டெல்லியில் ஆம் ஆத்தி கட்சி....

டெல்லியில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது .யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றமையால் யாரும் ஆட்சியமைக்க முன்வரவில்லை.மக்கள் தங்களுடைய கடமையை நிறைவேற்றிவிட்டார்கள் யார் ஆட்சி நடத்துவது என்று இனிமேல் தீர்மானிக்க வேண்டியது  வெற்றிபெற்ற வேட்பாளர்கள்தான் அது அவர்களின் கடமை. மீண்டும் தேர்தலை சந்தித்து யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் மீண்டும் தொடங்கிய நிலைக்கேதான் வரவேண்டும் எனவே மீண்டும் தேர்தல் என்பது தேவை இல்லதாவேலை.நம் அரசியல் சாசன முறைப்படி தேர்தல் நடந்து மக்களும் தங்களுடைய தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள் எனவே வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஒன்று கூடி ஆட்சி அமைப்பதுதான் முறை அதை தவிர்த்து தங்களுடைய பொறுப்பை தட்டி கழிப்பது என்பது சரியாக முடிவாக இருக்காது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைக்கலாம்.இவர்களுக்கு இடையுறு செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல் படுமாயின் அப்போது  ஆட்சியை  கலைத்து விட்டு மக்கள் மன்றத்தை சந்தித்தால் அறுதி பெரும்பான்மை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை வாக்காளர்கள் எடுப்பார்கள். அறுதி பெரும்பான்மை கொடுத்தால்தான் நான் ஆட்சி அமைக்க முயற்சி செய்வோம் என்று சொல்லுவது சரியா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.மக்களால் தேர்தெடுத்த பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு தலைவரை தேர்தெடுத்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது தானே நமது தேர்தல் முறை அதை இவர்கள் ஏன் செயல் படுத்த தயங்குகிறார்கள்.மக்கள் எல்லோரையும் திருப்பதி படித்தவேண்டும் என்பது மிகக்கடினம் ஒரு சாரார் எப்போதும் குறை கூறு பவர்கலாகத்தான் இருக்கிறார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் குற்றமில்லாத மனிதன் யாரும் இல்லை.