மோடி மஸ்தான்

மோடி மஸ்தான்  என்றால் தெருவில் ஒரு கூட்டத்தை  கூட்டி வைத்து கொண்டு  அந்த கூட்டத்தின் நடு  நடுவே மோடி மஸ்தான் சார்ந்த நபர்கள் இருந்து கொண்டு அவரின் புகழ் பாடி கொண்டிருப்பார்கள் .   எல்லாவிதமான பிரச்சனைக்கும் தன்னிடம் தீர்வு இருக்கிறது என்று சொல்லி கொண்டு கூடி இருக்கின்ற கூட்டத்தை தன்வய படுத்தி தன்னை ஒரு சக்தி வாய்த்த நபராக காட்டி கொள்ளுபவன்.உண்மையில் அப்படிஒரு சக்தி அவனுக்கு கிடையாது.அது உண்மை அல்ல என்று தெரித்தவர்கள் கூட அந்த மோடி மஸ்தான் செய்யும் நபரை நெருக்குவதில்லை காரணம்.அவன் கூறும் அச்சமூட்டும் வார்த்தைகளினால் ஏற்படும் சிறு பயம்!.

அதை போலத்தான் இன்றைய அரசியலில் சில மோடி மஸ்தான்கள்  இருக்கிறார்கள்.தன்னால் மட்டுமே  இந்தியாவை வல்லரசாக  மாற்றமுடியும் என்று சொல்லுகிறார்கள்.ஏழைகள் இல்ல இந்தியாவை  படைக்கும் படைப்பாளியாக தன்னைகாட்டி கொள்ளுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொல்லுவதை போல  "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது "என்பதை போலத்தான் இந்த நாயகர்களின் பிம்பங்கள். சுரைக்காய் என்று காகிதத்தில் எழுதுவது சுலபம், அதை சமத்து சாப்பிட முடியாது.என்பதை சுற்றி மக்கள் உணர்த்திருந்தாலும் அரசியல் மோடி மஸ்தான் களை பற்றி பேசுவதற்கு தயங்குகிறார்கள் காரணம், எப்படி தெருவில் இருக்கும் மோடி மஸ்தானின்  வார்த்தைகளுக்கு பயந்து செல்லுகிறார்களோ அதை போலத்தான் இவர்களை பற்றி பேசினால் நாம் ஒன்றும் தெரியாத ஆசாமியாகி விடுவோமோ என்ற வெட்கம் காரணமாக இந்த அரசியல் மோடி மஸ்தானின் மகுடிக்கு மயங்குகிறார்கள் பின் இவர்களே  அவர்களின் புகழ் பாட தொடக்குகிறார்கள்.

 அலுவலகத்தில் தன்னை முதன்மை படுத்துவதற்காக  எந்த  ஒரு வேலையையும் செய்யாமல் எல்லா  வேலையையும் தான் தான் முன்னின்று செய்தததாக,தன்னுடைய மேலதிகாரிகளுக்கு காட்டிகொள்வார்கள்.
அதை போலத்தான் இந்த அரசியல் மோடி மஸ்தான்கலும் எதற்க்கெடுத்தாலும் தன்னை முதன்மை படுத்தி கொளுவதர்க்காக. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கதைகளை தன்  புகழ் பாடிகளை வைத்து  பாட கொண்டிருப்பார்கள், இத்தகைய அரசியல் மோடி மஸ்தான்கள் மிகவும் கண்டிக்க தக்கவர்கள்,  கவனமுடன்  கவனிக்க தக்கவர்கள்.