பெங்களூர் ஏ டி எம் கொள்ளையும் அரசின் நடவடிக்கையும்

பெங்களூர் ஏ டி எம் ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.இந்தனை சுலபமாக ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றும் அளவிற்கு நாடு ஒரு மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றால்.அதன் நீட்சியாக  பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக கூறி  250 திற்கும்    மேல்பட்ட மையங்களை மூடியது இது மிகவும் கொடுமையான ஒரு நிகழ்வு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அதை சரியாக செய்வதற்கான வழிமுறைகளை நடவடிக்கைகளை துரிதபடுத்தவேண்டுமே தவிர இதைமோல் ஏ டி எம் மையங்களை மூடுவதன் மூலமாக சாதாரண பொது மக்களுக்கு தொல்லை கொடுப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.இது எப்படி இருக்கிறது என்று பார்த்தல் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல் உள்ளது.வீடு புகுந்து மனிதர்களை தாக்கி விட்டு தினம் ஒரு கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது அதற்காக வீடுகளே இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.மூடிய ஏ டி எம் மையங்கள் இது வரை பாதுகாப்பாக இல்லாமல் இருந்தது என்பதை அவர்கள் ஒத்து கொள்ளுகிறார்களா ஆம் என்றால்.அங்கே வைத்திருக்கும் பணத்தை பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லையா அல்லது வேறு காரணங்களா? இதுவரை இவர்கள் அசட்டையாக இருப்பதற்கு என்ன காரணம் அதை கவனிக்க கூடிய அலுவலர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.இந்த மையங்களை பாடுகாப்பதற்க்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு அமைப்புகள் செயல் படுகின்றனவா அல்லது அவர்களின் மாத வருவாயை பெற்றுக்கொண்டு பாதுகாப்பு அலுவலர்களை பனியாமர்த்துவது இல்லையா? ஒரு நிகழ்வு நடந்தவுடன் வேகம் காட்டுவதும், பிறகு எப்போதும் போல் அசட்டையாக இருப்பதும் நம் நாட்டில் சர்வசாதாரணமாகி விட்டது.இந்த நிலை என்று மாறும் காலத்தில் கையில்தான் இருக்கிறது.மனித உயிர் இன்று மதிப்பில்லாமல் போய் விட்டது என்பது தான்  இதைபோல் சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. கேவலம் பணத்திற்கு கொடுக்கும் மரியாதை கூட மனிதர்களுக்கு சமுதாயத்தில் இல்லை என்பதன் ஒரு பகுதிதான் இதை போன்ற கொலை கொள்ளை சம்பவங்கள்.