சீமானுக்கு நன்றி

சீமானுக்கு நன்றி தமிழை தாய்  மொழியாக கொண்டு வாழும் தமிழர்கள் அனைவரும் நிச்சயமாக சீமானுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒரு தமிழ் கலைஞன் வடிவேலுவிற்கு தமிழ் மண்ணிலேயே மிரட்டல் விடுக்கும் போலி தமிழர்களின் எச்சரிக்கைக்கு எதிராகவும் . வடிவேலுவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததிற்காக இந்த நன்றியை சேர்க்க செய்வோம். இன்று அரசியலிலும் சரி அதிகார வர்கத்திலும் வேற்றுமொழியை தாய் மொழியாக கொண்ட இந்த போலி தமிழர்கள் தான் அதிகமாக  ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். இன்று  உச்சகட்டமாக ஒரு தெலுங்கு மன்னன்னை கேலி செய்து விட்டார் என்பதற்காக  தமிழ் கலைஞன் வடிவேலுவை தாக்குவதற்கு துணிந்த இத்தகைய செயலை யாருமே கண்டுகொள்ள வில்லை, வடிவேலு தனித்து விடப்பட்ட நிலையில்தான் சீமான் அவர்கள் இந்த ஆதரவை தெரிவித்திருக்கிறார். எதற்க்காக தெரிவித்தார் என்று ஆராயாமல் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம் . தமிழ் நாட்டில் இருக்கும் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள் ஆதரவற்றுத்தான் இருக்கிறார்கள். இதற்க்கு விரைவில் ஒரு தீர்வை கொண்டுவாருங்கள் தமிழர்களே.சுருக்க மாக சொல்ல  வேண்டும் என்றால் இங்கேயும் ஒரு அடிமைத்தனம் தான் தலை தூக்கி  இருக்கிறது இதை மாற்றுவதற்காக ஒரு தலைமை வரவேண்டும்.கிருஷ்ண  தேவராயரை கேலிசெய்து வரும் ஒரு திரை படத்திற்கே இவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் இவர்களின் ரத்தத்தில் துளியேனும் தமிழ் உணர்வு இல்லை என்பதுதான் நமக்கு தெரிகிறது. போலி தமிழர்கள் மிரட்டும் அளவிற்கு  வளர்ந்து விட்டார்கள் நாம் இன்னமும் தூக்கத்திலேயே இருந்தால்,ஏவல்  அடிமை ஆவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.சகோதரனாக பழகி விட்டோம் என்று நெகிழாமல் நம்மை அவன் சக  மனிதனாக கூட மதிக்க வில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டால் ஒழிய தமிழன் என்ற இனம் ஏட்டளவில் தான் வீர தீரத்துடன் இருக்கும்.