இனி மெய் மெல்ல சாகும்

இன்று நாம் வாழுகின்ற சூழ்நிலை என்பது ஒரு பாதுகாப்பானதா என்று சிந்தித்தோமேயானால் நாம் ஒரு திரிசங்கு நிலையில்தான் வாழ்கிறோம்.பொய்களை புனைந்து உண்மைக்கு எதிரானதொரு நிலையை வெற்றிகரமாக மாற்றுகின்ற   ஒரு அபாயகரமான சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம்.உண்மையை உண்மை என்று நிருபிப்பதர்க்குகூட நாம் நீண்ட நெடிய உழப்பை தரவேண்டி இருக்கிறது. அதே சமயம் பொய்கள் எந்த விதமான கடினமும் இல்லாமல் வெற்றிகரமாக உலாவந்து கொண்டிருக்கிறது.சில சமயங்களில் உண்மையை நாம் ஏன் நிருபிக்க வேண்டும் நாமும் பொய்யுடனே ஒத்து போய்  விடுவோம் என்ற  உச்சகட்டமான எண்ணம் நம்பிடையே வருகிறது,அப்படி ஒத்து போனவர்கள் பலபேர் நம்மிடையே இருக்கிறார்கள்.எப்பொருள் யார் யார் வை கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று நம் அனைவருக்குமே தெரிந்தாலும் நாம் சிந்திப்பதே இல்லை.கன்னல் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்று உனர்திருந்தாலும் எதையும் நாம் நிதானத்துடன் கவனமுடன் கையாள்வதில்லை.நம்முடைய காதுகளில் வருகின்ற செய்திகள் உண்மை உள்ளவையா என்று நாம் சிந்திப்பதே இல்லை எனவே தான் இந்த உண்மைகளை விட பலமடங்கு சக்தி வாந்ததாக பொய் திகழ்கிறது.பொய் சொல்ல பயந்த காலங்கள் எல்லாம் இன்று மறைந்து போய். சர்வ சாதாரணமாக நடப்புலகில் பொய்கள் உலாவருகின்றன. அது உண்மையை கிழே தள்ளி அதன் மீது ஏறி சவாரி செய்து கொண்டு இருக்கிறது.கீழ் நிலை மேல் நிலை என்று பாரபட்சம் பார்க்காமல் இந்த பொய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்படி பாதிக்க பட்ட பிறகும் இவர்கள் உண்மையை நோக்கி செல்லவது இல்லை . சமர்தியமில்லமல் சொன்ன பொய்யால்தான் மாட்டிகொண்டதாக கருதுகிறார்களே தவிர நாம் உண்மையை மறைத்தால் சிக்கி கொண்டதாக கருதுவது இல்லை இவர்கள் மனசாட்சி கூட அவ்வாறு நினைப்பது இல்லை.இதனால் தான்  பல குழப்பங்களும்  நிலையும் இன்று நம்மிடையே இருக்கிறது என்பது நிசர்தனம். இனி உண்மை மெல்ல சாகும் என்பதே  உண்மை.