், இவர் ஒரு முன்னாள் காங்கிரஸ் கட்சி தொண்டர் என்பது தான். இந்த முன்னாள் என்ற ஒரு காரணம் போதாதா இவருக்கு காங்கிரஸ் கட்சி பிடிக்காமல் போனதற்கு. தன்னை மதிக்காத கட்சியை எப்பாடுபட்டாவது யாருடன் சேர்ந்தாவது  மண்ணை கவ்வ வைத்து விடவேண்டும் என்ற  கொள்கை பிடிப்போடுதான்  இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இன்றைக்கு  இவர் கொண்டிருக்கும் இயக்கத்தின்  கொள்கைக்கு கொஞ்சமும்  ஒத்துவராத ப.ஜ.க என்ற கட்சியை இவர் ஆதரிக்கிறார்.பெரியார் உலவிய தமிழகத்தில் வெற்றிக்கனியை பறித்துதர துடிக்கிறார்.

இந்தியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்க படுவது முறையா

நம் இந்தியாவில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்க படுவது நடைமுறை சாத்தியமா, இது நிச்சயமாக  எதிர்விளைவைத்தான் உருவாக்கும்.வாக்களிப்பதில் மட்டும் தான் வாக்காளர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.அதையும் பாதிக்கும் வகையில்  இதை போல் ஒரு சட்டம் வரும்  பட்சத்தில் நம் வாக்கை யார் யாருக்கும்  அளித்தால் என்ன நம்வாக்கை அளித்ததற்கான ஒப்புகை சீட்டு நம்மிடம் கொடுத்தால் போதும் என்ற மனநிலக்குதான் இந்த சட்டம் வாக்காளர்களை கொண்டு செல்லுமே தவிர பெரிய தொரு மாற்றத்தை கொண்டுவந்து விடாது.நம் முடைய வாக்காளர்கள் தொழில் முறையாக அவர்களுடைய பிறந்த சொந்த   ஊர்களை விட்டு வெளியே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் அளிப்பதற்கு நாம் என்ன வசதிகள் செய்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்க வேண்டும். தேர்தல் நடைபெறும் நாள்களில் விடுமுறை மட்டும் அளித்து விட்டு வாக்களிப்பது கட்டயமாக்கப்பட்டால் விளைவுகள் வேருமதிரியகத்தான் இருக்கும்.சென்னையை பிறப்பிடமாக கொண்ட ஒருவர் தலைநகரம் டெல்லியில் பணிபுரிந்தால் அவர் வாக்களிக்க சென்னைக்குத்தான் வரவேண்டி இருக்கிறது இது சாத்தியமா என்று பார்க்கவேண்டும்.இதைப்போல் இல்லாமல் அவர்களின் வசிப்பிடத்திலேயே வாக்களிக்க  கூடிய வசதியை ஏற்படுத்தி தந்துவிட்டால் வாக்களிக்கும் சதவிகிதம் தானாகவே அதிகரிக்கும்  தனியாக எந்த சட்ட மாற்றங்களும் தேவைபடாது  

புலம் பெயர்ந்த தமிழர்களின் கறுப்புநாள் அறிவிப்பு சரிதானா.....?

புலம் பெயர்த்த தமிழர்கள் இலங்கை வடக்கு மாகான சபை பதவி ஏற்பு நாளை கறுப்புநாளாக அறிவித்திருப்பதாக தெரிகிறது.தீப்பற்றி எரியும் போதுதான் இந்த ஈழ தமிழர்கள் பெயர்த்தார்கள்.தன்னையே எரித்தாலும் என்னுடைய எரியூட்டிய  சாம்பல் எங்கள் நிலங்களில்  நாங்கள் உலவிய மண்ணில் பரவி கிடக்கட்டும் என்று இறுமாப்புடன் இருந்தவர்கள் ஈழ வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு  தோளோடு தோள் நின்றவர்கள்தான்  இன்றைக்கும் பல இன்னல்களுக்கு மத்தியிலும்  இலங்கையில் வாழும்   தமிழர்கள்.இப்போது தான் விக்னேஸ்வரன் பதவி ஏற்றிருக்கிறார் அவரின் செயல் பாடுகளை அறிவதற்கு கொஞ்சம் கல அவகாசம் கொடுக்க வேண்டும். அவரின்  யோசனையில் தமிழர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அவர் என்ன செய்கிறார். குறைந்த பட்சமாக ஈழம் அமைவதற்கு அவருடைய  வழியில் என்ன செய்யவிருக்கிறார் என்று அவதானித்த பின் தான் எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடுவது நல சிந்தனை.போராட்ட காலத்தில்அந்த மண்ணில்  இருந்தவர்கள்தான் இந்த விக்னேஷ் வரணுக்கும் வாக்களித்து இருக்கிறார்கள் .சற்று பொறுமையுடன் இருந்து பார்க்கலாம். அதைவிடுத்து பதவி ஏற்பு  நாளை கறுப்புநாளாக ஏன் அறிவிக்க வேண்டும்.இவர்கள் ஏன் புலம் பெயர்த்தார்கள்.போராட்டத்தையும்,போரடுபபர்களையும்  அனாதையாக விட்டு விட்டு தங்களின் உயிர்  பாதுகாப்பிற்காக பெயர்த்தார்களா இல்லை வேறு ஏதேனும் கரணம் இருக்கிறதா நமக்கு தெரியவில்லை.எது நடந்தாலும் என்மன்னோடு  போகட்டும் என்று இருந்தவர்களை இவர்கள் கருப்பு நாள் என்று அறிவித்து அங்குள்ள அரசியலை இவர்கள் கையில் எடுக்க முனைகிறார்களா. பெற்ற தாயை தவிக்க விட்டு விட்டு வீட்டை தவிக்க விட்டு ஓடிபோய் விட்டு பலவருடங்கள் கழித்து வந்து இறந்து விட்ட என் தாயிக்கு  ஏன் சமாதி கட்டவில்லை என்று கேட்கும் மகனைபோல்தான் இன்றைய புலம் பெயர்தவர்தவர்களின் கறுப்புநாள் அறிவிப்பு இருக்கிறது. 

ஏற்காடு இடைதேர்தலும் ஆளும் கட்சியும்

ஏற்காடு இடைதேர்தல் அறிவிக்க இருக்கின்ற நிலையில் இந்த இடைதேர்தல் முடிவுகள்  வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்களின் முன்னோட்டமாக அமையும் என்பது தான் இன்றைக்கு தமிழக கட்சிகளின் கணிப்பாக யொருக்கிறது . சரியான திட்டமிடல் இல்லாமல் நாம் தாம் வெற்றி மேருவெம் என்ற இறுமாப்புடன்இந்த தேர்தலை ஆளும் கட்சி சந்திக்குமானால் அதன் முடிவுகள் மிகப்பெரிய பாடத்தை கற்றுகொடுத்துவிடும் அதன் பிரதி மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும்.மூன்றாவது அணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க நினைக்கும் வேளையில் இந்த சட்டமன்ற  இடைதேர்தல் முக்கியமானது என்பதை உணர்ந்து செயல் படுவது முக்கியமானது.ஏற்காடு சட்டமன்ற தொகுதியை மிகப்பெரிய வெற்றியாக வென்றெடுப்பது  என்பது ஆளும் கட்சிக்கு பிகபெரிய சவாலாகத்தான் இருக்கும் கூட்டணியில் குழப்பம் நிலவுகின்ற காரணத்தால். மிக கவனத்துடனேயே இந்த இடைதேர்தல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அனைத்து கட்சிகளும் இந்த ஏற்காடு இடைதேர்தலில் பங்கெடுக்கும்  காரணம் தங்களை  ஒரு சுய பரிசோதனை செய்து கொளுவதர்க்கு இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ளும்.தங்களுடைய பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வருகின்ற மக்களவை தேர்தல் கூண்டணியை முடிவு செய்வதற்கு உதவியாக இருக்கும்.மற்றவர்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் பெரிய மாற்றம் நிகழாது ஆனால் ஆளும் கட்சிக்கு நிச்சயமாக வெற்றியாக  மட்டும் இல்லாமல் அது ஒரு மாபெரும்  வெற்றியாக இருந்தால் ஒழிய இவர்கள் மக்களவை தேர்தலை சிரத்தை இல்லாமல் சந்திக்க முடியாது.ஆளும் கட்சி மக்களவை தேர்தலில்  மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்று செய்திகள் மக்களிடையே உலவ தொடங்கி விட்டது,அதற்க்கு சாமரம் வீசுவதை போல் ஆளும் கட்சியின் தவறான முடிவால் இந்த ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்தால் மக்களின் நினைப்பு பூதாகரமாக உருபெற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் கனவிற்கு முற்று புள்ளி வைத்துவிடும். இந்த ஏற்காடு  இடைதேர்தல் ஒரு தொகுதியை கொடுக்கும் தேர்தல் அல்ல இதன் முடிவு மக்களவை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரதிபலிக்கும் என்பதை கவனத்தில்  கொள்ளுவது நல்லது  .

மோடியின் ஒருகல்லில் இரண்டு மாங்காய்

மோடியினுடைய ஊடக வளர்ச்சி மேகங்கள் கொஞ்சகொஞ்சமாக விலகி உண்மை வெளியில் தெரிய வந்த உடன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறுவதற்காக ஒரு வார்த்தையை உதிர்த்திருக்கிறார் நாட்டிற்கு இப்போதைய தேவை கோவில்கள் அல்ல கழிவறைகள் தான் என்று.இதில் கோவில் கட்ட விரும்பும்,தன்னை விருப்பாத அத்வானிக்கு மறைமுகமாக எதிர்ப்பும் நாட்டுமக்களிடம் நல்ல பெயர்  எடுத்து விடலாம் என்று இந்த வாசகத்தை அழுத்தமாக உச்சரித்து இருக்கிறார்.ஆனால் சிறிது காலத்திற்கு முன் காங்கிரஸ் பிரமுகர் இதையே  சொன்ன போது ப.ஜ.க மற்றும் அதனை உருவாக்கிய அனைத்து கட்சிகளும்  கடுமையாக எதிர்த்தன ஆனால் இன்று அதையே ப.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் சொல்லுவதற்கு காரணம்.தன்னுடைய உடக வெளிச்சத்தை தக்க வைத்து கொள்ளவும் எதிர்ப்பை மீறி செயல் பட கூடிய தலைவர் என்று ஒரு மாயையை மக்களுக்கு உருவாக்கிடவும் தான் இந்த முத்தான வார்த்தை. என்றாலும் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இது உருமாறாமல் சாதாரண மாக எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து விட்டது காரணம் மோடியின் மாயை முன்மை போல் எந்ததாக்கத்தையும் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடிக்கலாம்  அது மக்களின் கையில் உள்ளது. அதற்காக அவர் களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் பநோபாவம் நல்ல அணுகுமுறை கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தமுறை ப.ஜ.க விற்கு மிகமுக்கியமான தேர்தல் இதில் அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் முடிந்த அளவிற்கு அமைதியான முறையில் செயல் பட்டாலே ஆட்சியை கைபற்றகூடிய சூழ்நிலை உருவானது அதை இவர்கள் கை நழுவ விட்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.சுப்ரமணிய சுவாமிகள் வழியை பின்பற்றி நடப்பது  ப.ஜ.க வின் எதிர் காலத்திற்கு அது நல்லது அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும் 
   

நட்பு என்ற ஒரு அற்புதமான உணர்வு

நட்பு என்ற ஒரு அற்புதமான உணர்வு இன்றைக்கு அழிந்தே விட்டது இன்றைக்கு இருக்கின்ற இந்த நட்பு என்ற உணர்வு வார்த்தை அளவிலேயே உலவிக்கொண்டு இருக்கிறது.தன் நலம் பாராமல் தன் நண்பனின் நலம் பெரிதாக எண்ணிய அந்த நட்புணர்வு இன்று மருந்துக்கு கூட நாம் காண்பது அரிதாகிவிட்டது நண்பனாக பழகி துன்பத்தை கொடுப்பவர்கள்தான் இன்றைக்கு அதிகமாக இருக்கிறார்கள்.தன் நண்பனின் குடுப்பத்தை தன் குடும்பமாக பாவித்து உணர்வுகளில் பயணித்தவர்கள் இன்றைக்கு இல்லவேயில்லை என்று அறிவது இன்றைக்கு சிரமமில்லை யாருமே ஒரு புரிந்துணர்வில் நடப்பு பாராட்டுவது இல்லை..நண்பர்கள் என்றபோர்வையில் எந்தனை பகைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் நாம் இன்று என்ன தோன்றுகிறது.நட்பு என்ற ஒன்று இல்லை இல்லவே இல்லை அன்றைய  தேவையை பூர்த்தி செய்தாலே நட்பை காட்டிகொடுக்க தயாராகி விட்ட இந்த உலகில் உண்மையான நட்பு என்பதை நாம் தேடிக்கொண்டு  அலைவது என்பது மாயவலையில் நம் வாழ்வை தொலைக்கும் செயல் என்பதை தவிர என்ன சொல்ல.நட்பு என்பது இருபுறமும் உணரக்கூடிய ஒரு உணர்வு அதை யார் இறைக்கு சரியாக புரிந்து  கொளுகிரார்கள்.வீராப்பிர்க்காக போலியான நட்பை தலையில் தூக்கி வைத்து கொண்டு உங்களின் வாழ்கையை வீனடிகாதீர்கள் உணர்வுகளின் வீரியத்தை புரிந்து கொண்டு வாழ கற்றுகொள்ளுங்கள் வழிபிறக்கும்

காந்தி பிறந்தநாள்

காந்தி என்று சொன்னாலே நம் நினைவில் வருவது அவர் முகம் தான். அவருக்கெண்டு ஒரு அடைமொழி தேவை இல்லை காரணம் யாரும் எந்த காந்தி என்று கேட்பது கிடையாது.அவரை பற்றிய பல மாறுபட்ட கருத்துக்கள் இன்றைக்கு உலவிக்கொண்டு இருக்கிறது அதை புறம் தள்ளி புறம்தள்ளி விட்டு இன்றைக்கும் நாம் அவர் நினைவுகளை சுமக்கிறோம்.இன்றைக்கு இருக்கின்ற சுதந்திர இந்தியாவிலேயே நாம் அரசியல்,அரசாங்க அதிகாரிகளை பற்றி பேசுவதற்கு இன்றும் நம்மில் சிறிய பயம் நமக்குள் இருக்கிறது ஆனால்.அடக்குமுறை இருந்த அடிமை இந்தியாவில் தைரியமாக குரல் கொடுப்பதற்கு நிச்சயமாக ஒரு அசாத்திய மன உறுதி வேண்டும்.சுதந்திர போராட்டத்தை வழி நடத்தினார் என்று வெறுமனே ஒற்றைவரியில் அவர் செய்த அந்த அறவழி போராட்டத்தை ஒதுக்கி தள்ளிவிடமுடியாது.ஆயிரம் ஆயிரம் தலைவர்கள் இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து கொண்டாலும் இந்த மனிதர் மட்டும் ஏன் வித்தியாசப்பட்டு இந்த தேசத்தின் தந்தையாக மதிக்கப்படுகிறார், தென் கோடியில் இருந்து வடகோடி வரைக்கும் இவரை அனைவரும் மதிக்க காரணம் என்ன ? வெற்றிகளை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற சுயநலம் சாரமையாலா.போராட்டங்களை ஒரு அர்பணிப்பு மனதுடன் வெற்றி தோல்விகளை பாரமால் நடத்தியதாலா, காணரம் எதுவாய் இருந்தால் என்ன, மனிதானாய் நாம் இந்த மண்ணில் வாழ வழிவகை செய்தார். இன்று தூற்றுவேருக்கும் சேர்த்தே இந்த சுதந்திரம் அவர் மகாத்மாவாகத்தான் எங்கள் கண்களுக்கு தெரிகிறார் அது எங்கள் பார்வை  கோளாறு என்றால் அந்த பார்வை குறைபாடு இருந்துவிட்டு போகட்டும்.அவர் விதைத்து சென்ற அகிம்சை இந்த மண்ணில் துளிர் விட்டால் நிச்சயம் துப்பாக்கி சத்தங்கள் மௌனிக்கும்.எல்லை கோட்டு யுத்தங்கள் இல்லாமல் போகும்.வாழ்க்கை வாழ்வதற்கே அதை வறைமுரையுடன் வாழ்வது வாழ்விற்கு ஒரு அர்த்தத்தை தரும்.   

தி.மு.க திரை தொழிலாளர்கள் சங்கம் அண்ணா.தி.மு.க திரை தொழிலாளர்கள் சங்கம் இன்னும் பிற ......

தமிழ் திரை உலகிற்கு தனியாக சங்கம் தேவை என்று இயக்குனர் பாரதி ராஜா ஞானகிறுக்கன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தான். காணரம் தமிழகத்தில் நடைபெறுகிற ஒரு திரை துறை சம்பத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ் திரை உலகை சார்ந்தவர்களுக்கு சரியான முறையில் அழைக்க படவில்லை என்பதுதான். தமிழ் நாட்டில் இருக்கிற சங்கத்திற்கு தமிழ் நடிகர்கள் சங்கம் என்று தான்இருந்திருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.இவர்களுக்கு ஒரே சங்கமாக இருப்பது என்பது இபோதைக்கு சாத்திய படாது.காரணம் திரை துறை தமிழகஅரசியலோடு இணைந்து தான் செயல் படுகிறது. எனவே பிற தொழிற்சாலைகளில் அந்தந்த அரசியல் கட்சியின் சார்பாக சங்கங்கள் செயல் படுவது போல் அவர்கள் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பெயரிலே நடிகர்கள் சங்கத்தை தேற்றுவித்து கொள்ளுவது தான் இன்றைய அரசியல் சூழ் நிலை யில் நல்லது இல்லை என்றால் மாறி மாறி அசிங்க படுத்தும் நடவடிக்கை தான் தொடரும்.அரசாங்கம் சார்ந்த தோழி நிறுவனங்களில் கூட தனித்தனியான சங்கங்கள் இருக்கின்றன எனவே நடிகர்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாமே. அவர் அவர் சங்கங்கள் சார்பாக விழகள் எடுத்து கொள்ளலாம். மாற்றுகட்சி நண்பர்கள் விழாக்களில்  கலந்து கொள்ழும் தர்மசங்கடத்தையும் தவிர்க்கலாம். 

திருச்சி மோடியும் வேதாரணியமும்

திருச்சியில் உரையாற்றிய மோடி அவர்கள் தமிழகத்தின் சுதந்திரபோராட்ட வரலாறு தெரியாமல் உரையாற்றினார் என்று உடகங்களில் செய்திகள் வெளியாகியது.மோடிக்கு வேதாரணியம் போராட்டத்திற்கு யார்  தலைமையில் நடந்தது என்று தெரியாமல் இருக்கலாம் காரணம் அவருக்கு தயாரித்து கொடுக்க பட்ட உரையைத்தான் அவர் பேசி விட்டு சென்றிருக்கிறார்  ஆனால் தமிழக  பா.ஜ.க விற்கு தெரியாமல்போனதுதான் வேதனையான செய்தி இதிலிருந்து இவர்களின் தேசப்பட்ட்று தெரிகிறது.மோடியின் உரையை தயாரித்தவர்கள்  தமிழகத்தின் வரலாறு தெரிந்தவர் களாகத்தான் இருப்பார்கள் அப்படி இருக்கும்போது இந்த பிழையை வேண்டும்மென்றே செய்ததாகத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. மறுநாள் நிச்சயம் இதன் தாக்கம் உடகங்களில் வரவேண்டும் என்று எதிர்பார்த்து தான் இந்தகைய பிழை செய்தார்களா என்று என்ன தோன்றுகிறது அல்லது உண்மையிலேயே இவர்களுக்கு சுதந்திர போராட்ட வரலாறு  தெரியாதா, அதை தெரிந்து நாம் என்ன செய்ய போகிறோம் நமக்கு சுதந்திர போராட்டமா இம்போதைக்கி முக்கியம் கனவை நிறைவேற்றுவதுதான் முக்கியம் அதில் இத்தகைய பிழைகளைகள் எல்லாம் ஒன்றும் இல்லை.கப்பலோட்டிய தமிழனையே நாடு வீதியில் விட்டவர்கள்தானே நாம் .