தமிழ் மொழி

மாநில மொழிகளை படிக்க, எழுத  தெரிந்தால்தான், மாநில அரசாங்க வேலை என்ற முடிவை எடுத்தாகவேண்டிய சூழ்நிலையில் நம் அரசு இருக்கிறது. தாய் மொழியை காக்கவேண்டிய முழு பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.எத்தனையோ முன்னோர்களின் கடினமான அர்பனிப்பிர்க்கு பின் நம்முடைய மொழி பல ஆண்டுகள் கழித்தும் தலை நிமிர்ந்து நிற்கிறது வழக்கு மொழியாகவும் பேசும் மொழியாகவும் திகழ்கிறது.இன்று மொழி பற்று என்பது பேச்சளவில் கூட நம்மிடையே இல்லை பின் எப்படி உணர்வு பூர்வமாக நாம் அதை சிந்திக்க போகிறோம்.நம்மில் உள்ள இந்த மொழி ஆர்வம் சிதைந்து போனதற்கு காரணம். நம்முடைய மாநிலத்திலேயே நம்மொழி படித்தவர்களுக்கு  எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்க வில்லை என்பதுதான்.அது வேலை கிடைப்பதாக இருந்தாலும்,வேறு எதுவாக  இருந்தாலும் நம் மொழி பேசி எந்த பயனும் இல்லை என்ற உணர்வை நம்முடைய அரசாங்கங்கள்களும் அதனுடே கூடிய இந்த வெகுஜன முற்போக்கு வாதிகளும் ஏற்படுத்திவிட்டனர்.மற்ற மாநிலங்களில் அவர்களுடைய மொழிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு அங்கீகாரம் நம் தமிழ் நாட்டில் நாம் கொடுப்பதில்லை மாறாக அதை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருக்கிறோம். இதைபோல்லுள்ள அனைத்து இடையுருகளையும் தாண்டித்தான் தமிழ் தன்னை பாதுகாத்து வருகிறது.தமிழர்களை தமிழ் மொழி துரோகிகாளாக ஆகக்கூடிய ஒரு துணிவு நம்முடைய மாநிலத்தில்தான் முடியும்.சுயநலம் சாராமல் வீடு மறந்து நம் மொழிக்காக பயணப்பட்டவர்கள் பல ஆயிரம் பேர் அவர்களின் ஆன்மாக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவாவது நம் நடந்து கொள்ளவேண்டாமா.நம் தாயையும் தாய் பாசத்தையும் எப்படி இன்று விவாத பொருலாக்குகிறோமோ  அதை போல்  தான்  இந்த தாய் மொழியையும் நாம் விவாத பொருளாகுகிறோம்.குறைகள் இருப்பினும் அதை நிவர்த்தி செய்ய வழிதேடாமல் நம் மொழியை நாமே குறைத்து பேசித்தான் நம்முடைய  நடுநிலையை  நாம் வளர்க்க வேண்டுமா.நம் மாநிலத்தில் உள்ள பல அன்பர்கள் இன்று தமிழ் மொழிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் யாரும் மொழியால் உணர்வால் தமிழர்கள் அல்ல அவர்களின் தாய் மொழி வேறு பிழைப்பு மொழிதான் தமிழ் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.நம் தாயை மறந்தாலும் நம்முடைய தாய் மொழியை நாடி நரம்பெல்லாம் உணர்வாக நிரப்பி  நமாக்காக கசங்காமல் நசுங்காமல் தெள்ள தெளிவாக நமக்களித்து சென்றார்கள் நம் முனோர்கள்  நம் வரும்கால சந்ததியினருக்கு அதை போல் ஒரு தெளிவான மொழியை நம் மொழி என்று நாம் வழங்கி செல்ல போகிறோமா இல்லை மொழியில்ல இனம் என்ற பழியை விட்டு செல்ல போகிறோமா.உணர்ந்து செயல் படுங்கள் தமிழர்களே நம்மிடம் உள்ள பிறமொழிகலப்பை தவிர்ப்போம் மொழியை காத்து வரும் கால சந்ததியினருக்கு அளிப்போம் என்ற உறுதிமொழியை செயல் பாட்டிற்கு  கொண்டுவருவோம் .