ஊடகங்கள் ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றா?

ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றாக  கருத படுகின்ற உடகங்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்கின்றனவா?நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை சரியான பாதையில் ஏற்படுத்தி கொடுப்பதற்கு இந்த ஊடகங்கள் தவறி விட்டன. தனிமனித வழிபாட்டையும் மீறி அரசியல் என்பது நமக்கும் நாட்டிற்கும் எந்தவகையில் முக்கியம்ன் என்று எடுத்து கூறி,வேட்பாலர்கலையோ அல்லது கூட்டடணி கட்சிகளையோ சீர்தூக்கி பார்க்கும் அளவிற்கு இந்த மக்களை இந்தனை வருடங்களில்  இந்த ஊடகங்கள் செய்திருக்கின்றனவா, அரசியல் வாதிகளை குறை கூறுவதிலேயே தங்களுடைய வருவாயை பெருக்குவதிலேயும்தான் இவர்கள் குறியாக இருக்கிறார்கள்.அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கங்கள் தாங்கி வருகின்ற நிகழ்சிகள் இருக்கின்றதா, மக்கள் அரசியலை எப்படி பார்க்கவேண்டும் என்ற பார்வைகொண்ட நிகழ்சிகள் ஏதேனும் வருகிறதா.  பிறரை குறை கூறுகின்ற இந்த ஊடகங்கள் தங்களின் பணி இந்த மக்களுக்கு பயன் படும் வகையில் சரியாக இருக்கின்றதா என்று தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்கின்றனவா. இன்றைய நிலை யில் இன்னமும் மோசமாகி மக்கச்ளை குழப்பும் விதமாக செய்திகளை வெளியிடுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிற  ஒரு சுயகட்டுபட்டுட்டன் தமக்கு உண்டான பொறுப்புணர்ச்சியுடன் எந்த ஊடகமும் இங்கே செயல் படுவது கிடையாது.இவர்கள் தரும் இந்த செய்திகளை நம்பி மக்கள் தங்கள் பணத்தை கொடுத்து குப்பைகளை வாங்கி படிக்கிறார்கள் அதை நம்பி வாக்குகளை வழங்குகிறார்கள். இந்த ஊடகங்கள் தங்களின் மனசாட்சிபடி நடப்பது கடினம் தான் பணத்துக்காக இல்லாமல் உண்மைக்காகவும் கொஞ்சம் செய்யல பட்டால் அப்போதுதான்   அது ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இல்லை என்றால்  அவைகள் தூண்கள் அல்ல பெருக்கி வெளிஎன்றவேண்டிய குப்பைகள்  

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதுதான் முக்கியமாக நாம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் சிந்திக்க வேண்டும்.அதனை செயல் வடிவம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக செயல் படகூடிய கட்சியை, தான்தான் என்று ஆணவமாக இருக்கிற மனிதர்களை கொண்ட கட்சியை, தன்னை முன்னிலை படுத்துவதற்க்காக எதைவேடுமானாலும் உண்மை என்று மக்களை நம்மவைக்ககூடிய கட்சியை,தன்னை நிலை நிருத்துவதர்க்காக நம்முடைய அரசியல் முன்னோர்களை தூற்றும் கட்சியை, நாம் நிச்சயமாக புறம் தள்ளவேண்டும்.ஆணவத்தோடு நடந்துகொள்ளும் நமது அண்டை நாட்டின் அதிபர்களை  பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதைத்தான். யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்ககூடியவர்களுக்கு நல்லவர் வல்லவர் என்று பத்திரிக்கை எழுதியதன் விழைவாக அதிபர் ஆக்கியவர் அந்த பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படி காலில் போட்டு மிதித்தார் என்பதும் நமக்கு தெரியும்.பத்திரிக்கைகளே சுதந்திரமாக செயல் பட முடியாத  சூழ்நிலையில் தான் நம்முடைய அண்டை நாடு இருக்கின்றது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதை போல் ஒரு சூழ் நிலை இந்தியாவிற்கு வரவும் கூடாது  வரவும்  விடக்  கூடாது என்பதை மக்கள் மனதில் நிலை நிறுத்தி வாக்களிக்க வேண்டும்.சர்வாதிகரிபோல் செயல் பட கூடிய ஆட்சியாளர்கள் நமக்கு தேவை இல்லை. ஜனநாயகத்தில் சர்வாதிகாரி போல் அட்சி செய்ய நினைபவர்களை நாம் புறம் தள்ள வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அதை நினைவில் வைத்துதான் வாக்கு சாவடிக்கு செல்லவேண்டும்.தன்னுடைய  தேவைகளுக்கு ஏற்றவாறு  சட்டத்தை மாற்ற நினைக்கும் கூட்டத்தை சிறிது கூட  இடம் கொடுக்காமல் விலக்க வேண்டும்.நல்லவர்களை போல் நடிப்பவனை விட பிறர் மீது புழுதிவாரி அவதுருகளை இறைத்து தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள நினைப்பவன் மிகவும் ஆபத்தானவன். தமிழ் நாட்டை பொருத்தவரையில் நாம் இந்த மக்களவை தேர்தலில் மிகவும் நுணுக்கமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.மாநிலங்களை  போல் அல்லாமல் நம்முடைய மாநிலத்தில் வடநாட்டவர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது மிக மிக குறைவு, அதற்க்கு மொழி ஒரு காரணம். அது தடையாக இல்லை என்றால் அரசியலில் கூட நாம் ஆதிக்கம் செலுத்தமுடியாத சூழ் நிலை உருவாக்கி இருக்கும். அரசியலில்  நமக்கு மாநிலத்தில் இருக்கு ஆதிக்கத்தை விட்டு கொடுக்காமல் பார்த்து கொள்ளுவது என்பது மிக மிக முக்கியம்.தமிழகத்தின் முன்னாள் முக்கிய அரசியல் மற்றும் சமுக தலைவர்களை அவதூறாக பேசுவதும் அவர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் தான் இன்றைக்கு சில தேசிய கட்சிகளுக்கு வழமையாக இருக்கிறது. நமுடைய அரசியல் முன்னோடிகள் யாரும் இவர்களுக்கு எந்த விதத்திலும் குறைத்தவர்கள் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்  எனவே யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களை தவிர்த்து மீதமுள்ளவர்களில் யாருக்கு வாக்களிக்க விருபுகிறீர்களோ அவர்களுக்கு வாக்களித்து கொள்ளுங்கள்.தமிழகத்தில் அரசியல் மூக்கணாம்  கயிறு தமிழர்களின் கையில் வைத்து கொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொண்டு வாக்களிப்பது இந்த தேர்தலில் மிக மிக முக்கியம்.பெரியார் மிக மீறிய போராட்டங்களின் மூலம் நமக்கு பெற்றுதந்த சமூக நீதியை காப்பதர்க்கான தருணமாக இதைகருதவேண்டும்.  வடநாட்டவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும் அது நமது அரசியலிலும் இருக்க கூடாது என்பதை புரிந்து கொண்டு கட்சி ஜாதி பாகுபாடின்றி சிந்தாமல் சிதறாமல் வாக்களியுங்கள் அது நமுடைய வருங்கால சந்ததியர்களுக்கு நல்லது.நாம் கொடுக்கின்ற வரம் நமக்கே ஆபத்தாக முடியாமல் பார்த்து வாக்களிக்க வேண்டும்

சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை

நம் தமிழ்  நாட்டில் இருக்கின்ற ஈழத்து குடும்பங்களின் மன உளச்சல்களில்  ஒன்று அவர்கள் வீட்டு பெண் பிள்ளைகளின் திருமணம் என்பதை உணர்ந்தபோது , சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற ஒரு வினா எழுகிறது .தமிழர்களுக்காக அதுவும்   ஈழத்து தமிழர்களுக்க இயக்கம் நடத்திவரும் சீமான் நம்மிடம்  அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்து தமிழ் பெண் ஒருத்தியை  திருமணம் செய்திருக்க கூடாது.  குறைந்த பட்சம் புலம் பெயர்ந்த ஈழதமிழர்களின் குடும்பங்களில் இருந்தாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே.அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அது ஒரு முன் உதாரணமாகி அவரை சார்தவர்களும் செயல்படுத்தி இருப்பார்கள் இங்கே தமிழகத்தில் ஈழத்து அகதிகளில் பலபேர் கல்யாண வயதை தாண்டி முதிர் கன்னிகளாக வேதனையுடன் வாழ்கின்ற பெண்களுக்கும் கல்யாண வாழ்கை என்ற ஒன்றே நமக்கு இல்லை என்ற எண்ணத்தில் இருக்கின்ற நமது ஈழத்து  தமிழ் சொந்தங்களின் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களுக்கும் சீமான் போன்றோர்களும் அவரை பின்பற்றுகிற தமிழ் தோழர்களும் ஏன் ஒரு வெளிச்சத்தை,வாழ்வில் கொடுக்க  கூடாது அனைவரும் இதை செய்யவேண்டும் என்பதல்ல ஒரு சிலராவது செய்திருக்கலாம் என்பது நமது எண்ணம்  ஈழத்து தமிழ் சொந்தங்கள் என்று நாம் கூறிக்கொண்டு இருக்கின்ரோம் ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள தனியார்  கட்டுமான துறையில்  தினக்கூலியாக கூட வேலை வாய்ப்பு மறுக்க படுகிறது என்பது உண்மை . எங்கிருத்தோ வருகின்ற வாடா நாட்டை சேர்ந்த அன்பர்களுக்கு வேண்டி விருப்பி வேலை வழங்கபடுகிறது ஆனால் இங்கேயே இருக்கின்ற இவர்களுக்கு மறுக்க படுகிறது.இதை மனதில் வைத்து செயல் படுத்தல் நல்லது