பணம் வேண்டும் நமக்கும் கிடைக்கும் சிரத்தை இருந்தால்

பணம் வேண்டாம் என்று எந்த மனிதனும் கூறுவதில்லை. அந்த அளவிற்கு பணத்திற்கு வாழ்கையில் முக்கியத்துவம் உண்டு. அது வெறும் காகிதம் தான் இருந்தாலும் அதை மிதித்து விட்டால் அதை தொட்டு வணங்கும் பழக்கம் நம்மில் நிறைய நபர்களுக்கு உண்டு  நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் காரணமாகத்தான் இது நடக்கிறது.பணம் வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் அதை தக்கவைத்து கொல்லுவதற்காக எதையும் செய்வதில்லை .இதிலிருந்து நமது வாழ்கையில் பணம்  என்பது முக்கிய பங்கு வகிக்கிறது எனவே நாம் பணத்தேவையை எப்படி பூர்த்திசெய்வது.சாதாரணமாக நாம் யாரும் நமது மாத வருவாய்  எவ்வளவு என்று கணக்கிடுவதில்லை,அதை போல் எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற கணக்கையும் நாம் செய்வதில்லை, மாத சம்பளத்தை பெற்றவுடன் மனம் போன போக்கில் செலவு செய்வதுதும் மத கடைசியில் பண தேவைக்காக சிந்திப்பதும் வாடிக்கையான ஒன்று.வருவாய் எவ்வளவு என்று சரியாக கணிக்க தெரிந்து கொள்ளுவதுதான் பணம் பண்ணுவதற்கு  மிக முக்கியம், அதை விட  முக்கியமான ஒன்று  நம்முடைய செலவு கணக்கு. போகிறபோக்கில் வாழ்துவிட்டு போவதல்ல வாழ்கை.நம் வாழ்வில் நம்முடன் இருந்த எத்தனையோ நபர்கள்.நம்மை விட்டு வெற்றிபடிகட்டுகளில் ஏறி முன்னேறி கொண்டிருப்பதை தினமும் நினைத்துபாற்பதுண்டு அவர்களை ஏளனம் செய்யாதீர்கள் நம்மிடம் இல்லாதது பண்பு அவர்களிடம் என்ன அதிகபடியாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வேண்டியதை தயங்காமல் எடுத்து கொள்ளுங்கள்.  ஆனால் ஏன் சிலர் மட்டும் அந்த படிக்கட்டுகளில் ஏற மறுக்கிறார்கள்.காரணம் பிறரை குறை கூறுவதனால்தான். வாழ்கையில்  முதலில் நாம் தவிர்க்க வேண்டியது.தகுதிக்கு மீறிய செலவுகளையும்,பகட்டான வழக்கை முறையும் தான்.நாம் உண்டரவேண்டியது நமக்கு தேவையான வாழ்கை முறை எது  என்பதை  அதை புரிந்து கொண்டு அதற்க்கு தேவையானவற்றை சிரமமாக இருந்தாலும் கடைபிடிக்கவேண்டும்.போலியான தகுதியை நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்கள்,அந்த கற்பனை போர்வையை போர்த்திக்கொண்டு வளம் வராதீர்கள் அது ஆபத்தானது உங்களை வளரவிடாது. உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உங்களை எந்த அளவுகோலில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாலே உங்களின் வெற்றிபயணம் ஏன் தடை படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் பணத்தை குறிவைத்தே சிலர் உங்களிடம் பழகுவார்கள் அவர்களை சமாளிப்பதே பெரிய சவாலாக எடுத்துகொண்டு செயல் படவேண்டும் இது தான் நீங்கள் பணம் பண்ணுவதற்கான முதல் படி.அவசர காலத்தில் பிறருக்கு உதவுவது தவறல்ல ஆனால் நீங்கள் உதவி செய்யும் நபரின் நிலைத்தன்மையை பொருத்தும்  உங்களுடைய வாழ்க்கை முறையை பொருத்தும் தான் நம்முடைய உதவி இருக்கவேண்டும்.வாழ்கையில் பணம் வருவதற்கான வழியாக இறந்தால் அந்த பாதையில்  உடனடியாக பயன்பட தயாராகுங்கள், நம்மிடம் இருந்து பணம் செல்வதாக இருந்தால் ஆயிரம் முறை சிந்தித்து செயல் படவேண்டும்.நம்முடைய வழக்கை தரம் உயர்வதற்கு இது மிக மிக முக்கியம்.உங்களிடம் இருக்கும் பணம் தான் உங்களின் மன அமைதியின் ஒரு அங்கம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.உங்கள் கையில் இருந்து பணம் செல்லுவதற்கு காலவரையறை மிக குறைவு, நீங்கள் செலவு செய்த பணத்தை பெறுவதற்கு செலவிடும் காலவரையறை மிக அதிகம் என்பதை மனதளவில் பாடமாக்க வேண்டும்.நாம் இப்போதுள்ள வருவாய் எப்போதும் நமக்கு கிடைக்கும் என்ற அசட்டையான நம்மிக்கையை தவிர்க்க வேண்டும் .சேமிப்பை வார்ப்பதும் அதை முறையாக பராமரிப்பதும் பணம் செய்வதற்கான வழி என்பது உங்களுக்கு தெரியும் ஆனாலும் அதை பெரும்பாலானவர்கள் சரியாக செய்வது இல்லை.நம்மில் பல நபர்களுக்கு வங்கி கணக்கே இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் அதை சரியாக பாராமரிப்பவர்கள் மிகவும் குறைவு.  வங்கி கணக்கு துவங்கி அதை பராமரிப்பது என்பதே சேமிப்பில் மிக பெரிய கலை. அந்த கலையை சரிவரகற்றுக்கொள்ள வேண்டும்.  சேமிப்பதில் முடிந்தவரை பிடிவாதமாக இருங்கள்.பிடிவாதமான சேமிப்பு தான் உங்களை வாழ்கையில் வளர்வதற்கு உதவும்.தேவை இல்லாத செலவு சதவிகிதத்தை புறிந்து கொள்ளுங்கள் அதனை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.மேலும் நாம் சிந்திக்க வேண்டியது ஒன்று அது கடன் வாங்குவது, அவசியம் இல்லாமல் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அவசியத்துடன் கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவேண்டும்.ஒவ்வருமதம் நீங்கள் செய்த தேவை இல்லாத செலவுகளை நீங்களே பட்டியல் இட்டு பார்க்க வேண்டும் அது  எந்த எந்த சந்தர்பத்தில் நிகழ்தவை என்று பார்த்து அதை போல் ஒரு சந்தர்பத்தை தவிர்க்கவேண்டும்.உங்களுக்கு நீங்களே கதாநாயகனாக பிறரிடம் காட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டாம்,அது உங்களை மிக பெரிய  பாதாளத்தில் தள்ளிவிடும். அவர்களாகவே உங்களை ஏற்றுகொள்ளும் வரை பொறுத்திருங்கள் அது உங்களை உயர்த்திக்கொள்ளும்.அதுதான் உண்மையான வளர்ச்சி அது உங்களை அறியாமலேயே நடந்துவிடும்..