தமிழருவி மணியனின் ப.ஜ.க பாசம்

காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவரும் காமராஜ் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான மதிப்பிற்குரிய தமிழருவிமணியன்  அவர்கள் பா.ஜ.க.ஆட்சி வரவேண்டும் என்று விருப்புகிறார் என்பதை விட காங்கிரஸ் பழி தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக தமிழகத்தில் ப.ஜ.க  க்கு  கூட்டணியை அமைத்து தரும் முயற்சியில் இறங்கி  இருக்கிறார். தமிழகத்தில் கரைந்து கொண்டிருக்கும் வாக்கு வங்கியை பெற்ற ம.தி.மு.க வையும், இம்போதுதான் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்கி வளர்த்துவரும் தே.மு.தி.க வையும் ப.ஜ.க. கூட்டணியில் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்.ஏன் தமிழருவிமணியன் ப.ஜ.க.வை ஆதரிக்கிறார் என்றால். அவருக்கு காங்கிரசை  பிடிக்காமல் போனதிற்கு காரணம், இவர் ஒரு முன்னாள் காங்கிரஸ் கட்சி தொண்டர் என்பது தான். இந்த முன்னாள் என்ற ஒரு காரணம் போதாதா இவருக்கு காங்கிரஸ் கட்சி பிடிக்காமல் போனதற்கு. தன்னை மதிக்காத கட்சியை எப்பாடுபட்டாவது யாருடன் சேர்ந்தாவது  மண்ணை கவ்வ வைத்து விடவேண்டும் என்ற  கொள்கை பிடிப்போடுதான்  இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இன்றைக்கு  இவர் கொண்டிருக்கும் இயக்கத்தின்  கொள்கைக்கு கொஞ்சமும்  ஒத்துவராத ப.ஜ.க என்ற கட்சியை இவர் ஆதரிக்கிறார்.பெரியார் உலவிய தமிழகத்தில் வெற்றிக்கனியை பறித்துதர துடிக்கிறார்.