மங்கள்யான் இந்தியாவின் பெருமையா

மங்கள்யான் வெற்றிகரமாக் விண்ணில் பறந்தது ஆசியாவிலேயே முந்திக்கொண்டு இந்தியா செய்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக  முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் மூளையில் உருவானது இந்த விண்கலத்தை பறக்க விட்டிருக்கிறது .இதை பலர் எதிர்த்தாலும், சீன பத்திரிக்கைகள் ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் 450 கோடியை இது போன்று செலவு செய்தது சரி இல்லை என்று சீன பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருக்கிறது,செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி தோல்வியுற்ற  சீனாதான் இந்த செய்தியை பரப்புகிறது இதுபோல் நிகழ்வை பார்த்துதான் நம் முனோர்கள் சொன்னார்கள்  ஆடுனனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்று. இதை வைத்து கொண்டு இகேயும் பலர் இதை எதிர்க்கிறார்கள் வீணான செலவு என்கிறார்கள்.தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் இந்தியாவிற்கு பயன் படவேண்டும் என்று நினைத்து இந்தியாவிலேயே தங்கிவிட்ட விஞ்ஞானிகளுக்கு ஊக்கத்தை  கொடுப்பதற்காக இதைபோல் செய்வது மிகநன்று நிச்சயமாக நமவர்கள் சாதிப்ப்பார்கள்.நாமே நம்மை நம்பாவிட்டால் வேறு யார் செய்வார்கள். நல்லவேளையாக இந்த எதிர்ப்பு பெரிய விளைவுகள் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.மங்கள்யான் நம் தேசத்திற்கு பெருமையே ஏற்படுத்துகிறதோ இல்லையோ நாம் நம்ம்மவர்களுக்கு நாம் பெருமை சேர்ப்போம்.