லஞ்சம் என்னும் விபச்சாரம்

லஞ்சம் என்னும் வார்த்தை இப்போது எல்லோரிடமும் புகுந்து புறப்பட்டு கொண்டிருக்கிறது.லஞ்சம் வாங்குவது ஒரு அவமானமாக எந்த பணியாளர்களும் கருதுவதில்லை. யார் எப்படி போனால் என்ன தனக்கு ஏதாவது ஒருவழியில் வசதியான வாழ்கை வந்தால் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் தான் இவர்கள் சிறிதேனும் கூசாமல்,வெட்கப்படாமல் ,மனசாட்சிக்கு மதிப்பளிக்காமல் தொடர்த்து லஞ்சத்தில் திளைக்கிறார்கள்.தன்னை தானே வருத்திக்கொண்டு பணம் சம்பாதிக்கும் விபச்சாரி இவர்களை விட எவ்வளவோ மேல்.அவள் தன் கற்ப்பை,மாண்பை விலை பேசுகிறாள .இவர்கள் தாய் நாட்டை கற்ப்பை விலை பேசுகிறார்கள்.வெட்கம், மானம்,பண்பு,மாண்பு,கற்ப்பு,இவற்றை விற்று செய்யும் தொழில் விபச்சாரம் என்னும் போது ,லஞ்சம் வாக்குபவர்களும் விபசாரர்கள்தான்.