பாக்கெட்டில் வருவது பால் தானா

நாம் உபயோகிக்கின்ற பக்கெட் பால் கலப்படமற்றதாக சுத்தமானதாக இருக்கிறதா என்றால் இல்லை.பால் கெட்டுபோகாமல் இருப்பதற்காக உடலுக்கு தீங்குவிளைவிக்கின்ற வேதியியல் பொருள்களை அதனுடன் சேர்த்து அதை பாதுகாத்து கொள்கிறார்கள்.இது மட்டுமல்லாமல் பாலுடைய வென்மைதன்மையை அதிகரித்து  கொளுவதர்க்காக தேவை இல்லாத மனித உடலுக்கு முற்றிலும் ஒவ்வாத வேதி பொருள்களை கலந்து விற்பனைக்கு வருகிறது. இந்த பாலை குழந்தைகளும் அருந்துவார்கள் என்ற உணர்வு இல்லாமல் மனசாட்சியை மறந்து வெறும் பணத்துக்காகவே இத்தகைய முறையில் இந்த பாக்கெட் பாலை இவர்கள் விற்பனைக்கு அனுப்புவதாக நமக்கு தெரியவரும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. உணவு பொருள்களில் கலப்படம் என்றாலே தர்மத்தின் முன் மனிக்கமுடியாத ஒரு குற்றம் அதிலும் குழந்தைகள் அருந்தகூடிய பாலில் நோய்களை பரப்பக்கூடிய வேதி பொருள் கலப்படம் என்பது எந்த கோணத்திலும் மன்னிக்கமுடியாத குற்றம். சமீபகாலமாக கலப்படம் செய்தவர்கள் கைது செய்ததாக எந்த செய்திகளும் வருவதில்லை ஒருவேளை கலப்படம்  செய்வது குற்றம் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதா, தேவை இல்லாத செய்திகளை தேவைக்கு அதிகாமாகவே வெளியிடும் இந்த பத்திரிக்கைகள் இதை போன்ற சில செய்திகளை வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்தை காத்துக்கொள்ள கூடாதா. மக்களும் பால் உபயோகத்தை குறைத்து கொள்ள வேண்டும், வாரத்திற்கு ஒருநாளாவது பால் உபயோகத்தை நிறுத்தி கொள்ளவது நல்லது