இலங்கை பொதுநலவாய மாநாடும் இந்திய போராட்டமும்

பொதுநலவாய மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்றும், இந்தியாவின் சார்பில் சல்மான் குர்ஷித் கலத்துகொளுவதாக அறிவித்தாகிவிட்டது.இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என்று பலர் தமிழ்நாட்டில் போராட்டத்தின் காரணமாகவும் தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களின் அழுத்தம் காரணமாகவும், அரசியல் சூழ்நிலையை மனதில் கொண்டும்,ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.இந்தியா பிரதமர் கலந்து கொள்ளாமல் போனதால் எந்தவிதமான அழுத்தமோ மாறாக எந்தவிதமான தீர்வோ கிடைத்து விடாது,யாருக்குமே எந்த லாபமோ நஷ்டமோ கிடையாது.இந்த மாநாட்டு பற்றிய  விவாதங்கள், போராட்டங்கள் எல்லாம் மாநாடு முடிந்த கொஞ்ச நாட்களில் அதன் சுவடுகள் தெரியாமல் மறைந்து போகும்.பின் மீண்டும் ஒரு சூழ்நிலை வரும்வரை யாருமே ஈழத் தமிழர்களை நினைப்பதே கிடையாது.இங்கே நடந்துவருகின்ற ஈழ ஆதரவு போராட்டங்கள் எல்லாமே ஒரு தீர்வை நோக்கி செல்லவில்லை. இந்த போராட்டங்கள் எல்லாமே தற்காலிக தீர்விர்கானதகத்தான் இருக்கின்றன.அதிலேயே திருப்பதி அடைகின்ற வகையில்தான் இந்த போராட்டகாரர்களும் இருக்கிறார்கள். பொதுநலவாய மாநாடு இலங்கையில்தான் நடைபெறும் என்பதை அறிவித்துடனேயே அதில் உடன்பாடு இல்லாதவர்கள் அங்கே நடத்தாமல் இருப்பதற்காக என்ன வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிந்து அதை செய்வதற்கு முன்வராதது வருத்தம் அளிக்கிறது ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறது.ஈழ சம்பத்தப்பட்ட போராட்டத்தில் எப்போதுமே மாணவர்கள் ஈடுபாட்டுடன் போராடவருகிறார்கள்.நம் போராட்டங்கள்  அதன் தீர்வை நோக்கி நம்மை வழிநடத்தும் தலைவர்கள் எடுத்து செல்கிறார்களா என்று என்றுமே  சிந்தித்ததில்லை.மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என்ற ஒற்றை குறிகோளுடன்  போராட்டங்கள் மங்கிவிடுகின்றன.எந்த வித போராட்டத்தையும் அதன் முடிவுரை எழுதும் வரை எடுத்து செல்வது தான் போராட்ட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு அதை  வழி நடத்துபவர்களுக்கு நன்மையை பயக்கும்.போராட்டத்தை சரியான வழியில் நடத்தி வேண்டும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் தேவையில்லாத உணர்சியூட்டல்கள் தனிமனித விரோதங்கள்  தவிர்த்து உண்மையிலே நல்ல தீர்வை நோக்கி மட்டும் செயல்ப்படுமாயின் போராட்டத்தின் நோக்கத்தின்  வெற்றி நம்மை நோக்கி வரும். மாறாக சுய லாப நோக்கிருந்தால் வெற்றி சிதறிவிடும் வெறும்  போராட்டமே மிஞ்சும்.