கேரளமாநில அட்டபடி கிராம தமிழர்களின் நிலை என்ன

கேரளா மாநில எல்லையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள  அட்டப்பாடி  என்ற கிராமத்தில் வசிக்கின்ற தமிழர்களை உடனடியாக காலி செய்யும் படி கேரளா அரசாங்கம் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகிறது. இது நீண்ட கால பிரச்சனையாக இருந்தாலும் இப்போது அங்கே கால காலமாக  குடி இருக்கின்ற தமிழர்களை விரட்டுவதில் கேரளா அரசாங்கம் குறியாக இருக்கிறது என்பது நமக்கு தெளிவாகிறது. கேரளா அரசாங்கத்தினுடைய அனைத்து ஆவணங்களும் வைத்திருந்தும் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகலும்படி கேரளா அரசாங்கம் சொல்லுகிறது என்றால் அதனுடைய நோக்கத்தை புரிந்து கொண்டு தமிழர்கள் உடனடியாக செயல்பட தொடங்க வேண்டும்.தமிழ் தேசியம்  பேசுபவர்கலானாலும்   திராவிடம் பேசுபவர்கலானாலும்  குரல் கொடுக்க வேண்டும் இதனை வளரவிட்டு விட்டு போராடாமல் முளைக்கும் போதே எதிர்ப்பை வலுவாக்கிட வேண்டும். தமிழ் நாட்டில் இருக்கின்ற பிற மாநிலத்தவர்களை கட்டுக்குள் வைத்தாலே தமிழன் வெளியே எங்கும் சென்று பொருள் இட்ட தேவை இல்லை.இங்கே இருக்கும் உள்ளூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டி போராடவேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கி விடாதீர்கள் அட்டப்பாடி கிராம தமிழர்களுக்கு நாம் கொடுக்க கூடிய அதரவு நம்முடைய வலிமையை காட்ட கூடியதாக இருக்க வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரத்தை பெற்றுதரகூடியதாக மாறவேண்டும் தேன்கூட்டில் கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை ஊர் அறிய செய்ய வேண்டும்.உளூரில் இருக்கும் பொருளீட்டும் வாய்ப்பை எல்லாம்  மாற்றான்களுக்கு தந்து விட்டு வெறுமனே வீதியில் திரிகின்ற நிலையை மாற்றவேண்டும் அதற்க்கு இது ஒரு முன் முயற்சியாக  இருக்கவேண்டும்.