தாய் அன்புக்கு சாட்சி

ஒரு தனியார் தொலைக்காட்சி  நடத்திய போட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஆட்டிசம் என்ற ஒருவகையான மனநோயால் பதிக்க பட்ட 16 வயது மகனை கலந்துகொள்வதர்க்காக அழைத்து வந்திருந்தார்   காட்பாடியை சேர்ந்த  இந்த்ராணி என்ற தாய்.தன் மகன் மீது கொண்டிருந்த  பாசமும் மகனை எப்படியாவது நல்நிலைக்கு உருவாக்கிவிடவேண்டும் என்ற வைராக்கியமும் அந்த  தாயிடம் பார்க்க முடிந்தது. இந்தகைய பாசத்தையும் இத்தகைய உணர்ச்சியையும் தாய் அல்லாத ஒருவரிடமும் நாம் பார்க்க முடியாது என்பது உண்மை. மகன் எந்த நிலையில் இருந்தாலும் தாய்க்கு அவன் மகன்தான்.அந்த தாய் அந்த மகனை 16 வருடங்கள் வளர்பதற்கு  எந்தகைய துன்பங்களை தாங்கி இருப்பார்  அதைவிட  இந்த சமுதாயத்தின் குத்தும் பார்வையை உள்வாங்கி  இருப்பார் என்பதை  நாம் உணரவேண்டும்.இத்தகைய குறைபாடுள்ள ஒரு மனிதனை தன்னுடன் அனைத்து அரவணைத்து செல்வதற்கு தாய் என்ற உறவால் மட்டுமே முடியும்.நிச்சயம் அவர் உற்றார் உறவினர்கள் இந்தகைய மகனை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்துவிடவேண்டும் என்ற வேண்டாத ஆலோசனையை வழங்கி இருப்பார்கள்.அதை தவிர்த்துதான் கடந்த 16 வருடமாக தான் பெற்ற அந்த மகனை தன்னுடன் வைத்திருந்து அந்த குறைபாடை போக்குவதற்காக அன்பு என்னும் வைத்தியத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.திருப்பதி சென்ற பொது ஒருமுறை மகனை வழி தவறவிட்டு விட்டதாகவும் இரண்டு நாட்கள் கழித்து தேடி கண்டுபிடித்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லும்போது நிச்சயம் இப்படி மனநிலை உள்ள ஒரு மனிதனை தவறவிட்டு விட்டு மீண்டும் தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்ற மன நிலை ஒரு தாயை தவிர வேறுயாருக்கும் வராது. தாய் பாசம், தாய் அன்பு என்பதற்கு இந்த காட்பாடியை சேர்த்த இந்துராணி போன்றவர்கள் இன்னமும் சாட்சியாக இருக்கிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் காதலன் தரும் போலி சுகத்திற்க்காக சுற்றித்திரிந்து, குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசி திரியும் பெண்கள் அதிகரித்து விட்ட இந்த கால கட்டத்தில் தாய் அன்பு தாய் பாசம் தாய்மை என்பதெல்லாம் எழுத்தால் யாருக்கும் புரியவைத்து விட  முடியாது  அது உணர்தலின் மூலம் தெரிந்து கொள்ள  கூடிய ஒரு  விஷயம்.வெற்று உடம்பில் ஆண்மை கலந்து கருத்தரித்து குழந்தையை ஜனித்தால் மட்டுமல்ல தாய்.தாய் என்ற சொல்லுக்கு வெறும் குழந்தை பிறப்பு மட்டுமல்ல பொருள் அதையும் தாண்டி ஆயிரம் செய்கைகளும் ஆயிரம் அர்த்தங்களும் பொதிந்ததுதான்  அந்த சொல்.ஒரு பெண் தாய்மையை வெறும் உடல் சம்பாத்த பட்டதாக எண்ணிவிடவேண்டாம் அது உள்ளம் சம்பத்தபட்ட்டது,உயிர் சம்பத்தபட்டது என்பதை உள்வாங்கி உணரவேண்டும்.இந்த காட்பாடி இந்த்ராணியை போல் ஆயரம் ஆயரம் இந்த்ராணி என்ற தாய்மார்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.தாயை போற்றுவோம் தாய்மையை காப்போம்.