வாழ்கை சுவாரஷ்யங்கள் இப்போது இல்லை
சுவாரஷ்யங்களால் பிணைய பட்டதுதான் நமது வாழ்க்கை. நமது வாழ்கையில் நாம் எத்தைனையோ சுவாரஸ்யங்களை உணர்ந்து அனுபவத்திருக்கிறோம் .அப்படி நாம் அனுபவித்த பல சுவாரஷ்ய நிகழ்வுகள் மீண்டும் நமக்கு அதைப்போல் ஒரு உணர்வை தருவதில்லை. எந்த ஒன்றும் மறைந்திருக்கும் வரை, அரிதாக இருக்கும் வரைதான் நமக்கு சுவாரஷ்ய உணர்வை கொடுக்கின்றது. அது விட்டாலோ அல்லது எளிதாகிவிட்டாலோ அதனால் நாம் அனுபவித்த அந்த சுவாரஷ்யத்தை குதூக்கலத்தை நமக்கு கொடுப்பதில்லை. நம் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கலால் நமக்கு கிடைத்த அந்த சந்தோசம் இப்போது கிடைகிறதா, அனுபவிக்க முடிகிறதா என்றால் இல்லை என்பதுதான் நம்முடைய விடையாக இருக்கிறது. காரணம் நமக்கு வருடத்திருக்கு ஒருமுறை அரிதாக காண கிடைத்த அந்த திருவிழாக்கள் இப்போது நம்மருகே எளிதாக தினம் ஒன்றாக காணமுடிகிறது என்பதுதான். அரங்கத்திற்குள் அரங்கேறிய திரைப்பட படபிடிப்புகள், தெருவோரம் நடப்பதை காணும் பொழுது நமக்கிருந்த அந்த திரைப்பட சுவாரஷ்ய உணர்வுகள் இப்போது வருவதில்லை.வாரத்திற்கு ஒருநாள் மட்டும் நமக்கு கிடைத்த ஒளியும் ஒலியும் என்ற அரிதான நிகழ்வு ஒன்று மிக மிக எளிதானதால் முன்பு கிடைத்த அந்த சொல்ல முடியாத சுவாரஷ்ய உணர்வு என்று நம்மை விட்டு வெகுதொலைவில் சென்று விட்டது. இதைபோல்தான் நம்முடைய வாழ்கையில் எளிதாக மாற மாற வாழ்கையில் சுவாரஷ்யங்கள் மறைந்து விடுகின்றது. சாரில்லாத கரும்பை போல் நமது வழக்கை சுவாரஷ்யம் இல்லாத வெறும் சக்கையான வாழ்வாக மாறிவிடுகிறது. வாழ்கையில் எந்த ஒரு சுவரஷ்யமும் இல்லாது வாழ்த்து முடிக்கத்தான் நம்மால் முடிகிறது.