யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி

ஒரு மனிதன் வாழ்வதற்காக  வாழ்க்கைமுறையில் கடைபிடிக்க வேண்டிய குறைத்தபட்ட்ச நெறி முறைகளையாவது கடிபிடிக்க படுகிறதா என்று நாம் பார்த்தோமேயானால் நூற்றுக்கு ஒருவர் கூட தேறுவது கடினம். ஏன் நாம் முறையாக வாழ முடியவில்லைஎன்று என்றைக்காவது நாம் சிந்தித்ததுண்டா, அதற்காக நமக்கு நாமேவாவது வருந்தியதுண்டா,நம்மால் வாழ்கையின் விழிப்பிற்கு விரட்டபட்டவர்களை நாம் எண்ணி வருந்தியதுண்டா கிடையாது ஆனால் நமக்கு நேரும் போது  மட்டும் இந்த உலகை எண்ணி வருந்துகிறோம்.எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணம் வந்த பின்னால். நமக்கு ஏற்படுகின்ற  பினடைவுகளும் இதைப்போல் வாழுகின்ற ஒருவரால் தான் ஏற்படுகிறது என்பதை நாம் உணர்வது கிடையாது. இபோதுள்ள வாழ்கை சூழலில் வளைந்து  கொடுத்துதான் போகவேண்டும் என்று  சொன்னாலும் அதற்க்கென்று  ஒரு எல்லையை வகுத்து கொள்ளவேண்டாமா? அப்படி எல்லையை வகுத்து கொள்ளாமல் வாழ்வது என்பது மிருக வாழ்க்கைக்கு சமமாததல்லவா.இதை நாம் ஏன் சிறிது கூட சிந்தித்து பார்க்க மறுக்கிறோம். இப்படி ஒரு வரை முறை இல்லா வாழ்கை  என்பது  நமக்கு நாமே செய்கின்ற தூரோகம் இல்லையா. வாழ்கையை ஒரு வரைமுறைக்குள் வைத்து கொள்ளாமல். நாம் எப்படிவாழ்க்கையில்  அமைதியை தேடி அலைய முடியும் அந்த அமைதி  எப்படி நமக்கு சாத்தியமாகும். அமைதிஎன்பது நாம் கடை பிடிக்கும் வாழ்கை நெறி முறைகளில்தான் மறைந்திருக்கிறது என்பது தெரிந்திருந்தும் யாரும் அதை கண்டு கொள்ளுவதாகவே  தெரியவில்லை.அமைதியை நாடி எங்கும் அலைய வேண்டியதில்லை அது நாம் வாழும் வாழ்கை நெறி முறைகளில்தான்  அமைத்திருக்கிறது.  குறைந்தபட்சம் நாம் கடைபிடிக்க கூடிய,கடை பிடிக்க முடிந்த  வாழ்கை ஒழுக்க  முறைகளை கடைப்பிடித்து வாழ்த்தாலே நாம் நிமதியாகவும் அமைதியாகவும் வாழமுடியும் என்பதை நாம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாம் நெறி படுத்தி கொண்டால் நம்முடைய வாழ்வு மட்டு மல்லாது நம்முடைய எதி கால சந்ததியினறது வாழ்வும் முறைப்பாடும்.இதை சரிபடுத்தாமல் நாட்டில் எவ்வளுவு பெரிய மாற்றங்கள் வந்தாலும் அது எதற்கும் உதவாது.  யாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி 

ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது

யார் வெற்றி பெற்றாலும் பரவா இல்லை ஆனால் ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது.இப்பொது மட்டுமல்ல எப்போதுமே !. தமிழ் நாட்டில் இருந்த சாதீய பாகுபாட்டையும் பெண் சுதந்திரத்தையும் பெற்று தந்த தலைவர் பெரியார். அவரின் அரசியல் நோக்கமில்லாத பதவி பற்றில்லாத போராட்டங்களும் பிரச்சரங்களுமே  தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடிமை விலகலும்  பெண்களின் முனேற்றமும். அப்படி பட்ட தலைவரை செருப்பால் அடித்திருக்க  வேண்டும் என்று சொன்னவரை தேர்தலில் அவருடைய காப்பு தொகையை கூட வாங்க விடாமல் செய்தால் தான். நாம் அனைவரும்  பெரியாருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும். தமிழனை எந்த அளவிற்கு தரம் தாழ்த்து நினைத்திருந்தால் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டு அதே தமிழகத்தில் வாக்குகள் கேட்டு வருகிறார் இந்த H. ராஜா? அவரை நாம் நிச்சயமாக புறம் தள்ள வேண்டும் குறிப்பாக பெண்கள் ஒரு ஒட்டு கூட அவருக்காக வாக்களிக்க கூடாது.பெண்களின் இன்றைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக பெரியார்தான் மிக பெரிய தூண்டுதலாக இருந்து முடித்து காட்டினார்.இபோது இருக்கும்  தலைவர்களை போல் அல்லாமல் எந்தவிதமான  எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தகைய சாதனைகளை செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜா சொன்ன இந்த வாக்கியங்களை சிவகங்கை தொகுதியின் ஒவ்வரு வாக்காளர்களின் காதுகளுக்கு  கொண்டு செல்ல வேண்டிய கடமை பெரியாரின் உண்மை தொண்டர்களுக்கு இருக்கிறது உண்மை தொண்டர்களுக்கு மட்டுமல்ல இந்த உண்மை தெரிந்த அனைவருக்கும் இருக்கிறது. பெரியாரின் போராட்டங்கள் மூலம் பலனடைந்த அனைவரும் இதை ஒரு தவமாக எண்ணி செய்ய வேண்டும்.தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் இல்லை என்பதை இதன் மூலம் நிருபிக்க வேண்டும்  

சீமானுக்கு நன்றி

சீமானுக்கு நன்றி தமிழை தாய்  மொழியாக கொண்டு வாழும் தமிழர்கள் அனைவரும் நிச்சயமாக சீமானுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒரு தமிழ் கலைஞன் வடிவேலுவிற்கு தமிழ் மண்ணிலேயே மிரட்டல் விடுக்கும் போலி தமிழர்களின் எச்சரிக்கைக்கு எதிராகவும் . வடிவேலுவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததிற்காக இந்த நன்றியை சேர்க்க செய்வோம். இன்று அரசியலிலும் சரி அதிகார வர்கத்திலும் வேற்றுமொழியை தாய் மொழியாக கொண்ட இந்த போலி தமிழர்கள் தான் அதிகமாக  ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். இன்று  உச்சகட்டமாக ஒரு தெலுங்கு மன்னன்னை கேலி செய்து விட்டார் என்பதற்காக  தமிழ் கலைஞன் வடிவேலுவை தாக்குவதற்கு துணிந்த இத்தகைய செயலை யாருமே கண்டுகொள்ள வில்லை, வடிவேலு தனித்து விடப்பட்ட நிலையில்தான் சீமான் அவர்கள் இந்த ஆதரவை தெரிவித்திருக்கிறார். எதற்க்காக தெரிவித்தார் என்று ஆராயாமல் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம் . தமிழ் நாட்டில் இருக்கும் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் ஆதரவற்றுத்தான் இருக்கிறார்கள். இதற்க்கு விரைவில் ஒரு தீர்வை கொண்டுவாருங்கள் தமிழர்களே.சுருக்க மாக சொல்ல  வேண்டும் என்றால் இங்கேயும் ஒரு அடிமைத்தனம் தான் தலை தூக்கி  இருக்கிறது இதை மாற்றுவதற்காக ஒரு தலைமை வரவேண்டும்.கிருஷ்ண  தேவராயரை கேலிசெய்து வரும் ஒரு திரை படத்திற்கே இவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் இவர்களின் ரத்தத்தில் துளியேனும் தமிழ் உணர்வு இல்லை என்பதுதான் நமக்கு தெரிகிறது. போலி தமிழர்கள் மிரட்டும் அளவிற்கு  வளர்ந்து விட்டார்கள் நாம் இன்னமும் தூக்கத்திலேயே இருந்தால்,ஏவல்  அடிமை ஆவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.சகோதரனாக பழகி விட்டோம் என்று நெகிழாமல் நம்மை அவன் சக  மனிதனாக கூட மதிக்க வில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டால் ஒழிய தமிழன் என்ற இனம் ஏட்டளவில் தான் வீர தீரத்துடன் இருக்கும்.

தனி ஈழம் கிடையாது ப.ஜ.க கூட்டணி , வைகோ நிலைமை

வைகோவின்  முன் முதற் கொள்கையாக அவர்   சொல்லிகொல்லுவது தனி ஈழம் என்பதை தான். ஆனால் அவருடைய கூட்டணி கட்சி தலைமை தனி ஈழம் என்பது கிடையாது என்பதை அடித்து ஆணித்தனமாக தெளிவாக  கூறிவிட்டது. இப்போது வைகோ என்ன செய்ய போகிறார் என்று தமிழ் நாட்டில் யாரும் உற்று நோக்கவில்லை. காரணம் அவர் எவ்வளவு கொடுத்தாலும் தாங்ககூடியவர் என்பது மக்களுக்கு தெரியும்.ஒரு திரை படத்தில் தவறாக ஈழத்தை சித்தரித்தால் வீறு கொண்டு எழும் வைகோ தனி ஈழம் எல்லாம் கிடையாது என்று ப.ஜ.க தெளிவாக சொன்ன  பினாலும் வீறுகொண்டு எழவில்லை அவர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார் என்றால் என்ன பொருள் என்று விளங்கவில்லை.தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாய எழுச்சியை கொண்டுவத்த பெரியார் அவர்களை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று சொன்ன போது, (பெரியார் செருப்பு வீசப்பட்டாலும்  கவலை படாமல் சமுதாய முன்னேற்றத்திற்க்காக  போராடியவர் என்பது வேறு விஷயம்) என்ன்ன நிலைப்பாடு எடுத்தாரோ அதைதான் இப்போது எடுத்திருப்பார் என்று நாம் அனுமானித்து கொள்ளவேண்டியதுதான். தன்னுடைய வாழ்நாள் கனவு திட்டம் என்று சேது சமுத்திர திட்டத்தை சொல்லிகொள்ளும் வைகோ  அது என்னால் தான் கொண்டுவரப்பட்டது, வாஜ்பாயை சந்தித்து நான்தான் வாதாடி,போராடி பெற்றதாக சொல்லிகொள்ளும் வைகோ இன்று அதே சேதுசமுத்திர திட்டம் முழுவதுமாக முடக்க நினைக்கும் ப.ஜ.க வோடுதான் கூட்டணி அடுத்தட ஆட்சி ப.ஜ.க தான் 300 இடக்களிற்கு மேல்  வெற்றி பெரும் என்று  வீதி வீதியாக முழங்குவது அவர்  அரசியல்  எந்தகையது  என்பதற்கு உதாரணம்.பொருளாதார ரீதியாகத்தான் இடஒதுக்கீடுவேண்டும் என்று முழங்கும் ப.ஜ.க உடன் பெரியாரின்   வழிதோன்றல் என்று தன்னை கூறிகொள்ளும் வைகோ கூட்டடணி வைத்ததை அவர் கட்சியில் இருக்கும் இடஒதுக்கிகீட்டு பட்டியலில் இருப்பவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது நமக்கு தெரியவில்லை.அந்த கருப்பு வேற  இந்த கருப்பு  வேற என்று ஏதேதோ சொல்லி கண்கலங்குவார்களோ புரியவில்லை . விஜயகாந்த் வந்து பரப்புரை செய்யகூடிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட வைகோ தன்  எதிரியை விழ்த்த  ப.ஜ.க யுடன் என்ன ராஜபக்சேயுடன் கூட கூட்டணி வைப்பார்.

வாழ்கை சுவாரஷ்யங்கள் இப்போது இல்லை

சுவாரஷ்யங்களால்  பிணைய  பட்டதுதான்  நமது வாழ்க்கை. நமது வாழ்கையில் நாம் எத்தைனையோ சுவாரஸ்யங்களை உணர்ந்து  அனுபவத்திருக்கிறோம் .அப்படி  நாம் அனுபவித்த பல சுவாரஷ்ய  நிகழ்வுகள் மீண்டும் நமக்கு அதைப்போல் ஒரு   உணர்வை தருவதில்லை. எந்த ஒன்றும் மறைந்திருக்கும் வரை,  அரிதாக  இருக்கும் வரைதான்  நமக்கு  சுவாரஷ்ய உணர்வை கொடுக்கின்றது. அது   விட்டாலோ அல்லது எளிதாகிவிட்டாலோ அதனால் நாம் அனுபவித்த அந்த சுவாரஷ்யத்தை குதூக்கலத்தை நமக்கு கொடுப்பதில்லை. நம் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கலால் நமக்கு கிடைத்த அந்த சந்தோசம்  இப்போது கிடைகிறதா, அனுபவிக்க முடிகிறதா என்றால்  இல்லை என்பதுதான் நம்முடைய விடையாக இருக்கிறது. காரணம் நமக்கு வருடத்திருக்கு ஒருமுறை  அரிதாக காண கிடைத்த அந்த திருவிழாக்கள் இப்போது நம்மருகே எளிதாக தினம் ஒன்றாக காணமுடிகிறது என்பதுதான். அரங்கத்திற்குள் அரங்கேறிய திரைப்பட படபிடிப்புகள், தெருவோரம் நடப்பதை காணும் பொழுது நமக்கிருந்த அந்த திரைப்பட சுவாரஷ்ய உணர்வுகள் இப்போது வருவதில்லை.வாரத்திற்கு ஒருநாள் மட்டும்  நமக்கு கிடைத்த  ஒளியும் ஒலியும்  என்ற அரிதான நிகழ்வு ஒன்று மிக மிக எளிதானதால்  முன்பு  கிடைத்த அந்த சொல்ல முடியாத சுவாரஷ்ய உணர்வு என்று நம்மை விட்டு வெகுதொலைவில் சென்று விட்டது. இதைபோல்தான் நம்முடைய வாழ்கையில் எளிதாக மாற மாற வாழ்கையில் சுவாரஷ்யங்கள் மறைந்து விடுகின்றது. சாரில்லாத கரும்பை போல் நமது வழக்கை  சுவாரஷ்யம் இல்லாத வெறும் சக்கையான வாழ்வாக மாறிவிடுகிறது. வாழ்கையில் எந்த ஒரு சுவரஷ்யமும் இல்லாது வாழ்த்து முடிக்கத்தான் நம்மால் முடிகிறது.