ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது

யார் வெற்றி பெற்றாலும் பரவா இல்லை ஆனால் ப.ஜ.க வை சேர்ந்த H.ராஜா தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்று விடக்கூடாது.இப்பொது மட்டுமல்ல எப்போதுமே !. தமிழ் நாட்டில் இருந்த சாதீய பாகுபாட்டையும் பெண் சுதந்திரத்தையும் பெற்று தந்த தலைவர் பெரியார். அவரின் அரசியல் நோக்கமில்லாத பதவி பற்றில்லாத போராட்டங்களும் பிரச்சரங்களுமே  தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடிமை விலகலும்  பெண்களின் முனேற்றமும். அப்படி பட்ட தலைவரை செருப்பால் அடித்திருக்க  வேண்டும் என்று சொன்னவரை தேர்தலில் அவருடைய காப்பு தொகையை கூட வாங்க விடாமல் செய்தால் தான். நாம் அனைவரும்  பெரியாருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும். தமிழனை எந்த அளவிற்கு தரம் தாழ்த்து நினைத்திருந்தால் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டு அதே தமிழகத்தில் வாக்குகள் கேட்டு வருகிறார் இந்த H. ராஜா? அவரை நாம் நிச்சயமாக புறம் தள்ள வேண்டும் குறிப்பாக பெண்கள் ஒரு ஒட்டு கூட அவருக்காக வாக்களிக்க கூடாது.பெண்களின் இன்றைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக பெரியார்தான் மிக பெரிய தூண்டுதலாக இருந்து முடித்து காட்டினார்.இபோது இருக்கும்  தலைவர்களை போல் அல்லாமல் எந்தவிதமான  எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தகைய சாதனைகளை செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜா சொன்ன இந்த வாக்கியங்களை சிவகங்கை தொகுதியின் ஒவ்வரு வாக்காளர்களின் காதுகளுக்கு  கொண்டு செல்ல வேண்டிய கடமை பெரியாரின் உண்மை தொண்டர்களுக்கு இருக்கிறது உண்மை தொண்டர்களுக்கு மட்டுமல்ல இந்த உண்மை தெரிந்த அனைவருக்கும் இருக்கிறது. பெரியாரின் போராட்டங்கள் மூலம் பலனடைந்த அனைவரும் இதை ஒரு தவமாக எண்ணி செய்ய வேண்டும்.தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் இல்லை என்பதை இதன் மூலம் நிருபிக்க வேண்டும்