வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதுதான் முக்கியமாக நாம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் சிந்திக்க வேண்டும்.அதனை செயல் வடிவம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக செயல் படகூடிய கட்சியை, தான்தான் என்று ஆணவமாக இருக்கிற மனிதர்களை கொண்ட கட்சியை, தன்னை முன்னிலை படுத்துவதற்க்காக எதைவேடுமானாலும் உண்மை என்று மக்களை நம்மவைக்ககூடிய கட்சியை,தன்னை நிலை நிருத்துவதர்க்காக நம்முடைய அரசியல் முன்னோர்களை தூற்றும் கட்சியை, நாம் நிச்சயமாக புறம் தள்ளவேண்டும்.ஆணவத்தோடு நடந்துகொள்ளும் நமது அண்டை நாட்டின் அதிபர்களை  பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதைத்தான். யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்ககூடியவர்களுக்கு நல்லவர் வல்லவர் என்று பத்திரிக்கை எழுதியதன் விழைவாக அதிபர் ஆக்கியவர் அந்த பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படி காலில் போட்டு மிதித்தார் என்பதும் நமக்கு தெரியும்.பத்திரிக்கைகளே சுதந்திரமாக செயல் பட முடியாத  சூழ்நிலையில் தான் நம்முடைய அண்டை நாடு இருக்கின்றது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதை போல் ஒரு சூழ் நிலை இந்தியாவிற்கு வரவும் கூடாது  வரவும்  விடக்  கூடாது என்பதை மக்கள் மனதில் நிலை நிறுத்தி வாக்களிக்க வேண்டும்.சர்வாதிகரிபோல் செயல் பட கூடிய ஆட்சியாளர்கள் நமக்கு தேவை இல்லை. ஜனநாயகத்தில் சர்வாதிகாரி போல் அட்சி செய்ய நினைபவர்களை நாம் புறம் தள்ள வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அதை நினைவில் வைத்துதான் வாக்கு சாவடிக்கு செல்லவேண்டும்.தன்னுடைய  தேவைகளுக்கு ஏற்றவாறு  சட்டத்தை மாற்ற நினைக்கும் கூட்டத்தை சிறிது கூட  இடம் கொடுக்காமல் விலக்க வேண்டும்.நல்லவர்களை போல் நடிப்பவனை விட பிறர் மீது புழுதிவாரி அவதுருகளை இறைத்து தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள நினைப்பவன் மிகவும் ஆபத்தானவன். தமிழ் நாட்டை பொருத்தவரையில் நாம் இந்த மக்களவை தேர்தலில் மிகவும் நுணுக்கமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.மாநிலங்களை  போல் அல்லாமல் நம்முடைய மாநிலத்தில் வடநாட்டவர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது மிக மிக குறைவு, அதற்க்கு மொழி ஒரு காரணம். அது தடையாக இல்லை என்றால் அரசியலில் கூட நாம் ஆதிக்கம் செலுத்தமுடியாத சூழ் நிலை உருவாக்கி இருக்கும். அரசியலில்  நமக்கு மாநிலத்தில் இருக்கு ஆதிக்கத்தை விட்டு கொடுக்காமல் பார்த்து கொள்ளுவது என்பது மிக மிக முக்கியம்.தமிழகத்தின் முன்னாள் முக்கிய அரசியல் மற்றும் சமுக தலைவர்களை அவதூறாக பேசுவதும் அவர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் தான் இன்றைக்கு சில தேசிய கட்சிகளுக்கு வழமையாக இருக்கிறது. நமுடைய அரசியல் முன்னோடிகள் யாரும் இவர்களுக்கு எந்த விதத்திலும் குறைத்தவர்கள் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்  எனவே யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களை தவிர்த்து மீதமுள்ளவர்களில் யாருக்கு வாக்களிக்க விருபுகிறீர்களோ அவர்களுக்கு வாக்களித்து கொள்ளுங்கள்.தமிழகத்தில் அரசியல் மூக்கணாம்  கயிறு தமிழர்களின் கையில் வைத்து கொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொண்டு வாக்களிப்பது இந்த தேர்தலில் மிக மிக முக்கியம்.பெரியார் மிக மீறிய போராட்டங்களின் மூலம் நமக்கு பெற்றுதந்த சமூக நீதியை காப்பதர்க்கான தருணமாக இதைகருதவேண்டும்.  வடநாட்டவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும் அது நமது அரசியலிலும் இருக்க கூடாது என்பதை புரிந்து கொண்டு கட்சி ஜாதி பாகுபாடின்றி சிந்தாமல் சிதறாமல் வாக்களியுங்கள் அது நமுடைய வருங்கால சந்ததியர்களுக்கு நல்லது.நாம் கொடுக்கின்ற வரம் நமக்கே ஆபத்தாக முடியாமல் பார்த்து வாக்களிக்க வேண்டும்