அண்ணா ஹசாரே டு அரவிந்த் கேஜ்ரிவால்

எதையும் சரி தவறு  இதனால் பிறர் பாதிக்க படுவார்களே என்று கொஞ்சமும் வெட்கபடாமல்  யாருடைய உழைப்பையாவது நாம் எடுத்து, நாம் நம்முடைய வாழ்கையில் கொண்ட குறிக்கோளை அடைய வேண்டும் என்பதைத்தான் அண்ணா ஹசாரே அவர்களால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் கேஜ்ரிவால். மக்களிடம் கருத்து கேட்பு, இது மக்களுக்கான கட்சி என்று, ஆட்டை எடுத்து குட்டியில் போட்டு குட்டியை எடுத்து  ஆட்டில் போட்டு ,யாருடனும் கூட்டணி இல்லை என்று குழப்பி இன்று டெல்லி யில்  முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். இது அரவிந்த் கெஜ்ரிவால்  என்ற மனிதருக்கு கிடைத்ததா, இல்லை இதற்க்கு முந்தைய ஆட்சியின் மீது மக்கள் கொண்ட கோபத்தின் விழைவா என்று பார்ப்பதை விட அண்ணா ஹசாரேவிற்கு கிடைத்த ஆதரவை தனதாக்கி கொண்டு தன் வழியை சரியான திட்டமிடுதலின் படி தனதாக்கி கொண்டதன் பலன்தான் இப்போது அரவிந்த் கேஜ்ரிவால் கிடைத்த முதர்வர் என்னும் பம்பர் பரிசு.அடுத்தவரின் உழைப்பில் கிடைத்த ஆதரவை வைத்து தான் இந்த பதவி என்பதை மறந்து தான் ஒரு கை தேர்ந்த அரசியல் வாதி என்பதை இவர் நிருபித்து விட்டார்.நல்ல சமயமாக குழப்பத்தை எதையும் உருவாக்காமல் ஆட்சியை அமைத்து விட்டார்.இதற்க்கு  வழிவகை செய்து கொடுத்த அண்ணா அவர்களுக்குதான் கேஜ்ரிவால் மற்றும் அவர்களின் கூட்டம் நன்றி சொல்ல வேண்டும். அடுத்தவரின் உழப்பை தனதாக்கி கொள்வது என்பது இங்கே ஒன்றும் புதிதில்லை தெடரட்டும் கேஜ்ரிவாலின் பணி