பணம்

ணம் என்பது மனிதவாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பதை நாம் மறுக்க முடியாது.அதற்காக ஏமாற்றுவதும்,மற்றவர்களை எமாற்றுகாரர்கலாக சித்தரிப்பதும் சரியா என்பது நமக்கு முன் நிற்கும் ஆட்சரியதரவைக்கும் ஒரு கேள்வி? இதற்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடிவதில்லை, நமக்கு வந்தால் ரத்தம்தான் என்று  ஆணிதனமாகவும் அடுத்தவருக்கு வரும் போது தக்காளி சட்டினியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்புவதும் தான் இன்றைக்கு அனைவரிடமும் அதிகமாக இருக்கிறது. நாம் நமக்கு சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ அதைதான் சரியாக அமையவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் அதற்கு வலு சேர்பதற்காக பிறர் மீது சேற்றை வாரி இறைப்பாதும் இன்றைக்கு வழக்கை முறையின் ஒரு அங்கமாக இருக்கிறது.இவை அனைத்தும் பணத்துக்காகத்தான் அன்றி வேறெதற்கும் இல்லை. பணம் என்பது இன்றைய  மக்களுக்கு முக்கியமானதாக ஆகிவிட்டபடியால் எதை செய்தாவது பணத்தை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பது தான்  முக்கிய முதல் காரணியாக இருக்கிறது.பணம் ஒன்றுதான் இன்றைக்கு இந்த உலகத்தை நம்மை நிலை நிலைநிறுத்தி கொள்ளுவதற்கான ஒரே வழி யாக மக்கள் நினைக்கிறார்கள் அது ஓரளவிற்கு உண்மை என்பதை நாம் ஒத்துகொள்ளத்தான் வேண்டும்.பிறர் வாழ்வை கெடுத்ததுதான் தன்னுடைய பணத்தேவையை தன்னிறைவு செய்து கொள்ளும் நிலை சரியானதா? சிந்திக்கும் போது ஒரு உண்மை நமக்கு உணர்கிறது நாம் ஈட்டும் பணம் யாருக்காக என்பதை நாம் மறக்கிறோம்,  மனிதர்கள் உறவுகளை கூட மறந்து பணத்தில் பின்னல் செல்கிறார்கள் என்பது யாருக்கும் புரிவதில்ல இந்த நிலை என்பது இப்போது வந்தது இல்லை தொடக்க காலம் தொட்டே இருந்து வருகிறது. அதன் வீட்சு இப்போது அதிகரித்து விட்டது,அப்படி அதிகரித்து விட்ட இந்த நிலை பணம் நம்மை ஆள்வதற்கு தொடக்கி விட்டதா? பணத்திற்காக மனித உயிர்களை பறிப்பது  என்பது இன்றைக்கு சாதாரணமாகிவிட்டது. ஒரு அரசாங்கத்தினால் கூட ஒரு மனிதனின் உயிரை பறிக்க கூடாது என்று வாதிடுகிறார்கள் ஆனால் இந்த பணம் கொண்டே அவ்வாறு செய்து விடமுடியும் என்ற ஒரு வெட்ககேடான நிலையின்நூடே தான் நாம் நாம் இந்த பணத்தேடலில் விரைந்து செல்கின்றோம்.பணத்தாசையை அதிகபடுத்துவது நம்முடைய வாழ்கை முறையில் வந்து விட்ட ஆசை பற்றுதான் காரணம். பணம் பண்ணுவது ஒரு கட்டுக்குள் இல்லை என்றால் வாழ்வு நிலை சிதறிப்போகும் இதை எல்லோரும் உணர்ந்திருந்தும் நடைமுறைபடுத்துவதில்லை அது நடைமுறைக்கு வரும் போதுதான் நிமதியான ஒரு வழக்கை கிடைக்கும் அதுவரை போராட்டம் தான்.