அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது பின்னடைவுதான்

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது  திமுக விற்கு நிச்சயமாக பினடைவு ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வுதான்.  இது நாடகமாக இருந்தாலும் வரும் நாடுளுமன்ற தேர்தலில் திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்த கூடிய நிகழ்வுதான் இது அமையும் . தேமுதிக, திமுக கூட்டணியில் வந்தாலும், விஜயகாந்தை மாற்றுசக்தியாக பார்த்து வாக்களித்த மக்கள் இந்த முறை கூட்டணி மாறிவிட்டதை கருத்தில் கொண்டு தான் வாக்களிப்பார்கள் அவருக்க முன் கிடைத்த வாக்கு சதவிகிதம் குறைவதற்கான வாய்புகள் தான் அதிகமாக இருக்கிறது. அழகிரி கூற்றுப்படி தேமுதிக கூட்டணி என்பது எல்லா வகையிலும் திமுகாவிற்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும். வேலியில் பேகிற ஓணானை இழுத்தகதையாகத்தான் அமையுமே தவிர மிக பெரிய பலனை தராது.தேமுதிக தனித்து நிற்கும் பட்சத்தில் தான் திமுக விற்கு நன்மையே தவிர அதனுடன் கூட்டணி சேர்வதில் பயன் ஏதும் இல்லை. தேமுதிக தனிமையில் இருக்கிறது எனவே அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் சிறந்த வழி.காங்கிரஸ் சொல்லுவதைத்தான் தேமுதிக கேட்டு செயல்படும். தனியாக எதையுமே செய்வதில்லை அப்படியான ஒரு வழி முறையைத்தான் தேமுதிக தலைமை எடுத்துவருகிறது எனவே தேமுதிகாவுடனான கூட்டணிக்கு  அதிகமான ஆசையுடன் செல்வது என்பது ஆபத்துதான் என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். யானைக்கும் அடிசறுக்கும் என்பதை திமுக தன்னுடைய கூட்டணி அமைப்பதன்  மூலம் ஏற்கனவே  நிருபித்திருக்கிறது எனவே தேமுதிக உடனான கூட்டணி என்பது அத்தி பழம் போலத்தான்.  

அரவிந்த் கேஜ்ரிவால் புறிந்து கொண்டுவிட்டார்

 லைவலியும் காச்சலும்  தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்லுவதுண்டு. அதைப்போல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல்  கொண்டு வியாக்கியானம்  திரிந்த அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு இப்போது புரிகிறது அதனுடைய வலி.தன்னுடைய வீட்டிற்கு யார் எப்போது வந்தாலும் தன்னை சந்திக்காலாம் அதைப்போல் நான் முதல்வரானாலும் அப்படித்தான் இருப்ப்பேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். ஆனால் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல,வெறும் பேச்சிக்கு மட்டுமே உதவும் என்பதை புரிந்து கொண்டுவிட்டதால் தான் தன்னுடைய வீட்டிற்கு பாதுகாப்பை பலபடுத்தி கொண்டுவிட்டார், அதுவும் இல்லாமல் அங்கெ வரும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்திய பின் தான் முதல்வரை சந்திக்க அனுமதிக்க படுகிறார்கள் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் இப்படிதான் இருக்கமுடியும் என்பதை இபோது கேஜ்ரிவால் உணர்த்து கொண்டுவிட்டார், அது மட்டுமல்ல தன்னுடைய வீட்டையும் மாற்றுவதற்கான வேலையை துவங்கிவிட்டார்.எந்த ஒரு நிகழ்வும் அதன் பார்வையை கொண்டு பார்த்தால்தான் அதில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியும். வெளியில் இருந்து எதுவேண்டுமானாலும் பேசமுடியும் காரணம் அது வெறும் கரண்டி எப்படி வேண்டுமானாலும் சுழட்டலாம் ஆட்சி அதிகாரத்தினுள்ளே வரும்போது அப்படி எடுத்தோம் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது காரணம் அது என்னை நிரம்பிய கரண்டி விருப்பம்போல் சுழற்ற முடியாது எதையும் அதனுடைய இடத்தில் இருந்து பார்த்தல் தான் புரியும். தலைவலி இல்லாமல் இருக்கும் போது  அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு தலைவலியின் வேதனை புரியாது இபோது தலைவலி அரவிந்த் கெஜ்ரிவலுக்கு. இப்போது புரியும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வெளியேயும் உள்ளேயும்