பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஆண்களின் நிலை

பெண்கள் சுமத்தும் குற்றசாட்டுகள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுகொள்ளுவது நியாயமானதா. மகளீர்காவல் நிலையத்தில் பெண்கள் கொடுக்கின்ற தன்னுடைய கணவன் மீது மற்றும் அவரை சார்ந்த கணவனின் தந்தை மீதும் இவர்கள் கொடுக்கின்ற புகார்களை  பார்த்தோமேயானால் மிகவும் தரம் தாழ்த்து இருப்பதை காணமுடிகிறது. இதை போல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற ஐயப்பாடும் நமக்கு எழுகிறது, என்கணவன் அவரின் தாயாருடன் ஒரு அறையில் தனியாக இருந்ததாகவும் அதை நான் பார்த்ததாகவும் சொல்லுவதும், இன்னும் பல அபாண்டமான குற்றசாட்டுகள் பல இருக்கின்றன,இதைபோல் பெண்களின் குற்றசாட்டுக்கு உள்ளாகும் ஆண்கள் பல பேர்  இந்த சமுதாயத்தை நேர்கொண்டு காணமுடியாமல் தவிக்கிறார்கள் தங்களையே அழித்து கொண்டுவிடுகிறார்கள்.பெண்களுக்கு பாதுகாப்பிற்காக இயற்றிய சட்டங்கள் இன்று ஆண்களை மிரட்டுவதற்காக பயன்படுவது  போல்தான் தெரிகிறது. என்னை என்னுடைய மாமனார் தவறாக செயலுக்கு அழைகிறார் என்கின்ற போது அதில் இருக்கும் உண்மை எதுவாக இருக்கிறது என்று புரிவதற்குள் இந்த சமுதாயம் அந்த மாமனாரை நார் நாராக கிழித்து விடுகிறது காரணம் முதன்மை  செய்திக்கு தான்  முக்கியத்துவம் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம் வழக்கு முடிந்தபின் மாமனார் நல்லவராக இருந்தாலும் அதை யாரும் கண்டுகொல்லுவது இல்லை  அவருக்கு சமுதாயத்தில் கிடைப்பது அவப்பெயர்தான்.சில நேரங்களில் பெண் குற்றம் சாட்டும் குடும்பமே தற்கொலை செய்து கொண்டு தங்களின் நியாயத்தை சமுதாயத்திற்கு உணர்த்த நினைத்தாலும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் அவர்களுக்கு அவப்பெயர் கிடைகிறது. மகளீர் காவல் நிலையத்தில் ஒரு பெண் சென்று புகார் கொடுத்தால் அங்கே ஒரு ஆணுக்கு நடக்கும் நிகழ்வை நினைத்து கூட பார்க்கமுடியாது.இங்கே பெண்களுக்கு மட்டும் தான் கொடுமைகள் நடப்பதாக நமக்கு அறிய தருகிறார்கள் ஆனால் வெளியே சொல்லமுடியாத பல மன அழுத்தத்தில் தான் ஆண்கள் பல பேர் இந்த உலகில்  வாழ்த்து கொண்டிருக்கிறார்கள்.குடும்பம் நல்லநிலைக்கு வருவதானால் அதில் பங்கு பெறுவதற்கு அனைவரும் வருவார்கள் ஆனால் அதே நேரம் நேர் எதிமறை நிகழ்வாக இருந்தால் அது ஆணைதான் சாரும். அணுக்கும் ஓர் மனம் இருக்கிறது என்று இங்கே யாரும் நினைப்பதில்லை பெண் புகார் கொடுத்து விட்டாலே  அவர்களுக்கு சார்பு நிலை எடுப்பதற்காகவே பல அமைப்புகள் இருக்கின்றது அனால் ஒரு ஆணின் சார்பு நிலையை எடுப்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் இயல்புநிலை இந்த பெண் சாதக சட்டத்தை முழுவதுமாக ஆகற்றவேண்டியது இல்லை.பெண்கள் கொடுக்கும் புகார்களின் உண்மைத்தன்மையை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். காரணம் இது வெறும் காகித சட்டம் மட்டுமல்ல பல  ஆண்டுகாலம் காத்துவருகின்ற நம்முடைய பாரம்பரிய கலாசாரமும் அதில் கலந்திருக்கிறது ரத்தத்தோடு கலந்து விட்ட இத்தகைய நிகழ்வுகளில் குடும்பம் என்ற சங்கிலி தொடரும் அடங்கி இருக்கிறது எனவேதான் வெள்ளை காகிதத்தில் எழுதித்தரும் ஒரு  புகாரை மட்டுமே வைத்து கொண்டு அந்த பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சிதைத்துவிடும் செயல்களை செய்வதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. கொடுக்கும் புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை தேவையான ஒன்றுதான் ஆனால் அதையே தங்களின் சுயலாபத்திற்காக செயல் படுத்தும் பட்சத்தில் பாதிக்கபடுவது ஆண்சார்த்த குடும்பம் தான். பெண் புரட்சி பெண்ணாகி விடுகிறாள். உணர்சிவயப்படுவதை விட்டு சிறிது நிதானமாக செயல் படுவது நல்லது . அது நல்ல பெண்ணிய எதிர்காலத்தை உருவாக்கும்.