கேரளத்துகாரருக்கு சொந்தமான கப்பல் ஆவணமில்லாமல் ஆயுதத்துடன் தூத்துக்குடியில்

தூத்துக்குடி துறை முகத்தில் அனுமதி இல்லாமல் கடலில் நின்றிருந்த கப்பலில் ஆயுதங்கள் இருந்ததாக கப்பலின் உழியர்கள்   கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் இந்தியாவை சேர்தவர்களும்  அடக்கம்.
இந்த ஆயுதம் தாங்கி வந்த கப்பலின் உரிமையாளரும் ஒரு இந்தியர்தான் கேரளமநிலத்தை சேர்த்தவர் என்று தெரிகிறது. அதிலும் இதில் பிடிபட்ட ஆயுதங்கள் தனிமனிதர்கள் உபயோகிக்க கூடியது   அல்ல என்றும் அது ஒரு அரசாங்கம் வைத்துகொள்ள கூடியதுமான அறிதான ஆயுதங்கள் என்றும் தெரியவருகிறது.அத்தகைய அறிதான ஆயுதங்களை தாங்கிய கப்பல் நம்முடைய கடல் எல்லையில் எந்த விதமான முறையான ஆவணக்களும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருந்திருக்கிறது அதற்க்கான எரிபொருளும் கரையில் இருந்தே எடுத்து செல்ல பட்டதாக கூறப்படுகிறது.இது ஒரு ஆயுதகடத்தலுக்கான முயற்சி என்ற ஒற்றை வரியில் இதை புறம் தள்ளி விட முடியாது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவதற்கு முன் கேரளாவின் கொச்சின் துறைமுகத்தில் கப்பலில் எந்த  ஆயுதங்கள் இல்லை என்ற  சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.கப்பலுக்கான ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் தான் அவர்களுக்கு ஆயுதங்கள் இல்லை என்றசான்றிதழ் வழங்கப்பட்டதா அப்படிஎன்றால் இப்போது அந்த ஆவணங்கள் எங்கே போயின. இந்த கப்பல் எங்கிருந்து எங்கே செல்லுவதற்க்கான அனுமதியை பெற்றிருக்கிறது. இந்த கப்பல் எதற்க்காக, யாரை எதிர்பார்த்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது என்பது போன்ற சந்தேக கேள்விகள் பல எழுகின்றது. இந்த கப்பல் பாது காப்பு பணிக்காக வந்ததாக இருந்தால் எந்த கப்பலின்  பதுகாபிற்க்காக வந்தது என்றும் அந்த பாதுகாக்கப்படவேண்டிய கப்பல் எங்கே போனது போன்ற கேள்விகள் எழுகின்றான். இன்று அந்த கப்பலுடைய பாதுகாப்பு தலைமை அதிகாரி இலங்கையில் தங்கி இருந்ததாக ஒரு செய்திகள் உடகங்களில் உலா வருகிறது. இலங்கை என்றால் தான் தமிழகத்தில் உணர்ச்சியை தூண்டமுடியும் என்பதற்காகவா   இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும். கொச்சின் துறை முகத்தில் தவறுகள் நடக்கவில்லை என்பதை உறுதிபடுத்துவதற்காக இப்படி ஒரு செய்திகள் கசிகின்றனவா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் உள்ள தமிழர்கள்  அதிக கவனத்துடன்  விழிப்புணர்வுடனும்  இருக்கவேண்டியதன் அவசியத்தை தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.