சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை

நம் தமிழ்  நாட்டில் இருக்கின்ற ஈழத்து குடும்பங்களின் மன உளச்சல்களில்  ஒன்று அவர்கள் வீட்டு பெண் பிள்ளைகளின் திருமணம் என்பதை உணர்ந்தபோது , சீமான் ஏன் ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற ஒரு வினா எழுகிறது .தமிழர்களுக்காக அதுவும்   ஈழத்து தமிழர்களுக்க இயக்கம் நடத்திவரும் சீமான் நம்மிடம்  அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்து தமிழ் பெண் ஒருத்தியை  திருமணம் செய்திருக்க கூடாது.  குறைந்த பட்சம் புலம் பெயர்ந்த ஈழதமிழர்களின் குடும்பங்களில் இருந்தாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே.அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அது ஒரு முன் உதாரணமாகி அவரை சார்தவர்களும் செயல்படுத்தி இருப்பார்கள் இங்கே தமிழகத்தில் ஈழத்து அகதிகளில் பலபேர் கல்யாண வயதை தாண்டி முதிர் கன்னிகளாக வேதனையுடன் வாழ்கின்ற பெண்களுக்கும் கல்யாண வாழ்கை என்ற ஒன்றே நமக்கு இல்லை என்ற எண்ணத்தில் இருக்கின்ற நமது ஈழத்து  தமிழ் சொந்தங்களின் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களுக்கும் சீமான் போன்றோர்களும் அவரை பின்பற்றுகிற தமிழ் தோழர்களும் ஏன் ஒரு வெளிச்சத்தை,வாழ்வில் கொடுக்க  கூடாது அனைவரும் இதை செய்யவேண்டும் என்பதல்ல ஒரு சிலராவது செய்திருக்கலாம் என்பது நமது எண்ணம்  ஈழத்து தமிழ் சொந்தங்கள் என்று நாம் கூறிக்கொண்டு இருக்கின்ரோம் ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள தனியார்  கட்டுமான துறையில்  தினக்கூலியாக கூட வேலை வாய்ப்பு மறுக்க படுகிறது என்பது உண்மை . எங்கிருத்தோ வருகின்ற வாடா நாட்டை சேர்ந்த அன்பர்களுக்கு வேண்டி விருப்பி வேலை வழங்கபடுகிறது ஆனால் இங்கேயே இருக்கின்ற இவர்களுக்கு மறுக்க படுகிறது.இதை மனதில் வைத்து செயல் படுத்தல் நல்லது