உதவி........ ஒத்தாசை.........

மனிதன் தன சக மனிதனுக்கு ஒத்தாசை உடன் வாழ்வதுதான் உதவி.உதவியில் பலவகை உண்டு,பொருள்,பணம்  கொடுத்து வாழ்கையை சீர்படுத்த  உதவுவது,தமக்கு தெரியாத ஒரு செயலை நமக்கு படிப்பித்து உதவுவது,உடலுறுப்புகளை கொடுத்து உதவுவது.இன்னும் இதைபோல் பல எந்த உதவியாக இருந்தாலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே அதை செயல் படுத்த முடியும்.
 இன்று நாம் வழும் சூழலில் உறவினர்கள் நண்பர்கள் என்று சொல்லுபவர்கள்  கூட உதவி செய்வதற்கு முன் வருவதில்லை.அதனால் வரும் பின்விளைவை எண்ணி மறுத்து விடுவார்கள்.தன் உறவினர்கள், நண்பர்களின்  முக வாட்டத்தை பார்த்து உதவிய காலங்கள் இன்று இல்லை.
நமக்கு உதவி தேவை என்ற சூழலில் நமக்கிருக்கும் மனநிலை,உதவும் நிலையில் இருக்கும் போது  பெரும் பாலோனோருக்கு இருப்பதில்லை.இதிலிருந்து ஒரு சிலருக்கு விலக்கு உண்டு. உருகி உருகி பழகும் நண்பர்களானாலும்,உறவினர்களானாலும் கூட உதவி என்று வரும் பொது தங்களுடைய நிஜ முகத்தை காட்டிவிடுகிறார்கள்.உலகம் இதைபோல் இருக்க தங்களை வருத்தி கொண்டு உதவும் நல்  உள்ளங்களும் இப்புவியில் இருக்கத்தான் செய்கிறார்கள் அது மிக மிக குறைந்த சதவிகிதத்தில்தான் இருக்கிறது.மனிதநேயம்  மனிதாபிமானம் போன்ற நல்ல குணங்கள் இன்றைக்கு மனதளவில் மட்டுமே பேசப்படும் செயல் பாட்டில் வருவது என்பது மிகமிக குறைவு.இதைபோல் ஒரு பண்பாட்டை வளர்த்து கொண்டால் வரும்  காலம், நம்முடைய எதிகால சந்ததியின் வழக்கை முறை மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகவேண்டியதுதான் அதில் நம்முடைய ரத்த உறவுகளும்  அடங்கும்.
எதையும் கொடுக்காவிட்டாலும் பிறர் மனம் புண்படும் படி நடக்காவண்ணம் வாழ்வதே இப்போது பிறருக்கு நாம் செய்யும் பெரிய உதவி