ஆசிரியர் தினம் யாருக்கு..?

ஆசிரியர் தினம் அய்யா சர்வபள்ளி திரு ராதாகிருஷ்ணனின் அவர்களின் பிறந்த  நாளைதான் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.ஒரு தலை சிறந்த ஆசிரியரின் பிறந்த தினத்தைத்தான்  நாம் ஆசிரியர் தினமாககொண்டிருக்கிறோம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் மறக்க முடியாத சில ஆசிரியர்கள் நிச்சயமாக இருப்பார்கள்.நாம் இந்த நிலைக்கு, அது உயர்ததோ,குறைத்தோ, வர காரணம் இவர்களின் பங்கு அதிகமாகும்.நம் குணங்கள் நம்முடைய பெற்றோரின் சார்த்து என்றாலும் இந்த ஆசிரியரின் சதவிகிதமும்  அதில் கலந்திருக்கிறது இருக்கிறது.என்பது முற்றிலும் உண்மை. நமக்கு கிடைக்கின்ற ஆசிரியர்கள் எப்படியோ அதை கொண்டுதான் நம்முடைய அறியுதிறன் சுய ஒழுக்கம் முதலிய பண்புகள் நம்மை வந்தடைகின்றது
ஆசிரியர் பணி என்பது ஊதியத்திர்க்காக மட்டுமே செய்யகூடிய ஒரு பணி அல்ல  அது ஒரு அர்பணிப்பு செய்ய வேண்டிய ஒரு பணி. கல்வியை கற்றுகொடுக்க  மட்டுமல்ல அதையும் தாண்டி உயிரோட்டமுள்ள ஒரு மனிதனை உருவாக்கவேண்டிய ஒரு சிற்ப்பியாக இருக்கவேண்டிய ஒரு பணி.இதை உணர்ந்தது திறம்பட செயலாற்றுபவர்கல்தான் உண்மையான ஆசிரியர்கள்.வகுப்பரைகளில்தான் வருங்கால தூண்கள் உருவாக்கபடுகிறது.அதனால் ஆசிரியர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை நிசயமாக துறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்.வெறும் ஆசிரியர் பயிற்சியினை முடித்தால் போதுமானதா,மனப்பயிற்சிதான்  தேவை மாணவர்களின் அறிவு விசாலமாக்குவதர்க்கு இவர்களின் பங்கு மிகவும் பெரிது அதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்
இந்த  ஆசிரியர் தினம் மாணவர்கள் அறிந்து கொள்ளுவதை விட ஆசிரியர்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.உங்களை இந்த உலகம் கல்வி கண்திறக்கும் கடவுளாக பார்க்கிறது அது உன்பைதான் என்பதை நீங்கள் தான் செய்து காட்டவேண்டும்.