நாடாளுமன்றம்ன்றத்திர்க்கான தேர்தல் அறிவிக்க பட்டுவிட்டது, இனிமேல் ஆரம்பமாகிவிடும் கூட்டணி பற்றிய பேச்சிவார்த்தைகள், தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை சுறுசுறுப்புடன் தொடக்கி விடுவார்கள். அது மட்டுமா அரசியல் சார அன்பர்கள் கூட்டணியை பற்றி செய்தி தாள்களில் அலசுவார்கள். பழங்காலத்து அரசியல் உதாரணத்துடன் விளக்கி செய்திகள் வெளிவரும் வார, மாத, வாரமிருமுறை இதழ்களில் அதனுடனே கருத்து கணிப்பும் பக்கங்களை நிரப்பும். வாக்காளர்களின் பாடுதான் படுதிண்டட்டம் யாருடையா கருத்தைக்கொண்டு நாம் வாக்களிப்பது, எதை பின்பற்றி யாரை தேர்தெடுப்பது என்று, இம்முறை இலங்கை பிரச்சனையை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் இதில் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டியது திருவள்ளுவரின் குறள் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் பெய்பொருள் காண்பது அறிவு" இதை பின்பற்றி வாக்களித்தல் நலம் -நன்றி