தாய் என்ற சொல்

தாய் என்ற ஈரெழுத்து சொல், உச்சரிக்கும்போதே தமக்குள்ள ஒரு அன்பு சுரப்பதை ஒவ்வருவரும் உணர்வார்கள்.தாய் என்பவள் தன்னலம் உணராதவள் உணர்சிவயபடாதவள் நம்மை பிரசவிப்பதால் அவளும் ஒரு கடவுள் தான்.இந்த பிரசவத்தை வெறும் காமமாக பார்க்கும் நான்காம் கட்ட மனநிலைக்கு மனிதன் வந்துவிட்டால் அன்று பிறழ்வுகள் நடக்க துவங்கி விடும். இருக்கும்போது தாயை பெருமையையும்,முக்கியத்துவையும் உணராதவர்கள் அவள் இறந்தபின் அதன் வேதனையை வெளிகாட்டாமல் இருக்க முடியாது.தன்னை மாய்த்து கொண்டு தன்னுடைய பிள்ளைகள் வாழ்கை முன்னேற்றத்தில் வெற்றிபடிகளாய் நின்றவளும்,அனல் வீசும் வழக்கை சூழலை தான் வாங்கிகொண்டு குளிர்காற்றை தன் சிசுக்களுக்கு கொடுத்து இமயமாய் வளர்ந்த தாயும் உண்டு. தாய் பாசம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லஉயிரினத்திற்கும் இருக்கிறது என்பதற்கு நம் நடை முறை வாழ்க்கையில் நாம் கண்ட பல காட்சிகளே உதாரணம் .தாய் பாசம் என்பது பெண்ணிடத்தில் மட்டுமல்ல ஆணிடத்திலும் சுரக்ககூடிய ஒரு அற்புத நிகழ்வு.ஒரு சிசுவை பிரசவிப்பதை மூலம் தான் தாய் பாசம் ஆணிடம் இருந்து ஒரு நூலிழை உயர்ந்து பெண் இருக்கிறாகள் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியில் தாய் பாசம் என்பது தாய்மை என்பதும் கேள்விகுறியாகிவிட்டது.தாயிடம் பாசத்தை காட்டுவதற்காக ஒருதினத்தை தேர்தெடுத்த அன்றே நாம் வார்த்தையால் சொல்லமுடியாத இந்த தாய் அன்பை கேலி கூத்தாகிவிட்டோம்.தாய் அன்பு என்பது நமது நினைவுகளை இருந்து அழிக்கமுடியாத ஒன்று அதை நினைத்து பார்க்க ஒருதினத்தை நாம் தெரிவுசெய்ய வேண்டுமா என்ன. அவளை மறந்தவர்கள் நினைப்பதர்க்குதான் இந்த நினைவு தினங்கள் அதன் தொடர்பாகவரும் அனைத்து நிகழ்வுகளும் ஆனால் என்றும் என்னுடன் ரத்தமும் சதையுமாக இருக்கும் அந்த உயிருடன் உலவும் பாசத்திற்கு இதல்லாம் தேவையில்லை. நம்மை ஈன்றபோது அவள் பெற்ற வலியை நாம் மறப்போமா,நாம்மையும் அறியாமல் நம்முள் சுரப்பதுதான் தாயின் மீதான பாசம் நம்மையும் மீறி நம் கட்டுக்கு அடங்காத சில உணர்சிகள் போல்தான் இந்த தாய் பாசம்.எதையும் எதிபார்க்கும் அன்பு அல்ல இந்த தாய் அன்பு அதை விவரிப்பது கடினம் உணர்வதுதான் சுலபம்.அதை ஒருமுறை உணர்ந்தால் அதன் உண்மை புரியும். தாயின் அன்பை உணருங்கள் தாய்மையை போற்றுங்கள்.