பெண்களும் பாலியல் தொந்தரவும்

பெண்களின் பாதுகாப்பிற்கா உருவாக்க பட்ட சட்டங்கள் இன்று திசைமாறி எதற்கெல்லாமோ பயன் பட தொடக்கி விட்ட து. சமுதாயத்தில் உயர் பதவியில் இருக்க கூடியவர்கள் மீது அவர்களின் பெண் உதவியாளர்கள் சுமத்தும் இத்தகைய பாலியல் குற்றங்கள் சரியானவைதானா இல்லை அந்த அதிகாரிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புனையபட்டவையா என்பது  நமக்கு புரிவதில்லை.பலமுறை இதை  போல் என்னிடம் நடந்தது கொண்டார் என்றுதான் பாலியல் குற்றம் சாட்டும் பெண்கள் சொல்லுகிறார்கள்.பலமுறை தொந்தரவு கொடுத்த ஒரு அதிகாரியை இப்போது மட்டும் ஏன்  புகார் கொடுக்க வேண்டும் அதன் காரணம் என்ன? இது வரை அவர் கொடுத்தா பாலியல் தொந்தரவிர்க்கான காரியங்கள் முடிக்க பட்டு விட்டனவா,இப்பொது காரியங்கள் முடிக்காமல் இருப்பதால் தான் புகார்  கொடுக்க பட்டதா என்பதையும் நாம் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.சாதாரணமான வாழ்கை வாழக்கூடிய பெண்கள் கூட தன்னுடைய அதிகாரி தன்மீது அத்து மீறும் போது உடனடியாக நடவடிக்கையை எடுத்து விடுகிறார் அது அவர் அந்த நிறுவனத்தை விட்டு விலகுவதாக கூட இருக்கலாம் அது சரியா தவறா என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு முடிவை எடுக்க கூடிய நிலைக்கு வந்து விடுகிறாள், ஆனால் இந்த புகார்  கொடுக்க கூடிய பெண்கள் வாழ்கை சூழ் நிலையை அறிந்தவர்கள்  சட்டத்தின் பாதுகாப்பையும் அறிவார்கள் இவர்கள் அதிகாரி வரம்பு மீறும் போதே அந்த குற்றத்தை வெளிகொண்டுவருவதில்லை.தன்னுடைய அதிகாரியின் மூலம் காரியங்களை சாதித்து கொள்ளும்வரை இருந்து விட்டு எப்போது அது முடியாது என்று வருகிறதோ அப்போதான் இவர்களுக்கு வேகம் வருகிறது புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. தனுடைய மேல் அதிகாரியை தன்வயபடுத்துவதர்க்கு அவருக்கு கீழ் பணிபுற்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதாவது செய்து அவர்களுக்கு நெருக்க மாணவர்களை போல் காட்டி கொள்ளுவார்கள் அது அவர்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.அந்த அதிகாரி மோதிக்கொள்ளும் சூழ் நிலை வரும்போது ஆண் ஊழல் புகாரை கொடுக்கிறான் பெண்களோ இதை போல் ஒரு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.சமுதாயத்தில் அந்த அதிகாரியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த கூட அவருக்கு பிடிக்காத சில  விஷமிகள் இதை செய்வதற்கு துணியலாம். பாலியல் குற்ற வலைக்குள் ஒரு ஆண் அவனே விழுகிறானா அல்லது அந்த வலைக்குள் ஒரு பெண்ணால் விழவைக்க படுகிறானா, குற்றம் உண்மையில் நடந்ததாக கூட இருக்கலாம் ஆனால் அதை செய்ய தூண்டியது அவன் மட்டுமே உணர்சியின் பிடியில் செய்தானா  அல்லது உணர்ச்சியை தூண்டிவிட்டு அந்த குற்றத்தை செய்ய வைப்பது பெண்களா என்பதை நாம் உணரவேண்டும்.எப்படியாயினும் இந்த சட்டத்தால் சாதாரண பெண்களுக்கு கிடைக்கக கூடிய பாதுகாப்பு தொடரத்தான் வேண்டும். பாலியல் குற்றத்தை செய்யவில்லை என்று ஒரு ஆண்  மகன் நிரூபித்தாலும் அதன் வலியை அவன் இந்த சமுதாயம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும் அதிலிருந்து விடுபட வெகுநாட்கள் ஆகும் என்பதே உண்மை.