யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி

ஒரு மனிதன் வாழ்வதற்காக  வாழ்க்கைமுறையில் கடைபிடிக்க வேண்டிய குறைத்தபட்ட்ச நெறி முறைகளையாவது கடிபிடிக்க படுகிறதா என்று நாம் பார்த்தோமேயானால் நூற்றுக்கு ஒருவர் கூட தேறுவது கடினம். ஏன் நாம் முறையாக வாழ முடியவில்லைஎன்று என்றைக்காவது நாம் சிந்தித்ததுண்டா, அதற்காக நமக்கு நாமேவாவது வருந்தியதுண்டா,நம்மால் வாழ்கையின் விழிப்பிற்கு விரட்டபட்டவர்களை நாம் எண்ணி வருந்தியதுண்டா கிடையாது ஆனால் நமக்கு நேரும் போது  மட்டும் இந்த உலகை எண்ணி வருந்துகிறோம்.எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணம் வந்த பின்னால். நமக்கு ஏற்படுகின்ற  பினடைவுகளும் இதைப்போல் வாழுகின்ற ஒருவரால் தான் ஏற்படுகிறது என்பதை நாம் உணர்வது கிடையாது. இபோதுள்ள வாழ்கை சூழலில் வளைந்து  கொடுத்துதான் போகவேண்டும் என்று  சொன்னாலும் அதற்க்கென்று  ஒரு எல்லையை வகுத்து கொள்ளவேண்டாமா? அப்படி எல்லையை வகுத்து கொள்ளாமல் வாழ்வது என்பது மிருக வாழ்க்கைக்கு சமமாததல்லவா.இதை நாம் ஏன் சிறிது கூட சிந்தித்து பார்க்க மறுக்கிறோம். இப்படி ஒரு வரை முறை இல்லா வாழ்கை  என்பது  நமக்கு நாமே செய்கின்ற தூரோகம் இல்லையா. வாழ்கையை ஒரு வரைமுறைக்குள் வைத்து கொள்ளாமல். நாம் எப்படிவாழ்க்கையில்  அமைதியை தேடி அலைய முடியும் அந்த அமைதி  எப்படி நமக்கு சாத்தியமாகும். அமைதிஎன்பது நாம் கடை பிடிக்கும் வாழ்கை நெறி முறைகளில்தான் மறைந்திருக்கிறது என்பது தெரிந்திருந்தும் யாரும் அதை கண்டு கொள்ளுவதாகவே  தெரியவில்லை.அமைதியை நாடி எங்கும் அலைய வேண்டியதில்லை அது நாம் வாழும் வாழ்கை நெறி முறைகளில்தான்  அமைத்திருக்கிறது.  குறைந்தபட்சம் நாம் கடைபிடிக்க கூடிய,கடை பிடிக்க முடிந்த  வாழ்கை ஒழுக்க  முறைகளை கடைப்பிடித்து வாழ்த்தாலே நாம் நிமதியாகவும் அமைதியாகவும் வாழமுடியும் என்பதை நாம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாம் நெறி படுத்தி கொண்டால் நம்முடைய வாழ்வு மட்டு மல்லாது நம்முடைய எதி கால சந்ததியினறது வாழ்வும் முறைப்பாடும்.இதை சரிபடுத்தாமல் நாட்டில் எவ்வளுவு பெரிய மாற்றங்கள் வந்தாலும் அது எதற்கும் உதவாது.  யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி 

ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது

யார் வெற்றி பெற்றாலும் பரவா இல்லை ஆனால் ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது.இப்பொது மட்டுமல்ல எப்போதுமே !. தமிழ் நாட்டில் இருந்த சாதீய பாகுபாட்டையும் பெண் சுதந்திரத்தையும் பெற்று தந்த தலைவர் பெரியார். அவரின் அரசியல் நோக்கமில்லாத பதவி பற்றில்லாத போராட்டங்களும் பிரச்சரங்களுமே  தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடிமை விலகலும்  பெண்களின் முனேற்றமும். அப்படி பட்ட தலைவரை செருப்பால் அடித்திருக்க  வேண்டும் என்று சொன்னவரை தேர்தலில் அவருடைய காப்பு தொகையை கூட வாங்க விடாமல் செய்தால் தான். நாம் அனைவரும்  பெரியாருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும். தமிழனை எந்த அளவிற்கு தரம் தாழ்த்து நினைத்திருந்தால் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டு அதே தமிழகத்தில் வாக்குகள் கேட்டு வருகிறார் இந்த H. ராஜா? அவரை நாம் நிச்சயமாக புறம் தள்ள வேண்டும் குறிப்பாக பெண்கள் ஒரு ஒட்டு கூட அவருக்காக வாக்களிக்க கூடாது.பெண்களின் இன்றைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக பெரியார்தான் மிக பெரிய தூண்டுதலாக இருந்து முடித்து காட்டினார்.இபோது இருக்கும்  தலைவர்களை போல் அல்லாமல் எந்தவிதமான  எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தகைய சாதனைகளை செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜா சொன்ன இந்த வாக்கியங்களை சிவகங்கை தொகுதியின் ஒவ்வரு வாக்காளர்களின் காதுகளுக்கு  கொண்டு செல்ல வேண்டிய கடமை பெரியாரின் உண்மை தொண்டர்களுக்கு இருக்கிறது உண்மை தொண்டர்களுக்கு மட்டுமல்ல இந்த உண்மை தெரிந்த அனைவருக்கும் இருக்கிறது. பெரியாரின் போராட்டங்கள் மூலம் பலனடைந்த அனைவரும் இதை ஒரு தவமாக எண்ணி செய்ய வேண்டும்.தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் இல்லை என்பதை இதன் மூலம் நிருபிக்க வேண்டும்  

சீமானுக்கு நன்றி

சீமானுக்கு நன்றி தமிழை தாய்  மொழியாக கொண்டு வாழும் தமிழர்கள் அனைவரும் நிச்சயமாக சீமானுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒரு தமிழ் கலைஞன் வடிவேலுவிற்கு தமிழ் மண்ணிலேயே மிரட்டல் விடுக்கும் போலி தமிழர்களின் எச்சரிக்கைக்கு எதிராகவும் . வடிவேலுவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததிற்காக இந்த நன்றியை சேர்க்க செய்வோம். இன்று அரசியலிலும் சரி அதிகார வர்கத்திலும் வேற்றுமொழியை தாய் மொழியாக கொண்ட இந்த போலி தமிழர்கள் தான் அதிகமாக  ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். இன்று  உச்சகட்டமாக ஒரு தெலுங்கு மன்னன்னை கேலி செய்து விட்டார் என்பதற்காக  தமிழ் கலைஞன் வடிவேலுவை தாக்குவதற்கு துணிந்த இத்தகைய செயலை யாருமே கண்டுகொள்ள வில்லை, வடிவேலு தனித்து விடப்பட்ட நிலையில்தான் சீமான் அவர்கள் இந்த ஆதரவை தெரிவித்திருக்கிறார். எதற்க்காக தெரிவித்தார் என்று ஆராயாமல் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம் . தமிழ் நாட்டில் இருக்கும் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் ஆதரவற்றுத்தான் இருக்கிறார்கள். இதற்க்கு விரைவில் ஒரு தீர்வை கொண்டுவாருங்கள் தமிழர்களே.சுருக்க மாக சொல்ல  வேண்டும் என்றால் இங்கேயும் ஒரு அடிமைத்தனம் தான் தலை தூக்கி  இருக்கிறது இதை மாற்றுவதற்காக ஒரு தலைமை வரவேண்டும்.கிருஷ்ண  தேவராயரை கேலிசெய்து வரும் ஒரு திரை படத்திற்கே இவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் இவர்களின் ரத்தத்தில் துளியேனும் தமிழ் உணர்வு இல்லை என்பதுதான் நமக்கு தெரிகிறது. போலி தமிழர்கள் மிரட்டும் அளவிற்கு  வளர்ந்து விட்டார்கள் நாம் இன்னமும் தூக்கத்திலேயே இருந்தால்,ஏவல்  அடிமை ஆவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.சகோதரனாக பழகி விட்டோம் என்று நெகிழாமல் நம்மை அவன் சக  மனிதனாக கூட மதிக்க வில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டால் ஒழிய தமிழன் என்ற இனம் ஏட்டளவில் தான் வீர தீரத்துடன் இருக்கும்.

தனி ஈழம் கிடையாது ப.ஜ.க கூட்டணி , வைகோ நிலைமை

வைகோவின்  முன் முதற் கொள்கையாக அவர்   சொல்லிகொல்லுவது தனி ஈழம் என்பதை தான். ஆனால் அவருடைய கூட்டணி கட்சி தலைமை தனி ஈழம் என்பது கிடையாது என்பதை அடித்து ஆணித்தனமாக தெளிவாக  கூறிவிட்டது. இப்போது வைகோ என்ன செய்ய போகிறார் என்று தமிழ் நாட்டில் யாரும் உற்று நோக்கவில்லை. காரணம் அவர் எவ்வளவு கொடுத்தாலும் தாங்ககூடியவர் என்பது மக்களுக்கு தெரியும்.ஒரு திரை படத்தில் தவறாக ஈழத்தை சித்தரித்தால் வீறு கொண்டு எழும் வைகோ தனி ஈழம் எல்லாம் கிடையாது என்று ப.ஜ.க தெளிவாக சொன்ன  பினாலும் வீறுகொண்டு எழவில்லை அவர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார் என்றால் என்ன பொருள் என்று விளங்கவில்லை.தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாய எழுச்சியை கொண்டுவத்த பெரியார் அவர்களை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று சொன்ன போது, (பெரியார் செருப்பு வீசப்பட்டாலும்  கவலை படாமல் சமுதாய முன்னேற்றத்திற்க்காக  போராடியவர் என்பது வேறு விஷயம்) என்ன்ன நிலைப்பாடு எடுத்தாரோ அதைதான் இப்போது எடுத்திருப்பார் என்று நாம் அனுமானித்து கொள்ளவேண்டியதுதான். தன்னுடைய வாழ்நாள் கனவு திட்டம் என்று சேது சமுத்திர திட்டத்தை சொல்லிகொள்ளும் வைகோ  அது என்னால் தான் கொண்டுவரப்பட்டது, வாஜ்பாயை சந்தித்து நான்தான் வாதாடி,போராடி பெற்றதாக சொல்லிகொள்ளும் வைகோ இன்று அதே சேதுசமுத்திர திட்டம் முழுவதுமாக முடக்க நினைக்கும் ப.ஜ.க வோடுதான் கூட்டணி அடுத்தட ஆட்சி ப.ஜ.க தான் 300 இடக்களிற்கு மேல்  வெற்றி பெரும் என்று  வீதி வீதியாக முழங்குவது அவர்  அரசியல்  எந்தகையது  என்பதற்கு உதாரணம்.பொருளாதார ரீதியாகத்தான் இடஒதுக்கீடுவேண்டும் என்று முழங்கும் ப.ஜ.க உடன் பெரியாரின்   வழிதோன்றல் என்று தன்னை கூறிகொள்ளும் வைகோ கூட்டடணி வைத்ததை அவர் கட்சியில் இருக்கும் இடஒதுக்கிகீட்டு பட்டியலில் இருப்பவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது நமக்கு தெரியவில்லை.அந்த கருப்பு வேற  இந்த கருப்பு  வேற என்று ஏதேதோ சொல்லி கண்கலங்குவார்களோ புரியவில்லை . விஜயகாந்த் வந்து பரப்புரை செய்யகூடிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட வைகோ தன்  எதிரியை விழ்த்த  ப.ஜ.க யுடன் என்ன ராஜபக்சேயுடன் கூட கூட்டணி வைப்பார்.

வாழ்கை சுவாரஷ்யங்கள் இப்போது இல்லை

சுவாரஷ்யங்களால்  பிணைய  பட்டதுதான்  நமது வாழ்க்கை. நமது வாழ்கையில் நாம் எத்தைனையோ சுவாரஸ்யங்களை உணர்ந்து  அனுபவத்திருக்கிறோம் .அப்படி  நாம் அனுபவித்த பல சுவாரஷ்ய  நிகழ்வுகள் மீண்டும் நமக்கு அதைப்போல் ஒரு   உணர்வை தருவதில்லை. எந்த ஒன்றும் மறைந்திருக்கும் வரை,  அரிதாக  இருக்கும் வரைதான்  நமக்கு  சுவாரஷ்ய உணர்வை கொடுக்கின்றது. அது   விட்டாலோ அல்லது எளிதாகிவிட்டாலோ அதனால் நாம் அனுபவித்த அந்த சுவாரஷ்யத்தை குதூக்கலத்தை நமக்கு கொடுப்பதில்லை. நம் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கலால் நமக்கு கிடைத்த அந்த சந்தோசம்  இப்போது கிடைகிறதா, அனுபவிக்க முடிகிறதா என்றால்  இல்லை என்பதுதான் நம்முடைய விடையாக இருக்கிறது. காரணம் நமக்கு வருடத்திருக்கு ஒருமுறை  அரிதாக காண கிடைத்த அந்த திருவிழாக்கள் இப்போது நம்மருகே எளிதாக தினம் ஒன்றாக காணமுடிகிறது என்பதுதான். அரங்கத்திற்குள் அரங்கேறிய திரைப்பட படபிடிப்புகள், தெருவோரம் நடப்பதை காணும் பொழுது நமக்கிருந்த அந்த திரைப்பட சுவாரஷ்ய உணர்வுகள் இப்போது வருவதில்லை.வாரத்திற்கு ஒருநாள் மட்டும்  நமக்கு கிடைத்த  ஒளியும் ஒலியும்  என்ற அரிதான நிகழ்வு ஒன்று மிக மிக எளிதானதால்  முன்பு  கிடைத்த அந்த சொல்ல முடியாத சுவாரஷ்ய உணர்வு என்று நம்மை விட்டு வெகுதொலைவில் சென்று விட்டது. இதைபோல்தான் நம்முடைய வாழ்கையில் எளிதாக மாற மாற வாழ்கையில் சுவாரஷ்யங்கள் மறைந்து விடுகின்றது. சாரில்லாத கரும்பை போல் நமது வழக்கை  சுவாரஷ்யம் இல்லாத வெறும் சக்கையான வாழ்வாக மாறிவிடுகிறது. வாழ்கையில் எந்த ஒரு சுவரஷ்யமும் இல்லாது வாழ்த்து முடிக்கத்தான் நம்மால் முடிகிறது.    

ஊடகங்கள் ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றா?

ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றாக  கருத படுகின்ற உடகங்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்கின்றனவா?நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை சரியான பாதையில் ஏற்படுத்தி கொடுப்பதற்கு இந்த ஊடகங்கள் தவறி விட்டன. தனிமனித வழிபாட்டையும் மீறி அரசியல் என்பது நமக்கும் நாட்டிற்கும் எந்தவகையில் முக்கியம்ன் என்று எடுத்து கூறி,வேட்பாலர்கலையோ அல்லது கூட்டடணி கட்சிகளையோ சீர்தூக்கி பார்க்கும் அளவிற்கு இந்த மக்களை இந்தனை வருடங்களில்  இந்த ஊடகங்கள் செய்திருக்கின்றனவா, அரசியல் வாதிகளை குறை கூறுவதிலேயே தங்களுடைய வருவாயை பெருக்குவதிலேயும்தான் இவர்கள் குறியாக இருக்கிறார்கள்.அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கங்கள் தாங்கி வருகின்ற நிகழ்சிகள் இருக்கின்றதா, மக்கள் அரசியலை எப்படி பார்க்கவேண்டும் என்ற பார்வைகொண்ட நிகழ்சிகள் ஏதேனும் வருகிறதா.  பிறரை குறை கூறுகின்ற இந்த ஊடகங்கள் தங்களின் பணி இந்த மக்களுக்கு பயன் படும் வகையில் சரியாக இருக்கின்றதா என்று தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்கின்றனவா. இன்றைய நிலை யில் இன்னமும் மோசமாகி மக்கச்ளை குழப்பும் விதமாக செய்திகளை வெளியிடுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிற  ஒரு சுயகட்டுபட்டுட்டன் தமக்கு உண்டான பொறுப்புணர்ச்சியுடன் எந்த ஊடகமும் இங்கே செயல் படுவது கிடையாது.இவர்கள் தரும் இந்த செய்திகளை நம்பி மக்கள் தங்கள் பணத்தை கொடுத்து குப்பைகளை வாங்கி படிக்கிறார்கள் அதை நம்பி வாக்குகளை வழங்குகிறார்கள். இந்த ஊடகங்கள் தங்களின் மனசாட்சிபடி நடப்பது கடினம் தான் பணத்துக்காக இல்லாமல் உண்மைக்காகவும் கொஞ்சம் செய்யல பட்டால் அப்போதுதான்   அது ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இல்லை என்றால்  அவைகள் தூண்கள் அல்ல பெருக்கி வெளிஎன்றவேண்டிய குப்பைகள்  

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதுதான் முக்கியமாக நாம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் சிந்திக்க வேண்டும்.அதனை செயல் வடிவம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக செயல் படகூடிய கட்சியை, தான்தான் என்று ஆணவமாக இருக்கிற மனிதர்களை கொண்ட கட்சியை, தன்னை முன்னிலை படுத்துவதற்க்காக எதைவேடுமானாலும் உண்மை என்று மக்களை நம்மவைக்ககூடிய கட்சியை,தன்னை நிலை நிருத்துவதர்க்காக நம்முடைய அரசியல் முன்னோர்களை தூற்றும் கட்சியை, நாம் நிச்சயமாக புறம் தள்ளவேண்டும்.ஆணவத்தோடு நடந்துகொள்ளும் நமது அண்டை நாட்டின் அதிபர்களை  பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதைத்தான். யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்ககூடியவர்களுக்கு நல்லவர் வல்லவர் என்று பத்திரிக்கை எழுதியதன் விழைவாக அதிபர் ஆக்கியவர் அந்த பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படி காலில் போட்டு மிதித்தார் என்பதும் நமக்கு தெரியும்.பத்திரிக்கைகளே சுதந்திரமாக செயல் பட முடியாத  சூழ்நிலையில் தான் நம்முடைய அண்டை நாடு இருக்கின்றது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதை போல் ஒரு சூழ் நிலை இந்தியாவிற்கு வரவும் கூடாது  வரவும்  விடக்  கூடாது என்பதை மக்கள் மனதில் நிலை நிறுத்தி வாக்களிக்க வேண்டும்.சர்வாதிகரிபோல் செயல் பட கூடிய ஆட்சியாளர்கள் நமக்கு தேவை இல்லை. ஜனநாயகத்தில் சர்வாதிகாரி போல் அட்சி செய்ய நினைபவர்களை நாம் புறம் தள்ள வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அதை நினைவில் வைத்துதான் வாக்கு சாவடிக்கு செல்லவேண்டும்.தன்னுடைய  தேவைகளுக்கு ஏற்றவாறு  சட்டத்தை மாற்ற நினைக்கும் கூட்டத்தை சிறிது கூட  இடம் கொடுக்காமல் விலக்க வேண்டும்.நல்லவர்களை போல் நடிப்பவனை விட பிறர் மீது புழுதிவாரி அவதுருகளை இறைத்து தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள நினைப்பவன் மிகவும் ஆபத்தானவன். தமிழ் நாட்டை பொருத்தவரையில் நாம் இந்த மக்களவை தேர்தலில் மிகவும் நுணுக்கமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.மாநிலங்களை  போல் அல்லாமல் நம்முடைய மாநிலத்தில் வடநாட்டவர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது மிக மிக குறைவு, அதற்க்கு மொழி ஒரு காரணம். அது தடையாக இல்லை என்றால் அரசியலில் கூட நாம் ஆதிக்கம் செலுத்தமுடியாத சூழ் நிலை உருவாக்கி இருக்கும். அரசியலில்  நமக்கு மாநிலத்தில் இருக்கு ஆதிக்கத்தை விட்டு கொடுக்காமல் பார்த்து கொள்ளுவது என்பது மிக மிக முக்கியம்.தமிழகத்தின் முன்னாள் முக்கிய அரசியல் மற்றும் சமுக தலைவர்களை அவதூறாக பேசுவதும் அவர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் தான் இன்றைக்கு சில தேசிய கட்சிகளுக்கு வழமையாக இருக்கிறது. நமுடைய அரசியல் முன்னோடிகள் யாரும் இவர்களுக்கு எந்த விதத்திலும் குறைத்தவர்கள் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்  எனவே யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களை தவிர்த்து மீதமுள்ளவர்களில் யாருக்கு வாக்களிக்க விருபுகிறீர்களோ அவர்களுக்கு வாக்களித்து கொள்ளுங்கள்.தமிழகத்தில் அரசியல் மூக்கணாம்  கயிறு தமிழர்களின் கையில் வைத்து கொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொண்டு வாக்களிப்பது இந்த தேர்தலில் மிக மிக முக்கியம்.பெரியார் மிக மீறிய போராட்டங்களின் மூலம் நமக்கு பெற்றுதந்த சமூக நீதியை காப்பதர்க்கான தருணமாக இதைகருதவேண்டும்.  வடநாட்டவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும் அது நமது அரசியலிலும் இருக்க கூடாது என்பதை புரிந்து கொண்டு கட்சி ஜாதி பாகுபாடின்றி சிந்தாமல் சிதறாமல் வாக்களியுங்கள் அது நமுடைய வருங்கால சந்ததியர்களுக்கு நல்லது.நாம் கொடுக்கின்ற வரம் நமக்கே ஆபத்தாக முடியாமல் பார்த்து வாக்களிக்க வேண்டும்

சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை

நம் தமிழ்  நாட்டில் இருக்கின்ற ஈழத்து குடும்பங்களின் மன உளச்சல்களில்  ஒன்று அவர்கள் வீட்டு பெண் பிள்ளைகளின் திருமணம் என்பதை உணர்ந்தபோது , சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற ஒரு வினா எழுகிறது .தமிழர்களுக்காக அதுவும்   ஈழத்து தமிழர்களுக்க இயக்கம் நடத்திவரும் சீமான் நம்மிடம்  அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்து தமிழ் பெண் ஒருத்தியை  திருமணம் செய்திருக்க கூடாது.  குறைந்த பட்சம் புலம் பெயர்ந்த ஈழதமிழர்களின் குடும்பங்களில் இருந்தாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே.அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அது ஒரு முன் உதாரணமாகி அவரை சார்தவர்களும் செயல்படுத்தி இருப்பார்கள் இங்கே தமிழகத்தில் ஈழத்து அகதிகளில் பலபேர் கல்யாண வயதை தாண்டி முதிர் கன்னிகளாக வேதனையுடன் வாழ்கின்ற பெண்களுக்கும் கல்யாண வாழ்கை என்ற ஒன்றே நமக்கு இல்லை என்ற எண்ணத்தில் இருக்கின்ற நமது ஈழத்து  தமிழ் சொந்தங்களின் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களுக்கும் சீமான் போன்றோர்களும் அவரை பின்பற்றுகிற தமிழ் தோழர்களும் ஏன் ஒரு வெளிச்சத்தை,வாழ்வில் கொடுக்க  கூடாது அனைவரும் இதை செய்யவேண்டும் என்பதல்ல ஒரு சிலராவது செய்திருக்கலாம் என்பது நமது எண்ணம்  ஈழத்து தமிழ் சொந்தங்கள் என்று நாம் கூறிக்கொண்டு இருக்கின்ரோம் ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள தனியார்  கட்டுமான துறையில்  தினக்கூலியாக கூட வேலை வாய்ப்பு மறுக்க படுகிறது என்பது உண்மை . எங்கிருத்தோ வருகின்ற வாடா நாட்டை சேர்ந்த அன்பர்களுக்கு வேண்டி விருப்பி வேலை வழங்கபடுகிறது ஆனால் இங்கேயே இருக்கின்ற இவர்களுக்கு மறுக்க படுகிறது.இதை மனதில் வைத்து செயல் படுத்தல் நல்லது 

தமிழகத்தில் தமிழனை நிம்மதியாக வாழ விட கூடாது

தமிழகத்தில் தமிழனை நிம்மதியாக  வாழ விட கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டு சில அப்பைபுகள் தொடர்ந்து செயல் பட்டு கொண்டு வருகிறது அவர்கள் அணித்திருக்கும் முக மூடி தமிழர் பாதுகாப்பு என்ற உணர்ச்சி சாயம் மூசிய முகமூடிகள் இவர்கள் தமிழர் களுக்காக என்ன செய்தார்கள் என்று பட்டியலிட்டு பார்த்தால் வெறும் கையை மூடி கொண்டு உள்ளே நிறைய இருக்கிறது என்ற மாயா தோற்றத்தை உருவாகியதாகத்தான் இருக்கும். அமைதியான வாழ்க்கைக்கு வழி செய்ய கூடிய தமிழ் தமிழர் பற்றாளர்கள்  இங்கு இல்லை. தன்னலமற்ற தன்னுடைய முயற்சியால் அடிமையாக இருந்த ஒடுக்க பட்ட சமுதாயத்தை எந்த விதமான கலோபரமும் இல்லாமல் சமுகத்தில் அவர்களுக்கும் அந்தஸ்தை பெற்றுதந்த,இன்று பெண்கள் இந்த அளவிற்கு மிக  பெரிய வளர்ச்சி கண்டிருப்பதற்கு காரணமாக இருந்த  தந்தை பெரியார் அவர்களை போல் ஒரு மனிதர் இந்த தமிழ் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு இன்று உருவாக்கி இருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. ஏதாவது அதிரடியாக செய்து தங்களை முன்னிறுத்தி கொள்ளத்தான் முயற்சிகளை செய்கிறார்கள்.அதனால் யார் பாதிக்க பட்டாலும் அதைப்பற்றி கவலை  இல்லை என்ற கொள்கைகளைத்தான் கொண்டிருக்குறார்கள் .இதைப்போல் தனிச்சையாக செயல்படுகின்ற தமிழ் அமைப்புகளை கண்டு கொண்டு புறம் தள்ளுவதுதான் எதிர்கால தமிழர்களுக்கு நல்லது இல்லை என்றால் நம் சொந்த மண்ணில் நாம் அகதிகளை போல் சுற்றி திரியும் நிலைதான் ஏற்படும். ஒரு சில காரியத்தை கருத்தில் கொண்டு அதை முன்னிறுத்தி செயல் பட்டால் தான் அவர்கள் தமிழர் அமைப்புகள் என்று ஒரு தவறான என்னத்தை இங்கே உருவாக்கி விட்டார்கள் எனவே தான் இந்த அமைப்புக்கள் அதை சுற்றியே செயல் படுகின்றன. தமிழகத்தில் சமுதாயமற்றத்திர்க்கு வித்திட்டவர்களில் முதல்வராக இருந்த தந்தை பெரியார் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில்  தைரியமாக பேசும் அளவிற்கு தமிழர் பற்று வேறு திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.எதிர்கால தமிழர்கள் நலமுடன் வாழ்வதற்கு போலி யான இந்த தமிழர் பற்றாளர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

தேமு தி க கட்சி யாருடன் கூட்டணி

தேமு தி க கட்சி யாருடன் கூட்டணி அமைக்க விருக்கிறது என்றுதான் என்றைக்கு தமிழகத்தில் சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் அந்த கட்சியுகட்சியுடைய தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு தன்னுடைய கட்சியில் இருப்பவர்களை டெல்லிக்கு அனுப்புவதில் அவ்வளவாக ஆர்வமில்லை. இந்த தேர்தலில் எவ்வளவு பணம் நாம் பார்க்க முடியும் என்பதுதான் அவர்ருடைய எண்ணம்.கட்சியில் உறுப்பினராக இல்லாதவராக இருந்தாலும் அவருக்கு தேமுதிக சார்பாக போட்டி இடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் தலைவர் எதிர் பார்த்த தொகையை செலுத்தி விட்டால் அவர் யாராக இருந்தாலும் பரவாஇல்லை போட்டி இடுவதற்கு வாய்ப்பு  கிடைக்கும். அதை போல் எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் அவருக்கு சேரவேண்டிய தொகையை செலுத்தி விட்டால் அந்த கட்சியுடன் கூட்டணி  இறுதி செய்யப்படும். தேமுதிக வை பொருத்தவரையில். தனக்குள்ள சந்தை நிலவரத்தை வைத்து பணம் பண்ண வேண்டும் என்பது தான் அதை தவிர வேறு இல்லை. மக்கள் மனம் மாறுவதற்குள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொண்டு செயல் படுகிறார்.

இனி மெய் மெல்ல சாகும்

இன்று நாம் வாழுகின்ற சூழ்நிலை என்பது ஒரு பாதுகாப்பானதா என்று சிந்தித்தோமேயானால் நாம் ஒரு திரிசங்கு நிலையில்தான் வாழ்கிறோம்.பொய்களை புனைந்து உண்மைக்கு எதிரானதொரு நிலையை வெற்றிகரமாக மாற்றுகின்ற   ஒரு அபாயகரமான சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம்.உண்மையை உண்மை என்று நிருபிப்பதர்க்குகூட நாம் நீண்ட நெடிய உழப்பை தரவேண்டி இருக்கிறது. அதே சமயம் பொய்கள் எந்த விதமான கடினமும் இல்லாமல் வெற்றிகரமாக உலாவந்து கொண்டிருக்கிறது.சில சமயங்களில் உண்மையை நாம் ஏன் நிருபிக்க வேண்டும் நாமும் பொய்யுடனே ஒத்து போய்  விடுவோம் என்ற  உச்சகட்டமான எண்ணம் நம்பிடையே வருகிறது,அப்படி ஒத்து போனவர்கள் பலபேர் நம்மிடையே இருக்கிறார்கள்.எப்பொருள் யார் யார் வை கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று நம் அனைவருக்குமே தெரிந்தாலும் நாம் சிந்திப்பதே இல்லை.கன்னல் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்று உனர்திருந்தாலும் எதையும் நாம் நிதானத்துடன் கவனமுடன் கையாள்வதில்லை.நம்முடைய காதுகளில் வருகின்ற செய்திகள் உண்மை உள்ளவையா என்று நாம் சிந்திப்பதே இல்லை எனவே தான் இந்த உண்மைகளை விட பலமடங்கு சக்தி வாந்ததாக பொய் திகழ்கிறது.பொய் சொல்ல பயந்த காலங்கள் எல்லாம் இன்று மறைந்து போய். சர்வ சாதாரணமாக நடப்புலகில் பொய்கள் உலாவருகின்றன. அது உண்மையை கிழே தள்ளி அதன் மீது ஏறி சவாரி செய்து கொண்டு இருக்கிறது.கீழ் நிலை மேல் நிலை என்று பாரபட்சம் பார்க்காமல் இந்த பொய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்படி பாதிக்க பட்ட பிறகும் இவர்கள் உண்மையை நோக்கி செல்லவது இல்லை . சமர்தியமில்லமல் சொன்ன பொய்யால்தான் மாட்டிகொண்டதாக கருதுகிறார்களே தவிர நாம் உண்மையை மறைத்தால் சிக்கி கொண்டதாக கருதுவது இல்லை இவர்கள் மனசாட்சி கூட அவ்வாறு நினைப்பது இல்லை.இதனால் தான்  பல குழப்பங்களும்  நிலையும் இன்று நம்மிடையே இருக்கிறது என்பது நிசர்தனம். இனி உண்மை மெல்ல சாகும் என்பதே  உண்மை.

வைகோ பாரதிய ஜனதா கட்சி பெரியார்

 வைகோ பாரதிய ஜனதா கட்சியுடனான பேச்சிவார்த்தையை  தொடக்கி விட்டார் ஆனால் அவர் அடிக்கடி அரசியல்  ஆசான்  என்று சொல்லும்  பெரியாரை இழிவாக பேசுகின்ற ஒரு கட்சியுடன் கூட்டணி என்று தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.பெரியாரை பல்வேறுவிதமாக உடகங்களில் வசைபாடுகிற ஒரு கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது அவருடைய விருப்பமாக இருக்காலாம்  வேறு யாரும் இவரை கூட்டணிக்கு அழைப்பதாக இல்லை,  என்ன காரணம் என்று நமக்கு தெரியவில்லை.மற்றவர்களை பார்த்து  பெரியாரின் வழி நடப்பவர்கள் இதை செய்யலாமா, அதை  செய்யலாமா, அது  தவறல்லவா   என்று அறிவுரை சொல்லும்  இவர் பெரியாரை நேரிடையாக வசைபாடுகிற கூட்டத்துடன் கைகோர்ப்பது என்பது இவர் வெளியே பெரியாரின் தொண்டராகவும் உள்ளே மோடியின்  விசிவாசியுமாக இருக்கத்தான் விரும்புகிறார் தன்னுடைய அரசியல் ஆசானை  தரம்  தாழ்த்தி  பேசும்போது  குறைந்தபட்சம்  தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டாமா? அவர் யாருடன் வேண்டுமானாலும் கைகோர்த்து அரசியல் செய்யட்டும் ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு இருக்கிற சமத்துவ சமுதாயத்திற்கு அடிகோலியவர்களில்  பெரியாரும் ஒரு காரணமல்லவா,இந்த சமுதாய மாற்றத்திற்கு காரணமான அவரை ஒருவர் அவதுறாக பேசும் போது குறைதபட்சம் கண்டனத்தை பதிவு செய்யாமல் கண்டும் காணமல் போவதுதான் பெரியாரின் வழித்தோன்றல் செய்யும் செயலா? அவருக்கு இந்த சமுதாயம் பெரும் நன்றிகடன் பட்டிருக்கிறது.அதிலும் அவர் பெயரை வைத்து அரசியல் செய்யும் இவர் முதல் நபராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் இவருடைய பெரியாரின் பற்று அரசியலுக்கு மட்டுமல்ல ஆத்மாத்தமானதுதான்  என்பதை உணரலாம்.

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது பின்னடைவுதான்

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது  திமுக விற்கு நிச்சயமாக பினடைவு ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வுதான்.  இது நாடகமாக இருந்தாலும் வரும் நாடுளுமன்ற தேர்தலில் திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்த கூடிய நிகழ்வுதான் இது அமையும் . தேமுதிக, திமுக கூட்டணியில் வந்தாலும், விஜயகாந்தை மாற்றுசக்தியாக பார்த்து வாக்களித்த மக்கள் இந்த முறை கூட்டணி மாறிவிட்டதை கருத்தில் கொண்டு தான் வாக்களிப்பார்கள் அவருக்க முன் கிடைத்த வாக்கு சதவிகிதம் குறைவதற்கான வாய்புகள் தான் அதிகமாக இருக்கிறது. அழகிரி கூற்றுப்படி தேமுதிக கூட்டணி என்பது எல்லா வகையிலும் திமுகாவிற்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும். வேலியில் பேகிற ஓணானை இழுத்தகதையாகத்தான் அமையுமே தவிர மிக பெரிய பலனை தராது.தேமுதிக தனித்து நிற்கும் பட்சத்தில் தான் திமுக விற்கு நன்மையே தவிர அதனுடன் கூட்டணி சேர்வதில் பயன் ஏதும் இல்லை. தேமுதிக தனிமையில் இருக்கிறது எனவே அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் சிறந்த வழி.காங்கிரஸ் சொல்லுவதைத்தான் தேமுதிக கேட்டு செயல்படும். தனியாக எதையுமே செய்வதில்லை அப்படியான ஒரு வழி முறையைத்தான் தேமுதிக தலைமை எடுத்துவருகிறது எனவே தேமுதிகாவுடனான கூட்டணிக்கு  அதிகமான ஆசையுடன் செல்வது என்பது ஆபத்துதான் என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். யானைக்கும் அடிசறுக்கும் என்பதை திமுக தன்னுடைய கூட்டணி அமைப்பதன்  மூலம் ஏற்கனவே  நிருபித்திருக்கிறது எனவே தேமுதிக உடனான கூட்டணி என்பது அத்தி பழம் போலத்தான்.  

அரவிந்த் கேஜ்ரிவால் புறிந்து கொண்டுவிட்டார்

 லைவலியும் காச்சலும்  தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்லுவதுண்டு. அதைப்போல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல்  கொண்டு வியாக்கியானம்  திரிந்த அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு இப்போது புரிகிறது அதனுடைய வலி.தன்னுடைய வீட்டிற்கு யார் எப்போது வந்தாலும் தன்னை சந்திக்காலாம் அதைப்போல் நான் முதல்வரானாலும் அப்படித்தான் இருப்ப்பேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். ஆனால் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல,வெறும் பேச்சிக்கு மட்டுமே உதவும் என்பதை புரிந்து கொண்டுவிட்டதால் தான் தன்னுடைய வீட்டிற்கு பாதுகாப்பை பலபடுத்தி கொண்டுவிட்டார், அதுவும் இல்லாமல் அங்கெ வரும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்திய பின் தான் முதல்வரை சந்திக்க அனுமதிக்க படுகிறார்கள் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் இப்படிதான் இருக்கமுடியும் என்பதை இபோது கேஜ்ரிவால் உணர்த்து கொண்டுவிட்டார், அது மட்டுமல்ல தன்னுடைய வீட்டையும் மாற்றுவதற்கான வேலையை துவங்கிவிட்டார்.எந்த ஒரு நிகழ்வும் அதன் பார்வையை கொண்டு பார்த்தால்தான் அதில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியும். வெளியில் இருந்து எதுவேண்டுமானாலும் பேசமுடியும் காரணம் அது வெறும் கரண்டி எப்படி வேண்டுமானாலும் சுழட்டலாம் ஆட்சி அதிகாரத்தினுள்ளே வரும்போது அப்படி எடுத்தோம் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது காரணம் அது என்னை நிரம்பிய கரண்டி விருப்பம்போல் சுழற்ற முடியாது எதையும் அதனுடைய இடத்தில் இருந்து பார்த்தல் தான் புரியும். தலைவலி இல்லாமல் இருக்கும் போது  அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு தலைவலியின் வேதனை புரியாது இபோது தலைவலி அரவிந்த் கெஜ்ரிவலுக்கு. இப்போது புரியும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வெளியேயும் உள்ளேயும்