ஊடகங்கள் ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றா?

ஜனநாயக்கத்தின் தூண்களில் ஒன்றாக  கருத படுகின்ற உடகங்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்கின்றனவா?நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை சரியான பாதையில் ஏற்படுத்தி கொடுப்பதற்கு இந்த ஊடகங்கள் தவறி விட்டன. தனிமனித வழிபாட்டையும் மீறி அரசியல் என்பது நமக்கும் நாட்டிற்கும் எந்தவகையில் முக்கியம்ன் என்று எடுத்து கூறி,வேட்பாலர்கலையோ அல்லது கூட்டடணி கட்சிகளையோ சீர்தூக்கி பார்க்கும் அளவிற்கு இந்த மக்களை இந்தனை வருடங்களில்  இந்த ஊடகங்கள் செய்திருக்கின்றனவா, அரசியல் வாதிகளை குறை கூறுவதிலேயே தங்களுடைய வருவாயை பெருக்குவதிலேயும்தான் இவர்கள் குறியாக இருக்கிறார்கள்.அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கங்கள் தாங்கி வருகின்ற நிகழ்சிகள் இருக்கின்றதா, மக்கள் அரசியலை எப்படி பார்க்கவேண்டும் என்ற பார்வைகொண்ட நிகழ்சிகள் ஏதேனும் வருகிறதா.  பிறரை குறை கூறுகின்ற இந்த ஊடகங்கள் தங்களின் பணி இந்த மக்களுக்கு பயன் படும் வகையில் சரியாக இருக்கின்றதா என்று தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்கின்றனவா. இன்றைய நிலை யில் இன்னமும் மோசமாகி மக்கச்ளை குழப்பும் விதமாக செய்திகளை வெளியிடுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிற  ஒரு சுயகட்டுபட்டுட்டன் தமக்கு உண்டான பொறுப்புணர்ச்சியுடன் எந்த ஊடகமும் இங்கே செயல் படுவது கிடையாது.இவர்கள் தரும் இந்த செய்திகளை நம்பி மக்கள் தங்கள் பணத்தை கொடுத்து குப்பைகளை வாங்கி படிக்கிறார்கள் அதை நம்பி வாக்குகளை வழங்குகிறார்கள். இந்த ஊடகங்கள் தங்களின் மனசாட்சிபடி நடப்பது கடினம் தான் பணத்துக்காக இல்லாமல் உண்மைக்காகவும் கொஞ்சம் செய்யல பட்டால் அப்போதுதான்   அது ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இல்லை என்றால்  அவைகள் தூண்கள் அல்ல பெருக்கி வெளிஎன்றவேண்டிய குப்பைகள்