உடை கட்டு பாடும் அரசாங்க சட்டமும்

கல்லூரியில் பயில்பவர்களுக்கு உடையில் கட்டுபாடுகள் கொண்டுவருவதற்கான சட்டத்தை அரசாங்கம் கொண்டுவத்திருக்கிறது.இதை எதிர்பவர்களும் உண்டு, ஆதரிப்பவர்களும் உண்டு.ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் மாணவ,மாணவியர்தான் பொது ஜனத்தில் சிலர் இருக்கிறார்கள்.பதினெட்டு வயதானால் ஒட்டு போடுவதற்கு உரிமை இருக்குப் போது அவர்கள் சுயமாக உடையுடுத்தி கொள்ள உரிமை  இல்லையா என்றும், பெண்களை ஏன்  இன்னமும் போக பொருளாக பார்கிறீர்கள்? அவர்களை நீங்கள் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்று விளக்கம் கொடுத்தாலும்.

பொதுவாக பார்க்கும்போது ஒற்ற ஜீன்களின் தொடர்பில்லாத பிற பெண்ணின் சில உறுப்புக்களை  ஆண்  பார்க்கும் நேர்ந்தால் தானாகவே உணர்ச்சி அவனுடைய உடம்பில் வருகிறது வரவேண்டும் என்பதுதான் இயற்கையின் படைப்பு.அவ்வாறு வரவில்லை என்றால்.பாலுணர்வில் ஏதோ குறைபாடு  இருக்கிறது என்று பொருள்.கம உணர்சிகளை மற்ற உணர்சிகள் போல் தன்வய படுத்தி கட்டுக்குள் வைப்பது கடினம் அப்படி வைத்தால் அது முற்றும் துறந்த துறவி நிலை .ஒரு பெண் பாதி மார்பகங்கள் தெரியும் அளவிற்கு ஆடை அணித்து வந்து அது என்னுடைய உரிமை என்கிறார்கள்,மார்பகம் என்பது இயற்கையின் படைப்பில் ஆணிற்கு  காம உணர்சியை தூண்டக்கூடிய ஒரு பெண் அவயம் அதை  பார்த்தால் ஆண்  உணர்சிவயப்படுவது இயற்க்கை, அதை பார்த்தாலும் ஆண்களின் மனது கெட கூடாது என்பது என்ன நியாயம்.மனதை கட்டு படுத்துவதை விட மார்பகத்தை மறைப்பது சுலபம் என்பதை புரித்து கொள்ள வேண்டும்.உடை என்பதே நம் உடம்பில் உணர்ச்சியை தூண்டக்கொடிய அவயத்தை மறைப்பதற்காகத்தான் என்பதை அறிந்து  கொண்டு உடைஉடுத்துவது நன்று .
மாணவ மாணவியருக்கு உடையில் கட்டுப்பாடு என்பது எப்போது வருகிறது என்றால் உடையில் நாகரீக தன்மை குறைத்து அலங்கோலங்கள் அதிகரிக்கும்  போதுதான் கட்டுபாடுகள் வருகிறது.இப்போது அப்படி ஒரு சூழல் நிலவுவதால் இந்த கட்டுப்பாடு தேவையான ஒன்று.
இது மட்டுமல்லாமல்,எந்த பள்ளியில் படித்தாலும் பள்ளி மாணவர்களுக்கு என்று ஒரே நிறத்திலான உடையும்,கல்லூரி மாணவர்களுக்கு என்று ஒரு நிறத்திலானால உடையும் கொண்டு வரும் பட்சத்தில் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்பில்லை.உடை என்பது மனம் சம்பாத்த பட்டது பள்ளி உடையில் மாணவன் இருக்கும் போது அவனின் மனநிலைக்கும் பிற உடையில் வரும் போது அவனின் மனநிலையும் நிச்சயமாக வித்தியாசப்படும்.