இந்தியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்க படுவது முறையா
நம் இந்தியாவில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்க படுவது நடைமுறை சாத்தியமா, இது நிச்சயமாக எதிர்விளைவைத்தான் உருவாக்கும்.வாக்களிப்பதில் மட்டும் தான் வாக்காளர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.அதையும் பாதிக்கும் வகையில் இதை போல் ஒரு சட்டம் வரும் பட்சத்தில் நம் வாக்கை யார் யாருக்கும் அளித்தால் என்ன நம்வாக்கை அளித்ததற்கான ஒப்புகை சீட்டு நம்மிடம் கொடுத்தால் போதும் என்ற மனநிலக்குதான் இந்த சட்டம் வாக்காளர்களை கொண்டு செல்லுமே தவிர பெரிய தொரு மாற்றத்தை கொண்டுவந்து விடாது.நம் முடைய வாக்காளர்கள் தொழில் முறையாக அவர்களுடைய பிறந்த சொந்த ஊர்களை விட்டு வெளியே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் அளிப்பதற்கு நாம் என்ன வசதிகள் செய்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்க வேண்டும். தேர்தல் நடைபெறும் நாள்களில் விடுமுறை மட்டும் அளித்து விட்டு வாக்களிப்பது கட்டயமாக்கப்பட்டால் விளைவுகள் வேருமதிரியகத்தான் இருக்கும்.சென்னையை பிறப்பிடமாக கொண்ட ஒருவர் தலைநகரம் டெல்லியில் பணிபுரிந்தால் அவர் வாக்களிக்க சென்னைக்குத்தான் வரவேண்டி இருக்கிறது இது சாத்தியமா என்று பார்க்கவேண்டும்.இதைப்போல் இல்லாமல் அவர்களின் வசிப்பிடத்திலேயே வாக்களிக்க கூடிய வசதியை ஏற்படுத்தி தந்துவிட்டால் வாக்களிக்கும் சதவிகிதம் தானாகவே அதிகரிக்கும் தனியாக எந்த சட்ட மாற்றங்களும் தேவைபடாது